Author: பதாகை

நவீனத்துவம், மாயம், புனைபடுதல் – 3

(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுவதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம்)

இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதி இப்படி முடிந்திருந்தது:-

Fin de siècle இயக்கத்தின்போதும் அதன் பிற்பாடும் புனைபடுதல் எண்ணற்ற வகைகளில் வெளிப்பாடு கண்டது. இவற்றுள் அழகியல் பார்வையை முதலில் சொல்ல வேண்டும், இனிமேற்கொண்டு கலையின் பணி வாழ்வை போலி செய்வது மட்டுமல்ல என்று இந்த இயக்கத்தினர் பிரகடனம் செய்தனர்- இனி வாழ்வே கலையின் போலியாகிறது.

இதன்பின், மனித ஒழுக்கத்தை மேம்படுத்தும் இலக்கியப் படைப்புகள் என்று சமய நூல்கள் ,,மறுவரையறை செய்யப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டு துவங்கிற்று- மாத்யூ ஆர்னால்டு, 1873ஆம் ஆண்டு, தன் Literature and Dogma என்ற நூலில் இந்தப் பார்வைக்கு மிகச் சிறப்பான வடிவம் அளித்தார்.

சமயங்களைப் புனைவாய் வடிவமைப்பது எந்த அளவுக்கு வெற்றி பெற்றதென்றால், இருபதாம் நூற்றாண்டு பிறக்கும்போது, தெய்வ நம்பிக்கை கொண்ட கிருத்துவர்களான டோல்கீன், சி.எஸ். லூயிஸ் போன்றவர்கள், அனைத்து புனைவும் சமயசார்பு கொண்டவையே என்று மறுவரையறை செய்ய வேண்டியதாயிற்று. எழுத்தாளர்கள், ஆண்டவனைப் பின்பற்றும் உப-படைப்பாளிகள். (more…)

இருமொழிக் கவிதை- புழக்கடையில் பனி/ Backyard Snow

நகுல்வசன்

புழக்கடையில் பனி:

1

இரவெல்லாம் பனி .
நினைவின் எச்சமாக ஆங்காங்கே,
கிளைகளில் இலைகள்
இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கும்
வசந்தத்தின் கனவை அழித்த பெருமிதத்தில்,
குளிர்காலம் எழுப்புகிறது
தன் கண்ணாடி சாம்ராஜ்யத்தை.
அதன் சுவர்களில் காலம் அழகு பார்க்கையில்
பளிங்கு பிரதிபலிக்கிறது
வயோதிகத்தின் வாடிய வதனத்தை.

2

வெளி ஒளிர்கிறது.
இலைகளற்ற கிளைகளின் மீது, தொடர்ச்சியாக,
பௌதிக விதிகளை நினைவுகூர்ந்து,
நேர்த்தியுடன் தன்னை சமன் செய்து கொண்டிருந்தது
பனி.
ஊரில் டீபிராஸ்ட் செய்ய மறந்திட்ட
அப்பாவின் பழைய கெல்வினேடர் குளிர்சாதனப் பெட்டியில்,
இப்படித் தான், நீண்டு உறைந்திருக்கும்,
பனி.
ஓவல்டின்னை ப்ரீசரில் உறைய வைத்து
தங்கையும் நானும் ஐஸ்க்ரீமாக
அலுப்பில்லாமல் அனுபவித்தது
காலத்தின் கண்ணாடியில் ஒரு கணம் மிளிர்கிறது.
தேனீர் கோப்பையின் ஆவி அதை அழிக்க,
ஜன்னல் கண்ணாடியில் பனியின் பின்புலத்துடன்
அப்பாவின் வயதான முகம் தோன்றி மறைகிறது.

ooOoo (more…)

தீவிர இலக்கியம் ஓர் ஆன்மிக அனுபவம் -கேன் ஷூவே

(Can Xue எழுதிய “The Fair-haired Princess” and Serious Literature என்ற கட்டுரையை Karen Gernant, Chen Zeping ஆகிய இருவரும் Words Without Borders என்ற தளத்தில் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளனர். அதன் தமிழ் வடிவம் இது)

