விமர்சனம்

விரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்

– எஸ். சுரேஷ்

e a gardner

அத்தை பையனுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் நான் என் முதல் எனிட் ப்ளைட்டனைப் படித்து முடித்தேன். அவனோடு விளையாடுவதற்காக அத்தை வீட்டுக்கு ஒரு சனிக்கிழமையன்று கொஞ்சம் சீக்கிரம் போய் விட்டேன், ஆனால் அவன் பள்ளியில் அன்றைக்கு அரை நாள் வகுப்புகள் இருந்தன. அவன் வரும்வரை அவனுக்காக அங்கேயே காத்திருபப்து என்று முடிவு செய்தேன். அப்போது அங்கே எனிட் ப்ளைட்டன் எழுதிய சீக்ரட் செவன் புத்தகம் ஒன்று இருந்தது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்தவன், அது மிகவும் விறுவிறுப்பாக இருக்கவே அத்தை பையன் ஸ்கூல் விட்டு வருவதற்கு முன்னரே படித்து முடித்தும் விட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்த முதல் புத்தக நினைவு இதுதான் என்று நினைக்கிறேன். அப்போது நான் நான்காவதோ ஐந்தாவதோ படித்துக் கொண்டிருந்தேன்.

செகந்திராபாத்தில் எனக்கு வாய்த்த உலகைவிட முற்றிலும் மாறுபட்ட உலகம் எனிட் ப்ளைட்டனின் பிரிட்டிஷ் உலகம். அதனால் அது அதிசயமாகவும் வசீகரமாகவும் இருந்தது. சின்னஞ் சிறுவர்கள் துப்பறியும் நிபுணர்களாக இருக்க முடியும் என்பதும் அவர்களால் குற்றங்களைத் துப்பு துலக்க முடியும் என்பதும் என் கற்பனையைக் கிளர்த்தின. வெகு விரைவிலேயே எனிட் ப்ளைட்டன் விவகாரத்தின் தவிர்க்க முடியாத அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டேன்: பேமஸ் பைவ், பைவ் பைண்ட்அவுட்டர்ஸ், யங் அட்வென்சரர்ஸ் இத்யாதி வகையறாக்களின் செயல்பாடுகளை தேடித்தேடி வாசித்தேன். பெண்கள் வாசிக்கும் மலோரி டவர்ஸ் போன்ற புத்தகங்களைத் தொடவில்லை என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. (more…)

மொழியாக்கம்- மொழிகளைக் கடந்த வாசிப்பின் சாத்தியம்

akrphoto7_courtesy-ramanujan-estate_1

பொதுவாக நாம் மொழிபெயர்ப்பு கவிதைகள் சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்கப்பட வேண்டும், அல்லது, அவற்றின் அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும் என்பது போல் நினைக்கிறோம். எனவே ஒரு மொழிபெயர்ப்பை அணுகும்போது அது மூல மொழியிலிருந்து வேறுபடுவதில் ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து விட்டதுபோல் பார்க்கிறோம் – நமக்கே நன்றாகத் தெரியும், இப்படிப்பட்ட பிழைபெயர்ப்புகளை ஓரளவுக்கு மேல் தவிர்க்க முடியாது என்று. இந்நிலையில், இந்த இழப்புகளிலிருந்து வேறு ஏதோ ஒன்றை மீட்பதற்கான வழியை நாம் காண இயலுமா என்ற கேள்வியை எழுப்புவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறேன். (more…)

கவியின்கண் 16 – குறைகளற்ற மலர்

எஸ். சுரேஷ்

ஒற்றை மலரை எனக்கு அளித்தான், நாங்கள் சந்தித்தபின்.
மென்மையான ஒரு தூதுவனை அவன் தேர்ந்தெடுத்தான்;
ஆழ் இதயம், தூய்மை, ஈரம் காயாத பனித்துளியின் நறுமணம்-
குறைகளற்ற ஒற்றை ரோஜா.

