Author: பதாகை

“நாவலில் காலம் ஒரு பாத்திரம்” – லோரி மோர் நேர்முகத்தின் சில பகுதிகள்

Anagrams, Who Will Run the Frog Hospital?, A Gate at the Stairs என்று மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார் லோரி மோர். இவரது சிறுகதைகள் Self Help, Like Life, Birds of America, Bark என்று நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டிருகின்றன. இவை தவிர புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி பற்றி ந்யூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது நாஷ்வில்லில் உள்ள வான்டர்பில்ட் யுனிவர்ஸிட்டியில் புனைவெழுத்துக் கலை கற்பிக்கிறார்.

யுவர் ஹிட்டன் செல்ஃப் என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்ட நேர்முகத்தின் சில பகுதிகள் இங்கு தமிழாக்கம் செய்து அளிக்கப்படுகின்றன. நேர்முகம் கண்டவர் – டீர்ட்ரி

நீங்கள் இந்தக் கதைகளை எழுதுவதற்கான உந்துதல் என்ன?

எனக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. உண்மையில் இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வந்தன. நபகோவ் கதையைப் பொருத்தவரை, மீண்டும் “Signs and Symbols” வாசித்தேன். ஆசிரியையாக ஒவ்வொரு மறுவருடமும் நான் அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. இப்போது திடீரென்று நான் அதில் வெவ்வேறு பல விஷயங்களை கவனித்தேன். அதைத் தொடர்ந்து என் மனதில் ஒரு கதை நிழலாடத் துவங்கிற்று. ரே கார்வார் கதைக்கு நாதன் இங்க்லாண்டர் இதைச் செய்தது எனக்கு உந்துதல் அளித்திருக்கலாம். கார்வர் கதைக்கு நெருக்கமான நிழலாக இல்லாத ஒரு கதையை அவர் எழுதினார். நான் எந்தக் கதையைச் சொல்கிறேன் என்று தெரிகிறதா? (more…)

புனைவு வாசிப்பின் இடைவெளிகள் – சில அடிப்படை அணுகல் குறிப்புகள்

பொதுவாக ஒரு கதையோ கவிதையோ படிக்கும்போது அதைப் பற்றி நாம என்ன நினைக்கிறோம் என்பது மூன்று விஷயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன: பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை, புரிகிறது/ புரியவில்லை, இதையெல்லாம் எழுதலாம்/ எழுதக்கூடாது. இது மூன்றையும் முறையே அகவெதிர்வினை, அறிவெதிர்வினை, அறவெதிர்வினை (emotional response, intellectual response, moral response) என்று சொல்லலாம்.

மூவகைப்பட்ட எதிர்வினைகளும் நம் அனைவருக்கும் சாத்தியமாக இருந்தாலும், நம்மில் பெரும்பாலனவர்கள் இவற்றில் ஏதோ ஒரு இடத்தில் நின்றுவிடுகிறோம். எனக்கு ஒரு கதை பிடிக்கவில்லை என்றால் அது குறித்து என்ன சொன்னாலும், அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போல் எனக்குப் புரியாத கதையைப் பற்றி எத்தனை விளக்கம் கொடுத்தலும் அதை ஏற்றுக் கொள்ள என் மனம் ஒப்பாது. வன்முறை, காமம், சில அரசியல் சார்புகள் எனக்குப் பிடிக்காவிட்டால் அதைப் பற்றி எழுதப்பட்டவை எவ்வளவு அறிவார்ந்து இருந்தாலும், அவற்றில் உணர்வுகள் எவ்வளவு மெய்ம்மையுடன் வெளிப்பட்டிருந்தாலும் என்னால் அவற்றை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள முடியாது. (more…)

உச்சத்தில் ஒரு கதவு: லோரி மோரின் A Gate at the Stairs

– அஜய் ஆர். – 

லோரி மோர் (Lorrie Moore) எழுதிய ‘A Gate at the Stairs’ நாவலின் ஆரம்ப பகுதியில், நாவலின் கதைசொல்லி டாஸி (Tassie), தன் சொந்த ஊருக்குச் செல்கிறார். தன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கும் தன் தம்பி ராபர்ட்டுடனான தன் உறவைப் பற்றி சொல்லும்போது, “in fact when I thought back to our many years together, he was, essentially, always nice to me,.. ” என்று முடிக்கிறார். ‘essentially’ , ‘nice’ என்ற இரு வார்த்தைகள்தான் இந்த வரியில் முக்கியம், பல ஆண்டு உறவின் சாரத்தை இந்த இரு வார்த்தைகளில் தந்து விடுகிறார். ஒருவருக்கொருவர் அதீத அன்போ, வெறுப்போ, போட்டி பொறமையோ (sibling rivalry) கொண்டுள்ளார்கள் என்றெல்லாம் சொல்லாமல், யதார்த்த அக்கா/ தம்பி உறவைச் சுட்டி செல்கிறார். முகத்திலறையும் சொற்விளையாட்டோ, புத்திசாலித்தனமோ இல்லாமல், வாசகனின் கவனத்திற்கு வர முனையாத உரைநடை நாவலின் முக்கிய அம்சம். பேச்சொலியில் வரும் ஏற்ற இறக்கங்கள், உரையாடலின் இடையே வரும் தயக்கங்கள், மௌனங்கள் மூலம் வாசகனுக்கு தெரிவிக்க வேண்டியதை நுட்பமாக சொல்லிச் செல்வது மோரின் பாணி. (more…)

கவியின் கண் 9 – ‘ஆழம் காண முடியா வாழ்வினுள்ளும்’

– எஸ். சுரேஷ்-

Utopia –  Wislawa Szymborska

Island where all becomes clear.
Solid ground beneath your feet.

The only roads are those that offer access.

Bushes bend beneath the weight of proofs.

The Tree of Valid Supposition grows here
with branches disentangled since time immermorial.

The Tree of Understanding, dazzling staight and simple.
sprouts by the spring called Now I Get It.

The thicker the woods, the vaster the vista:
the Valley of Obviously.

If any doubts arise, the wind dispels them instantly.

Echoes stir unsummoned
and eagerly explain all the secrets of the worlds.

On the right a cave where Meaning lies.

On the left the Lake of Deep Conviction.
Truth breaks from the bottom and bobs to the surface.

Unshakable Confidence towers over the valley.
Its peak offers an excellent view of the Essence of Things.

For all its charms, the island is uninhabited,
and the faint footprints scattered on its beaches
turn without exception to the sea.

As if all you can do here is leave
and plunge, never to return, into the depths.

Into unfathomable life.

By Wislawa Szymborska

From “A large number”, 1976
Translated by S. Baranczak & C. Cavanagh (more…)

இந்தக் கதை குழந்தைகளுக்கு மட்டும்

– எஸ். சுரேஷ்-

கடும் வெயில்
தாகம்
தொண்டை வற்றியிருந்தது

நடந்து அந்த கிணற்றை அடைந்தேன்
கயிறும் இல்லை வாளியும் இல்லை
கீழே பளபளக்கும் குளிர் நீர்

“ஆஆஆஆ” என்று நீரை பார்த்து கத்தினேன்

கிணற்றுக்கருகில் உட்கார்ந்திருந்த காக்கை
பீதியுடன் அங்கிருந்து பறந்தது
சற்று நேரம் கழித்து வாயில் ஒரு கல்லுடன் வந்து
மறுபடியும் கிணற்றுச் சுவர் மேல் உட்கார்ந்து

கல்லை தண்ணீரில் போட்டுவிட்டு
என்னை பார்த்து புருவத்தை உயர்த்தியது