சிகந்தர்வாசி

ஹௌடாச் சம்பவம்

சிகந்தர்வாசி 

 

எப்பொழுதும் போல் ஹௌராஹ் (பெங்காலியில் ஹௌடா) ஸ்டேஷனுக்கு இரண்டு மணி நேரம் முன்பே வந்து விட்டேன். எப்பொழுது கல்கத்தா சென்றாலும் அங்குள்ளவர் பீதியைக் கிளப்புவார்கள். “ஹௌடா ப்ரிட்ஜி பே ஜாம் ஹோகா” என்று சிலரும், பல மணி நேரம் முன்பே கிளம்பி ட்ரைனை அவர்கள் எப்படி கோட்டை விட்டார்கள் என்று சிலரும் ஒவ்வொரு முறையும் சொல்வதுண்டு. அதனால் நான் எப்பொழுதும் ஹௌடாவுக்கு வரவேண்டும் என்றால் இரண்டு மணி நேரம் முன்பே வந்துவிடுவேன். அப்பொழுது எனக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்கும், ஆனாலும் இந்த விஷயத்தில் மட்டும் ரிஸ்க் எடுக்கமாட்டேன்.

ஸ்டேஷன் வந்ததும் ஒரு அறிவிப்பு காற்றில் பறந்து வந்தது. நான் செல்லவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாக கிளம்பும் என்றும் அது இரண்டாவது பிளாட்பாரத்துக்கு பதில் ஐந்தாம் பிளாட்பாரத்திலிருந்து கிளம்பும் என்றும் அந்த அறிவிப்பு ஹிந்தியில் கூறியது.

எப்பொழுதும் போல் டிவி முன் உட்கார்ந்து கொண்டேன். கல்கத்தா ஸ்டேஷனில் எப்பொழுதும் டிவீயில் கால்பந்து போட்டி எதாவது ஒன்று ஒளிபரப்பிக் கொண்டிருப்பார்கள். அன்று லிவெர்பூல் மற்றும் யுவேண்டஸ் அணிகளுக்கிடையே நடந்த யுரோப்பியன் கப் போட்டியின் மறு ஒலிபரப்பு. அந்தப் போட்டியை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அந்தப் பெண்மணி வந்திருக்க வேண்டும், கவனிக்கவில்லை. (more…)

நாம்பல்லிச் சம்பவம்

சிகந்தர்வாசி 

அமீர்பெட் போக எதுக்கு ட்ரைன்?”

“அமீர்பெட் இல்லப்பா. நாம ஹைதராபாத் போறோம்”

“என்ன பைத்தியம் மாதிரி பேசற ! நாம இருக்கறது ஹைதராபாத்.”

“இல்லப்பா. நாம இப்போ மெட்ராஸ்ல இருக்கோம். பெரியப்பா பேரன் கல்யாணத்துக்கு திருச்சி போனோம். இன்னிக்கி கார்த்தால மெட்ராஸ் வந்தோம். இப்போ ஹைதராபாத் போறோம்”

அவர் குழப்பமாக அவளைப் பார்த்தார். பிறகு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். சற்று நேரத்துக்குப் பிறகு, “இது பேகம்பேட் ஸ்டேஷன் இல்லையோ?”

“இல்லப்பா, இது மெட்ராஸ் சென்ட்ரல்” (more…)

நினைவின் வண்ணங்கள்

சிகந்தர்வாசி 

குழந்தைகள் சிரிக்கும் ஒலி நீல நிறமாக என் காதில் விழுகிறது

ஓடிக்கொண்டிருக்கும் நினைவு நதியில்
ஒரு கூழாங்கல்லைக் கையில் எடுக்கிறேன்
மறந்துவிட்டேன் என்று நான் எண்ணிய முகமொன்று
அதன் மேடு பள்ளங்களில் மலர்கிறது
கூழாங்கல் ஏந்திய கை சில்லிட்டுப் போகிறது

