விமர்சனம்

ப்ரான்க் மக்கோர்ட்டின் (Frank McCourt) நினைவுக்குறிப்பு நூல்கள்

– அஜய் ஆர். –

ப்ரான்க் மக்கோர்ட்டின் (Frank McCourt) நினைவுக்குறிப்பு நூல்களின் ட்ரிலாஜியில் இரண்டாம் நூலான ‘Tisஇன் இறுதியில், ப்ரான்க்கின் தாய் ‘ஆஞ்செலா’ (Angela) இயற்கை எய்தியபின் , அவரை அடக்கம் செய்துவிட்டு ப்ரான்க்கும் அவர் சகோதரர்களும்

“A mother’s love is a blessing
No matter where you roam.
Keep her while you have her,
You’ll miss her when she’s gone

என்ற பாடலை பாடுகிறார்கள். நூல் இப்படி முடிகிறது:

“We had lunch at a pub along the road to Ballinacurra and you’d never know from the way we ate and drank and laughed that we’d scattered our mother who was once a grand dancer at the Wembley Hall and known to one and all for the way she sang a good song, oh, if she could only catch her breath”

‘grand dancer ‘, ‘sang a good song’ போன்ற வார்த்தைகள் இள வயது ஆஞ்செலா குறித்து நம்முள் எழுப்பும் பிம்பத்திற்கும், திருமணத்திற்குப் பின்னாலான அவர் வாழ்வு குறித்து நாம் இந்த நினைவுக்குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்வதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம். நாம் அறிந்த ஆஞ்செலா எத்தகையவர்? (more…)

கவியின் கண் 17 – சாவின் நூற்பு நார்கள்

– எஸ். சுரேஷ் –

சிறிய சதுக்கம்

என் வாழ்க்கை ஒரு சிறு சதுக்கத்தின் வடிவம் பெற்றுவிட்டது
உன் மரணத்துக்கான ஏற்பாடுகள் கவனமாகச் செய்யப்படும் அந்த இலையுதிர்காலம்
நீ நேசித்ததால் நான் அந்தச் சதுக்கத்தைப் பற்றிக் கொண்டிருந்தேன்
சிறிய கடைகளின் அலங்காரமற்ற, பழைய நினைவுகளில் ஆழ்த்தும் மானுடம்
ரிப்பன்களையும் துணிகளையும் மடித்துப் பிரிக்கும் அதன் கடைக்காரர்கள்
நான் நீயாக நினைத்தேன், நீ சாகப் போகிறாய் என்பதால்
அங்கிருந்த என் வாழ்வெல்லாம் எனக்குரியதல்லாது போகும் என்பதால்
நீ சிரிப்பது போல் நான் சிரிக்க முயற்சித்தேன்
செய்தித்தாள் விற்பவனிடமும் சிகரெட் விற்பவனிடமும்
வயலெட்கள் விற்றுக் கொண்டிருக்கும் அந்தக் கால்களற்ற பெண்ணிடமும்
காலற்றவளிடம் உனக்காகப் பிரார்த்திக்கச் சொன்னேன்
அந்தச் சதுக்கத்தின் மூலையில் இருக்கும் சர்ச்சுகளின்
பீடங்கள் அனைத்திலும் மெழுகுவர்த்திகள் ஏற்றினேன்
என் கண்களைத் திறந்ததும் கண்டேன், வாசித்தேன்
உன் முகத்தில் நித்தியத்தின் சேவகம் எழுதப்பட்டிருப்பதை
தெருக்களை அழைத்தேன், இடங்களை, மனிதர்களை,
உன் முகத்தின் சாட்சிகளாக இருந்தவர்கள் அனைவரையும்
உன்னை அழைப்பார்கள் என்று, உன்னை அவிழ்ப்பார்கள் என்று
உன்னைச் சுற்றி சாவு நூற்றுக் கொண்டிருந்த நார்களையும் என்று

சோபியா டி மெல்லோ பிரெய்னர் அன்ட்ரீசன்
போர்ச்சுகீசிய மொழி கவிதையின் ஆங்கில மொழியாக்கம் , ரூத் ஃபெய்ன்லைட் (1994) (more…)

சலாம் குலாமும் சமுதாயச் சீர்த்திருத்தமும் பின்ன சுரேஷும்

(பகடி)

இலவசக் கொத்தனார்

உரைநடைகளின் போதாமைகளைத் தாண்டி நம் அகத்தினைத் தொட்டு, தட்டி எழுப்பி, எழுச்சிகளைக் கொந்தளிக்க வைத்து, நம் பிரக்ஞைகளை உலுக்குவதுதான் நல்ல கவிதை என்றால் சுரேஷின் கவிதைகள் நல்ல கவிதைகள். நல்ல கவிதைகள் படிக்க முடியாத கரடுமுரடு மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற மேற்தட்டு மனப்பான்மையை சுக்குநூறாக தகர்தெறிந்து உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதமான எளிய பாசாங்கற்ற பகடுகளேதுமில்லாத மொழியிலும் கூட நல்ல கவிதையைத் தர முடியும் என்பதற்கான சான்று சுரேஷின் கவிதைகள். மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று வந்த பின்னர் விமர்சனப்பிரதிகளில் கவிதையியல். கோட்பாடு எல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமாகிவிடுகிறது. இருப்பினைப் பற்றியும் உறுப்பினைப் பற்றியும் சமூக குடும்ப நிறுவன வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கங்களையும் மதிப்பீடுகளையும் சிதைத்து அவற்றின் வன்முறைகளுக்கெதிராக குரலெழுப்பி தற்கால மொழிக்கலாச்சாரத்தின் அகப்புற எல்லைகளை மீறி இயங்குவது மட்டுமே நல்ல கவிதை என்ற பொதுப்புத்தியினுக்குள் பொருந்த நினைத்திடாத சராசரி மொழியிலும் மனதுக்கு அந்தரங்கமான மொழியிலும் கூட ஒரு மனிதனின் ஆழ்மனத்துடன் பேசும் உரையாடலை பொதுவிற்குக் கொண்டு வரமுடியும் என்பதில் வெற்றி பெற்று இருக்கிறார் சுரேஷ். (more…)