மலர்களின் மொழியை நான் அறிவேன்;
“மெல்லிய என் இதழ்களில் போதிந்திருக்கும், அவன் இதயம்”
எப்போதோ காதல் தனக்கென தேர்ந்தெடுத்துக் கொண்ட சின்னம்
குறைகளற்ற ஒற்றை ரோஜா.

இதுவரை ஏன் ஒருவரும் எனக்கு
குறைகளற்ற ஒரு லிமோ அனுப்பியதில்லை|
இல்லை, என் அதிர்ஷ்டம் எப்போதும் எனக்குக் கிடைப்பது,
குறைகளற்ற ஒற்றை ரோஜா

– டார்தி பார்க்கர் (more…)

ஞாபகம்

ரா. கிரிதரன்

soccer memoirs

எனது எதிர்வீட்டில் இருக்கும் தொண்ணூறு வயது தாத்தா கால்பந்து போட்டிக்காக இன்று பளபளா இங்கிலாந்து கொடியைக் கட்டிக்கொண்டிருந்தார். அவரது செய்கை எனக்குக்கொஞ்சமும் ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை. மழை பெய்தபின் பூக்களுக்குத் தண்ணீர் விடுவார், என் வீட்டின் தரையைச் சரிசெய்து முடித்த அன்று சாம்பிள்களை எடுத்து வந்தவர். ராணுவ அணிவரிசையைப் பார்ப்பது போல மெல்ல இடம் வலம் நடந்து கொடியைக் கோணலாகாமல் சுவரில் அடித்துமுடித்தார்.

`நேற்று இத்தாலி தோற்றுப்போச்சு, இருந்த ஒரே சான்ஸும் போச்சே பார்த்தீங்களா?` , எனச் சொன்னேன்.

அவரது பதில் தான் மிக முக்கியமானது. என்ன சொல்கிறார் என ஒரு முறை கேட்டால் தான் நகர்வதா, பேச்சைத் தொடர்வதா என முடிவு செய்வேன்.

`ஆர்.ஏ.எஃப் ப்ளைட்டுகள் வந்தபுதிதில் ஒரு பழக்கம் இருந்தது. நான் சொல்வது ஐம்பதுகளில். நான் அப்போதுதான் லிமரிக்கிலிருந்து லண்டனுக்கு வந்திருந்தேன். சைனா மார்க்கெட்டில் வாங்கிய இனிப்பை ருசித்தபடிப் பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்ப்பது போல லண்டன் ப்ரிட்ஜ், லீடன்ஹால் மார்க்கெட்டை சுத்தி சுத்தி வருவேன். அப்போதெல்லாம் இந்த மாதிரி ஒரு கொடி கட்டின வண்டிகள் ரோந்து வரும். என்னிக்காவது நேரம் இருந்தா காட்டுறேன்.`

நான் கால்பந்து பற்றிப் பேசியது எனக்கே மறக்குமளவு எங்கேயோ சென்று நிறுத்திவிடுவார். இதுதான் வில்சன் தாத்தா. (more…)

கவியின்கண் 15 – இறுதி கோஷம்

– எஸ். சுரேஷ் –

The last war slogan

“கின்ஸ்பர்க்”
– ஜூலியோ வைனோகிராட்

குற்றம் சொல்வதற்கில்லை. ஹௌலும் கட்டிஷும் எழுதிய எவரும்
மிச்சமிருக்கும் தங்கள் வாழ்நாளெல்லாம்,
எத்தகைய தவறும் செய்யும் உரிமை ஈட்டியவர்கள்.
என் குறை, இந்தத் தவற்றை அவரோடு நான் செய்திருக்க வேண்டாம் என்பதுதான்.
இது நடந்தது வியட்நாம் போரின்போது
அவர் ஒரு மாபெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார், வாசித்தபடி
வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கில் இருந்தார்,
அங்கிருந்து செல்ல யாருக்கும் விருப்பமில்லை, (more…)