சிறுகதை

கயிறு

சிகந்தர்வாசி 

“இப்போதான் எழுந்து பல் தேச்சி வெளியில டீ குடிக்க வந்திருக்கோம்”

“……”

“நேத்தி ராத்திரி ஒரு தரிசனம் ஆச்சு. குளிச்சப்புறம் மறுபடியும் ஒரு தரிசனத்துக்கு போவோம்”

“……”

“எல்லாம் பத்திரமா வருவேன். கவலைப்படாத”

“…..”

“ஆமாம். முதல்லையே சொன்னேனே. மத்தியானம் பஸ். ராத்திரி வந்துடுவேன்”

“அம்மாவா?” என்று கேட்டான் பஜ்ஜி.

“ஆமாம்”

நாங்கள் இருவரும் ஸ்ரீசைலம் வந்திருந்தோம். இளங்காலை நேரம் ஒரு கடையில் டீ சொல்லிவிட்டு பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம். (more…)

கல் விழுங்கிய நாரை

ஸ்ரீதர் நாராயணன்
cranes

“காதலில் இருந்த இரண்டு நாரைகளில் ஒன்றை மட்டும் கொன்றுபோட்ட வேடனே! நீ நாசமாகப் போக”

கோபத்துடன் சீறியது நான்தானா என்று ஆச்சரியமாக இருந்தது. இது என் குரல்தானா? என்னாலே நம்பமுடியவில்லை. மனம் உருவாக்கும் சொற்களெல்லாம் உருக்கொண்டு வெளிவராமல் கரைந்து காணாமல் போய்க் வெகுகாலம் ஆகியிருந்தது. கடைசியாக எப்போது பேசுவதற்கு முயன்றேன் என்றே நினைவில்லை. இன்பத்தில் முயங்கிக் கொண்டிருந்த நாரை ஜோடியை மதிமயங்கி எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேனோ, அந்த அம்பு பறந்து வந்து தாக்கியதை முதலில் கவனிக்கவில்லை.

மரக்கிளையில் ஒரு நொடி தடுமாறிய நாரை சுற்றி சுழன்று கீழே ‘தட்’ என பாறைக்கு அப்பால் போய் விழுந்ததும், அற்புதமான கனவு கலைந்து போன அதிர்ச்சியில் விதிர்விதித்துப் போனேன். உடனே பாய்ந்துபோய் பாறைக்கு பின்னால் விழுந்த பறவையை இருகைகளாலும் பற்றி தூக்கிக் கொண்டு திரும்பிப்பார்த்தால். அங்கே அவன் நின்றுகொண்டிருந்தான். அவன் நிறத்தையும், ஆளையும் பார்த்தாலே தெரிகிறது வேடன் என்று. போதாக்குறைக்கு கையில் ஆளுயரத்துக்கு வில் வேறு.

நாரை அடிபட்டதைவிட அதன் மோனநிலை கலைந்துவிட்டதுதான் மிக துயரமாக இருந்தது. துயரெல்லாம் சினமாக அவன் மேல் குவிய கடுஞ்சொற்கள் உருவெடுத்து வெளிக்கொட்டிவிட்டது. (more…)

வீடு திரும்பும் வழிகள்

(Alejandro Zambra எழுதியுள்ள “Ways of Going Home” என்ற நாவலின் சில பகுதிகள்)

ஹாலில் இருக்கும் புத்தக அலமாரியைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அது நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. “இங்கே லைப்ரரி இருப்பதால் உன் அம்மா படிக்கத் துவங்கி விட்டாள், நானும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உனக்கே தெரியும், எனக்கு சினிமா பார்க்கத்தான் பிடிக்கும்,” என்கிறார் அப்பா. அவர் கிளாடியாவைப் பார்ப்பதில்லை, மிகவும் கண்ணியமாக, கவனமாக நடந்து கொள்கிறார்.

மதியப்பொழுது, நிதானமான உரையாடலில் கழிகிறது- சில குறிப்பிட்ட கணங்களில், அது நாங்கள் குடித்துக் கொண்டிருக்கும் pisco sourகளின் ரிதத்திற்கு ஏற்ற வடிவம் எடுத்துக் கொள்கிறது. நாங்கள் கிளம்பவிருக்கும்போது என் அம்மா இறைச்சித் துண்டங்களையும் உருளைக்கிழங்குகளையும் எடுத்து வந்து டின்னர் செய்ய ஆரம்பிக்கிறாள் – மாற்று உணவாக வெஜிடேரியனும் சமைக்கிறாள்.