அம்மாக்கள் கத்தும் ஒலி சிவப்பாக இருக்கிறது

அந்த முகம் மறைந்து வேறொரு முகம்
மெதுவாகத் தோன்றுகிறது, ஆனால் தெளிவாக இல்லை
சூரிய ஒளி கல் மேல் விழ அது பளபளக்கிறது
கண் கூசி மூடிய இமைகளுள் முகம் தெளிவாகிறது

மெதுவாக நடந்து செல்லும் முதியவர்களின் குரல் மஞ்சள் நிறம்

எடுத்த கூழாங்கல்லை நதியில் மெதுவாக இடுகிறேன்
மெல்ல அசைந்து அசைந்து தரை தட்டுகிறது
அதன் பளபளப்பு என் கண்களுக்குள் தேங்கி நிற்கிறது

குழந்தைகள் சிரிக்கும் ஒலி நீல நிறமாக என் காதில் விழுகிறது

ஒளிப்பட உதவி- Jean Gregory Evans, Panoramio

டிபென்ஸ் காலனி பூங்காச் சம்பவம் 

சிகந்தர்வாசி 

பெங்களூர் இந்திரா நகர் டிபென்ஸ் காலனி பூங்காவில் தினமும் மாலை நடைபழகுவது என் பழக்கம். அன்று மாலையும் அதுதான் செய்து கொண்டிருந்தேன். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இளையராஜா பாடல்களை கேட்டபடி சிறு கற்கள் பதித்து அமைக்கப்பட்ட டிராக்கை பல முறை சுற்றி வருவேன். கால் மணி நேரம் சுற்றி வந்திருப்பேன், அப்பொழுது பூங்காவிற்கு வெளியிலிருந்து உரக்க பல குரல்கள் கேட்டன. யாரோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மெதுவாக பூங்காவின் இரும்பு சுழற்கதவு பக்கம் வந்து வெளியே பார்த்தேன். ஏழு எட்டு பேர் இருப்பார்கள். அதில் ஒரு இளவயது பெண் இன்னொரு இளவயது பெண்ணைப் பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு நடுத்தர வயது அம்மையார் தமிழில் ஏதோ உரக்கக் கூவிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் வயதான அம்மையார் ஒரு நடுத்தர வயது ஆணுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கத்திக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு பக்கத்தில் ஓர் இளைஞன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் இன்னொரு இளைஞன் தலை குனிந்து நின்றிருந்தான். இவர்கள் யாரும் இந்த காலனிக்காரர்கள் போல் தோன்றவில்லை.

கத்திக்கொண்டிருக்கும் பெண் ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்தாள். சற்று பருமனாக இருந்தாள். மங்கலான பச்சை நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். முகத்தில் வியர்வைத் துளிகள் பிரகாசித்தன. அவளுக்கு நல்ல ‘பேஸ் வாய்ஸ்’ என்று நினைத்துக் கொண்டேன். ரோட்டின் இந்தப் பக்கத்தில் இருந்த பெண்ணைப் பார்த்து கையை ஆட்டி ஆட்டி, “யூ பிட்ச். வாட் டூ யூ திங்க் ஆப் யுவர்ஸெல்ப் ஸ்டூபிட் வுமன்” என்று உரக்க கூச்சலிட்டாள் அவள். (more…)

கயிறு

சிகந்தர்வாசி 

“இப்போதான் எழுந்து பல் தேச்சி வெளியில டீ குடிக்க வந்திருக்கோம்”

“……”

“நேத்தி ராத்திரி ஒரு தரிசனம் ஆச்சு. குளிச்சப்புறம் மறுபடியும் ஒரு தரிசனத்துக்கு போவோம்”

“……”

“எல்லாம் பத்திரமா வருவேன். கவலைப்படாத”

“…..”

“ஆமாம். முதல்லையே சொன்னேனே. மத்தியானம் பஸ். ராத்திரி வந்துடுவேன்”

“அம்மாவா?” என்று கேட்டான் பஜ்ஜி.

“ஆமாம்”

நாங்கள் இருவரும் ஸ்ரீசைலம் வந்திருந்தோம். இளங்காலை நேரம் ஒரு கடையில் டீ சொல்லிவிட்டு பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம். (more…)