அப்பாவின் புத்தக அலமாரிகளில் பெருமளவு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் புத்தகங்கள் நிறைந்திருக்கும். அடுக்கப்பட்ட புத்தகங்களின் பக்கவாட்டு அட்டைகளில் பொறிக்கப்பட்டிருந்த சில தலைப்புகள் நினைவிருக்கின்றன. புரிந்துகொள்ளக் கடினமாக இருந்த சில தலைப்புகளை மறந்து விட்டேன். தினமும் அப்பாவின் புத்தக அலமாரியைச் சுற்றி வந்து கொண்டிருப்பேன். அப்போது ஒருநாள் திடீரென்று லைப்ரரியிலிருந்து சில ஃபேரி டேல்களை அப்பா வீட்டுக்குக் கொண்டு வந்தார் (அவர் அப்போது நூலக வேலைக்கு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்தார்- “உழைப்பு வழி மறுகல்வி” என்று இது அழைக்கப்பட்டது). என் அக்கா படிப்பதற்காக அவர் இந்தப் புத்தகங்களை எடுத்து வந்தார். அவள் அப்போது ப்ரைமரி ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தாள், நிறைய சொற்களை அறிந்திருந்தாள். அவர் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் ஒன்றுதான், “பொற்சிகை இளவரசி” (ராபுன்ஸல்). அப்பா புத்தகத்தின் பெயரை ஒரு முறைதான் சொன்னார், ஆனால் எனக்கு அது மறக்க முடியாததாகிவிட்டது. புத்தகத்தின் அட்டையை ஒரு இளவரசியின் படம் அலங்கரித்தது, அவளது பொன்னிற தலைமுடி, கணுக்கால்வரை நீண்டிருந்தது. நான் அந்தப் படத்தை விரிந்த கண்களுடன் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு அழகிய மஞ்சள் வண்ண முடி யாருக்கு இருக்க முடியும்? அந்தப் பொன்னிற முடியின் ஒரு கற்றையாவது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்! (more…)

கல் விழுங்கிய நாரை

ஸ்ரீதர் நாராயணன்
cranes

“காதலில் இருந்த இரண்டு நாரைகளில் ஒன்றை மட்டும் கொன்றுபோட்ட வேடனே! நீ நாசமாகப் போக”

கோபத்துடன் சீறியது நான்தானா என்று ஆச்சரியமாக இருந்தது. இது என் குரல்தானா? என்னாலே நம்பமுடியவில்லை. மனம் உருவாக்கும் சொற்களெல்லாம் உருக்கொண்டு வெளிவராமல் கரைந்து காணாமல் போய்க் வெகுகாலம் ஆகியிருந்தது. கடைசியாக எப்போது பேசுவதற்கு முயன்றேன் என்றே நினைவில்லை. இன்பத்தில் முயங்கிக் கொண்டிருந்த நாரை ஜோடியை மதிமயங்கி எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேனோ, அந்த அம்பு பறந்து வந்து தாக்கியதை முதலில் கவனிக்கவில்லை.

மரக்கிளையில் ஒரு நொடி தடுமாறிய நாரை சுற்றி சுழன்று கீழே ‘தட்’ என பாறைக்கு அப்பால் போய் விழுந்ததும், அற்புதமான கனவு கலைந்து போன அதிர்ச்சியில் விதிர்விதித்துப் போனேன். உடனே பாய்ந்துபோய் பாறைக்கு பின்னால் விழுந்த பறவையை இருகைகளாலும் பற்றி தூக்கிக் கொண்டு திரும்பிப்பார்த்தால். அங்கே அவன் நின்றுகொண்டிருந்தான். அவன் நிறத்தையும், ஆளையும் பார்த்தாலே தெரிகிறது வேடன் என்று. போதாக்குறைக்கு கையில் ஆளுயரத்துக்கு வில் வேறு.

நாரை அடிபட்டதைவிட அதன் மோனநிலை கலைந்துவிட்டதுதான் மிக துயரமாக இருந்தது. துயரெல்லாம் சினமாக அவன் மேல் குவிய கடுஞ்சொற்கள் உருவெடுத்து வெளிக்கொட்டிவிட்டது. (more…)