துருவேறிக் கொண்டிருக்கும் அமெரிக்க சிறுநகரங்களும் அவற்றின் சாதாரணர்களும்

அஜய். ஆர்

சீபால்டின் ‘The Rings Of Saturn’ நூலில், கதைசொல்லி தன் பயணங்களின்போது ஒரு காலத்தில் ஒளிமிக்க சிறு நகரங்களாக இருந்து இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கிக் கொண்டிருக்கும் இடங்களூடே பயணிக்கிறார். பரபரப்பான துறைமுகமாக இருந்து இப்போது அந்த பரபரப்பின் சுவடே இல்லாமல் இருக்கும் ஒரு இடத்தைப் பார்க்கிறார், இன்னொரு இடத்தில் வெறிச்சோடி இருக்கும் உணவகத்தில் உணவருந்தும்போது, சென்ற தலைமுறை உடையணிந்து ஒருவர் பரிமாறுகிறார். இந்த இடங்களும் சரி, அதில் வாழும் மனிதர்களும் சரி காலத்தில் உறைந்துள்ளார்கள். யுவான் ருல்போவின் (Juan Rulfo) ஆக்கங்களிலும் இதைவிட பாழடைந்த, நினைவுகள் ஆவிகளாக உலவும் நிலவெளிகளை பார்க்கலாம். இவை பெரிதும் வெளியாள் ஒருவர் இந்த இடங்களைப் பார்க்கும் கோணத்தில் உள்ளன. இதை கொஞ்சம் மாற்றி, அந்த சிறு நகரங்களில் இருப்பவர்களின் பார்வையில், அவர்களின் வாழ்க்கையைச் சொல்வதுதான் ரிச்சர்ட் ரூஸோ (Richard Russo) தன் ஆக்கங்களுக்காகத் தேர்வுசெய்யும் களன்.

அமெரிக்கா என்றவுடன் ஒளி பொருந்திய நகரங்கள், பணம் கொழிக்கும் சூழல் என்ற பொதுபிம்பத்துக்கு மாறாக, அங்குள்ள வறுமை, இனவெறி, கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களால் விட்டுச் செல்லப்படும் நகரங்கள்/ மக்கள், என அதன் பல்வேறு பக்கங்களைப் பற்றி பல எழுத்தாளர்கள் எழுதி உள்ளார்கள். அவர்களில், ரூஸோ அமெரிக்காவின் சிறு நகரங்களைப் பற்றி எழுதும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். 7 நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதை தொகுப்பை எழுதியுள்ள ரூஸோ ‘Empire Falls’ என்ற நாவலுக்காக புலிட்சர் விருது பெற்றவர். (more…)

இல்லாகிய இல்லறம் – ஆங்கில புனைவுகளில் ‘செயலிழந்த குடும்பங்கள்’ ​ (Dysfunctional families in ​ fiction)

– அஜய் ஆர். –

“Happy families are all alike; every unhappy family is unhappy in its own way”, என்கிறார் தல்ஸ்தோய். குடும்பத்தை, அந்த அமைப்பில் உள்ள சிக்கல்களைப் பற்றிச் சொல்வதற்கு எப்போதும் ஏதேனும் மிச்சமிருப்பதாலதான், ஒப்பீட்டளவில் குடும்பம் சார்ந்த புனைவுகளே பிற வகைப் புனைவுகளைவிட அதிகம் எழுதப்பட்டு வருகின்றன.

‘குடும்ப நாவல்’ என்பதின் வரையறை என்ன? வெகுஜனப் புனைவுகளில் இது எளிய சூத்திரமாக வெளிப்படுகிறது-. நன்றாக வாழ்ந்த குடும்பம் (பணம் இல்லாவிட்டாலும் மனதளவில் நிம்மதியாக), புதிதாக வரும் ஒருவரால், அல்லது புதிதாக ஏற்படும் பழக்கத்தால் சீரழிவது, பிறகு தீயவர் திருந்தி அனைவரும் ஒன்று சேர்வது இந்தப் புனைவுகளின் பாணி (trope). தமிழில், மருமகள் குடும்பத்தைக் கெடுக்கும் கோடரிக்காம்பாக வருவதை (மனைவி பேச்சைக் கேட்டு வயதான பெற்றோரை துரத்தி விடும் அல்லது கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்லும் மகன்) இன்றுவரை நாம் படித்தும்/ தொலைகாட்சியில் பார்த்தும் வருகிறோம். இதற்கு நேர்மாறாக கொடுமைக்கார மாமியார், தீய பழக்கங்கள் கொண்ட கணவன் இவர்களிடம் சிக்கி, பொறுமையாக அனைத்தையும் சகித்து அவர்களைத் திருத்தும் மருமகளும் வெகுஜனப் புனைவுகளுக்கு பிரியமானவரே. ஆனால், குடும்பம் என்ற அமைப்பின் ஆழத்தை இவை நமக்கு காட்டுவதில்லை. (more…)