அம்மாவின் கேள்விக்கு, “நான் வெஜிடேரியன் அல்ல,” என்று கிளாடியா பதில் சொல்கிறாள்.

“இது வித்தியாசமாக இருக்கிறது, என் பிள்ளை எப்போதும் வெஜிடேரியன்களைதான் விரும்பியிருக்கிறான்,” என்கிறாள் அம்மா. எனக்கு கோபம் வருகிறது, ஆனால் கிளாடியா இயல்பாய், நெருக்கமாய்ச் சிரிக்கிறாள். (more…)

மாடர்ன் லவ் ஸ்டோரி

எஸ். சுரேஷ்

“இன்னிக்கி ராகுல் என்கிட்டே ‘ஐ லவ் யூ ’ சொன்னான்” என்றாள் வர்ஷிதா

“அவனுமா?” என்றேன் நான். “நீ என்ன சொன்ன?”

“சாரி சொன்னேன். ‘உன்ன நான் ரிஜெக்ட் பண்ணல. நீ சொன்னத ரிஜெக்ட் பண்றேன்’ன்னு சொன்னேன்”

“ஆஹா. இவங்க எல்லாரும் சேந்து உன்ன ஒரு தத்துவஞானி ஆக்கிடுவாங்க போல இருக்கு” என்று சொல்லிவிட்டு சிரித்தேன். “இந்த ஆபிஸ் சேர்ந்தப்புறம் இது என்ன மூணாவது பிரபோஸலா? நீ எங்கயோ போற போ”

“சும்மா கிண்டல் பண்ணாதடா. வெறுப்பா இருக்கு. ஒரு ரெண்டு நாள் சிரிச்சு பழகினா போதும் பிரபோஸல்லோட வந்துடறாங்க”

வர்ஷிதாவும் நானும் சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். எங்களுக்குள் காதல் மலராது என்று சொல்லாமலே இருவருக்கும் தெரிந்து விட்டது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவளுக்கு நான்தான் முக்கியமான நண்பன். நடக்கும் எல்லா விஷயங்களையும் என்னிடம் கூறுவாள்.

“சரி விடு. அரசியல்ல இதெல்லாம் சகஜம்தான். வேற என்ன விஷயம்?” (more…)

கை நழுவிய இராணி

கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

queen-missed

உண்மையில் இந்த கதையை நான் எழுதவில்லை. செந்தூரன்தான் எழுதினார். இரண்டாயிரத்து ஒன்பதில் இந்தக் கதையைப் பற்றி முதன்முதலாக நாங்கள் இருவரும் பேசினோம். அப்போது அவர் பத்திரிகையெல்லாம் நடத்திக் கொண்டு தீவிரமான செயல்பாட்டில் இருந்தார். இவர் அமெரிக்காவில் இருந்தபடி எடிட்டிங் பார்த்துக் கொள்ள, சென்னையில் பத்திரிகை பணிகள் நடந்து கொண்டிருந்தன. அச்சு உலகில் ஓரளவுக்கு கவனத்தை பெற்ற மாதாந்திரி பத்திரிகை அது..

‘கதையெல்லாம் நூறு பேரு எழுதறான்…. நீ வேற ஏதாச்சும் கட்டுரை எழுதேன். இங்க நடந்திட்டிருக்கிற செஸ் டோர்னமெண்ட் பத்தி ஒரு ஃபீச்சர் பண்றோம். நீயும் செஸ் பத்தி எழுதேன்’ என்றார். சொன்னது போல ஃபிலடெல்ஃபியாவில் நடந்த CCA டோர்னமெண்ட்டை முன் வைத்து பிரமாதமான கட்டுரைகள் எல்லாம் வந்திருந்தன. கேடா காம்ஸ்கியோட ஒரு நேர்முகம், தமிழகத்தின் லேட்டஸ்ட் கிராண்ட் மாஸ்டர் டி. சந்தோஷ் பற்றி அவருடைய அப்பா எழுதின கட்டுரை, வீடில்லாமல் ஃபிலடெல்ஃபியா ரூஸ்வெல்ட் பார்க்கில் வாழ்க்கை நடத்தும் செஸ் மாஸ்டர் டாம் மர்ஃபி பற்றி ஒரு கட்டுரை என்று பலதும் வந்திருந்தன. (more…)