அதிகாரநந்தி

க்ருஹஸ்தன்

அதிகாரநந்தி

”என்னடி இன்னிக்கு உங்கப்பா வராறா?”

“இல்லையே.. ஏன்?”

“இல்ல விடியற போதே எழுந்து உக்காண்டிருக்கையே… கீழ போய்ப் பால் கூட வாங்கியிருக்க போல; இன்னிக்கு அந்தக் கடக்காரன் கேவலமா இளிக்கலையா?”

“இளிச்சான். ஆனா அவ்ளோ கேவலமா இல்லை”

“போகப் போக பழகிடும்”

“ஆம்பிளைங்க எல்லாம் இப்படி வழியாட்டா தான் என்ன?”

“உங்கப்பா கிட்ட போய்க் கேளு” (more…)

எங்கள் கூட்டம்

சாயங்களுக்கு ஏது விலை
கருப்போ
சிவப்போ
காவியோ
பச்சையோ
வேண்டியதை உண்மைகளுக்குப் பூசிவிட்டு
நாமும் ஒன்றைப் பூசிக் கொண்டுவிட்டால்
முடிந்தது வேலை
                                                           – அதிகாரநந்தி

கவிதைகள் வேண்டி…

-அதிகாரநந்தி – 

எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை
அந்தப் பூனையைக் கூட
இன்று காணவில்லை

ஒன்றிரண்டு கரப்பான்பூச்சிகள்
சுற்றிக் கொண்டிருக்கின்றன
இவற்றை வைத்து கவிதை எழுத முடியும்?

துவைக்கும் இயந்திரம் கத்துகிறது
முறுக்கிப் பிழியப்பட்ட துணிகள்
ஒன்றை இழுத்தால் மொத்தமும் வருகிறது

சிக்கல்
வாழ்க்கை
நான்
மற்றவர்கள்

சில சமயங்களில் இப்படித்தான்
ஆகிறது

விசாரம்

நில்லாது தொடர்ந்து
கொண்டேயிருக்கின்றன
கேள்விகள்

மெளனம் நிலைத்துவிடக் கூடாதென்ற
அதீத சிரத்தையுடன்
இடைவெளியின்றி
ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று
 
எந்த பதிலையும் எதிர்பாராது
எந்த சமாதானத்தையும்
லட்சியம் செய்யாது
 
தேய்ந்து போன குழாயிலிருந்து
சொட்டிக் கொண்டேயிருக்கும்
நீரைப் போல்
 
ஆதியில்லை
அந்தம் இல்லை
இலக்குகளும் இல்லை

நீர் வற்றிய குழாய்களுக்கு
என்ன மிச்சமிருக்கும்?
                                            – அதிகாரநந்தி

காலத்தின் முன்னே

 

Stained Glass, Berne, Switzerland,

 

மனிதரின் அன்புக்கு பாத்திரமாக
இருக்க ஆசைப்படாதீர்கள்

அவர்கள் எத்தனை மோசமான
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
என்று குத்திக்காட்டுங்கள்

அவர்களுடைய உழைப்பைத்
திருடிக் கொள்ளுங்கள்
முடியுமானால்
அவர்தம் கரங்களை முறித்துவிடுங்கள்

வருடங்கள் கடந்து சந்திக்கும் போது
உங்கள் அல்ப அதிர்ஷ்டங்களையும்
அவர்களின் புதைக்கப்பட்ட ஆசைகளையும்
நினைவுபடுத்துங்கள்

காலம் வழக்கம் போல்
நம்மிடம் வேறுபாடு காட்டாது
போகட்டும்

நம் நண்பர்கள் தங்கள் பெயர்த்திகளுக்குச்
சொல்லும் கதைகளில் ராக்‌ஷதர்களாய்
எஞ்ஞான்றும் வாழ்வோம்!

–  அதிகாரநந்தி

Image credit : Mememto Mori, Catholic Eye Candy