சிகந்தர்வாசி

தொலைந்த துணை

சிகந்தர்வாசி 

இரவு ஒரு மணிக்கு டெலிபோன் மணி அடித்தது, கனவில் யாரோ என்னை கூப்பிடுவது போல்.

மணி அடிக்கிறது என்று உணர சற்று நேரமாகியது. இளைஞனாக இருந்திருந்தால் திடுக்கிட்டு எழுந்திருப்பேனோ என்னவோ. சற்று குழப்பத்துடன் ரிசிவரை கையில் எடுத்தேன்.

“ஹல்லோ. நான் உன் நம்பர கண்டுபிடிக்கமாட்டேன்னு நினைச்சியா? அவ்வளவு சீக்கிரம் உன்ன விட மாட்டேன்,” என்று சொல்லிவிட்டு சிரித்தது ஒரு குரல். இளம் பெண்ணின் குரல்.

“ஹலோ யார் நீங்க?”

“ஹஹ.. குரலை மாத்தி பேசறயாடா ராஸ்கல். என்ன ஏமாத்தமுடியாது. அதுக்கு வேற ஆள பாரு”

“ஹலோ. உங்களுக்கு யார் வேணும்?”

“நீதான் வேணும் அப்படின்னு நான் சொல்லணுமா? ஹ ஹ ஹ. அந்த மாதிரி சினிமா டைலாக் எல்லாம் நான் சொல்ல மாட்டேன். உனக்கே தெரியும் எனக்கு என்ன வேணும்ன்னு” (more…)

புது தில்லியில் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவம்

 சிகந்தர்வாசி 

சகானோ மற்றும் நரூசேவுக்காக புது தில்லி விமான நிலையத்தில் இன்டர்நேஷனல் பிரிவில் எக்சிட் கேட் வாசலில் காத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமானங்கள் போல் இதுவும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான் வந்திறங்கும். அதற்குப் பிறகு அவர்கள் இம்மிக்ரேஷன், கஸ்டம்ஸ் எல்லாம் தாண்டி வெளியில் வர ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும். அவர்கள் ஜப்பானிலிருந்து வரும் எங்கள் வாடிக்கையாளர்கள். முதல் முறையாக இந்தியா வருவதினால் ப்ராஜெக்ட் மேனேஜரான நான் இங்கு அவர்களுக்காக அரை தூக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். (more…)

ஹௌடாச் சம்பவம்

சிகந்தர்வாசி 

 

எப்பொழுதும் போல் ஹௌராஹ் (பெங்காலியில் ஹௌடா) ஸ்டேஷனுக்கு இரண்டு மணி நேரம் முன்பே வந்து விட்டேன். எப்பொழுது கல்கத்தா சென்றாலும் அங்குள்ளவர் பீதியைக் கிளப்புவார்கள். “ஹௌடா ப்ரிட்ஜி பே ஜாம் ஹோகா” என்று சிலரும், பல மணி நேரம் முன்பே கிளம்பி ட்ரைனை அவர்கள் எப்படி கோட்டை விட்டார்கள் என்று சிலரும் ஒவ்வொரு முறையும் சொல்வதுண்டு. அதனால் நான் எப்பொழுதும் ஹௌடாவுக்கு வரவேண்டும் என்றால் இரண்டு மணி நேரம் முன்பே வந்துவிடுவேன். அப்பொழுது எனக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்கும், ஆனாலும் இந்த விஷயத்தில் மட்டும் ரிஸ்க் எடுக்கமாட்டேன்.

ஸ்டேஷன் வந்ததும் ஒரு அறிவிப்பு காற்றில் பறந்து வந்தது. நான் செல்லவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாக கிளம்பும் என்றும் அது இரண்டாவது பிளாட்பாரத்துக்கு பதில் ஐந்தாம் பிளாட்பாரத்திலிருந்து கிளம்பும் என்றும் அந்த அறிவிப்பு ஹிந்தியில் கூறியது.

எப்பொழுதும் போல் டிவி முன் உட்கார்ந்து கொண்டேன். கல்கத்தா ஸ்டேஷனில் எப்பொழுதும் டிவீயில் கால்பந்து போட்டி எதாவது ஒன்று ஒளிபரப்பிக் கொண்டிருப்பார்கள். அன்று லிவெர்பூல் மற்றும் யுவேண்டஸ் அணிகளுக்கிடையே நடந்த யுரோப்பியன் கப் போட்டியின் மறு ஒலிபரப்பு. அந்தப் போட்டியை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அந்தப் பெண்மணி வந்திருக்க வேண்டும், கவனிக்கவில்லை. (more…)

நாம்பல்லிச் சம்பவம்

சிகந்தர்வாசி 

அமீர்பெட் போக எதுக்கு ட்ரைன்?”

“அமீர்பெட் இல்லப்பா. நாம ஹைதராபாத் போறோம்”

“என்ன பைத்தியம் மாதிரி பேசற ! நாம இருக்கறது ஹைதராபாத்.”

“இல்லப்பா. நாம இப்போ மெட்ராஸ்ல இருக்கோம். பெரியப்பா பேரன் கல்யாணத்துக்கு திருச்சி போனோம். இன்னிக்கி கார்த்தால மெட்ராஸ் வந்தோம். இப்போ ஹைதராபாத் போறோம்”

அவர் குழப்பமாக அவளைப் பார்த்தார். பிறகு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். சற்று நேரத்துக்குப் பிறகு, “இது பேகம்பேட் ஸ்டேஷன் இல்லையோ?”

“இல்லப்பா, இது மெட்ராஸ் சென்ட்ரல்” (more…)

நினைவின் வண்ணங்கள்

சிகந்தர்வாசி 

குழந்தைகள் சிரிக்கும் ஒலி நீல நிறமாக என் காதில் விழுகிறது

ஓடிக்கொண்டிருக்கும் நினைவு நதியில்
ஒரு கூழாங்கல்லைக் கையில் எடுக்கிறேன்
மறந்துவிட்டேன் என்று நான் எண்ணிய முகமொன்று
அதன் மேடு பள்ளங்களில் மலர்கிறது
கூழாங்கல் ஏந்திய கை சில்லிட்டுப் போகிறது

அம்மாக்கள் கத்தும் ஒலி சிவப்பாக இருக்கிறது

அந்த முகம் மறைந்து வேறொரு முகம்
மெதுவாகத் தோன்றுகிறது, ஆனால் தெளிவாக இல்லை
சூரிய ஒளி கல் மேல் விழ அது பளபளக்கிறது
கண் கூசி மூடிய இமைகளுள் முகம் தெளிவாகிறது

மெதுவாக நடந்து செல்லும் முதியவர்களின் குரல் மஞ்சள் நிறம்

எடுத்த கூழாங்கல்லை நதியில் மெதுவாக இடுகிறேன்
மெல்ல அசைந்து அசைந்து தரை தட்டுகிறது
அதன் பளபளப்பு என் கண்களுக்குள் தேங்கி நிற்கிறது

குழந்தைகள் சிரிக்கும் ஒலி நீல நிறமாக என் காதில் விழுகிறது

ஒளிப்பட உதவி- Jean Gregory Evans, Panoramio