சிகந்தர்வாசி

டிபென்ஸ் காலனி பூங்காச் சம்பவம் 

சிகந்தர்வாசி 

பெங்களூர் இந்திரா நகர் டிபென்ஸ் காலனி பூங்காவில் தினமும் மாலை நடைபழகுவது என் பழக்கம். அன்று மாலையும் அதுதான் செய்து கொண்டிருந்தேன். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இளையராஜா பாடல்களை கேட்டபடி சிறு கற்கள் பதித்து அமைக்கப்பட்ட டிராக்கை பல முறை சுற்றி வருவேன். கால் மணி நேரம் சுற்றி வந்திருப்பேன், அப்பொழுது பூங்காவிற்கு வெளியிலிருந்து உரக்க பல குரல்கள் கேட்டன. யாரோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மெதுவாக பூங்காவின் இரும்பு சுழற்கதவு பக்கம் வந்து வெளியே பார்த்தேன். ஏழு எட்டு பேர் இருப்பார்கள். அதில் ஒரு இளவயது பெண் இன்னொரு இளவயது பெண்ணைப் பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு நடுத்தர வயது அம்மையார் தமிழில் ஏதோ உரக்கக் கூவிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் வயதான அம்மையார் ஒரு நடுத்தர வயது ஆணுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கத்திக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு பக்கத்தில் ஓர் இளைஞன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் இன்னொரு இளைஞன் தலை குனிந்து நின்றிருந்தான். இவர்கள் யாரும் இந்த காலனிக்காரர்கள் போல் தோன்றவில்லை.

கத்திக்கொண்டிருக்கும் பெண் ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்தாள். சற்று பருமனாக இருந்தாள். மங்கலான பச்சை நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். முகத்தில் வியர்வைத் துளிகள் பிரகாசித்தன. அவளுக்கு நல்ல ‘பேஸ் வாய்ஸ்’ என்று நினைத்துக் கொண்டேன். ரோட்டின் இந்தப் பக்கத்தில் இருந்த பெண்ணைப் பார்த்து கையை ஆட்டி ஆட்டி, “யூ பிட்ச். வாட் டூ யூ திங்க் ஆப் யுவர்ஸெல்ப் ஸ்டூபிட் வுமன்” என்று உரக்க கூச்சலிட்டாள் அவள். (more…)

கயிறு

சிகந்தர்வாசி 

“இப்போதான் எழுந்து பல் தேச்சி வெளியில டீ குடிக்க வந்திருக்கோம்”

“……”

“நேத்தி ராத்திரி ஒரு தரிசனம் ஆச்சு. குளிச்சப்புறம் மறுபடியும் ஒரு தரிசனத்துக்கு போவோம்”

“……”

“எல்லாம் பத்திரமா வருவேன். கவலைப்படாத”

“…..”

“ஆமாம். முதல்லையே சொன்னேனே. மத்தியானம் பஸ். ராத்திரி வந்துடுவேன்”

“அம்மாவா?” என்று கேட்டான் பஜ்ஜி.

“ஆமாம்”

நாங்கள் இருவரும் ஸ்ரீசைலம் வந்திருந்தோம். இளங்காலை நேரம் ஒரு கடையில் டீ சொல்லிவிட்டு பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம். (more…)

அஜ்ஜி மாதிரி

இருவரும் சாக்லேட்டைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தனர் அவள் போன பின்பும் வெகு நேரம் அவள் போன திசையை குழப்பத்துடன் நோக்கிக் கொண்டிருந்தான் தந்தை “அப்பா, சாக்லேட் வேணும்” மகனும் மகளும் ஒற்றை குரலில் கேட்டார்கள் நான் ஏதோ வாங்க அந்தக் கடைக்கு சென்றிருந்தேன் என்ன வாங்கச் சென்றேன் இப்பொழுது மறந்துவிட்டது “இல்லை” என்றான் அவன் நடுத்தர வயது உடம்பு முழுக்க மரத்தூள் ஏதோ அபார்ட்மெண்ட்டில் கார்பெண்டர் வேலை செய்கிறான் போல்

கலைந்த கேசம் அதிலும் மரத்தூள் அழுக்குச் சட்டை அடர்ந்த மீசை

“அப்பாஆஆ, ஒரே ஒரு சாக்லேட்” சிணுங்கினாள் சிறுமி மறுபடியும் தலையசைத்து இல்லை என்றான்

பட்டுப் புடவை கட்டிய மூதாட்டி ஒருவர் ஏதோ வாங்க வந்தார் ஏதோ கல்யாணத்திற்குச் செல்கிறார் போல் “எந்த சாக்லேட் வேணும்?” என்று சிறுவர்களைக் கேட்டார் இருவரும் வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு தந்தையை பார்த்தனர்

“சொல்லு. எந்த சாக்லேட் வேணும்?” என்று கேட்டார் மறுபடியும் கண்ணாடிப் பெட்டிக்குள் பளபளக்கும் சாக்லேட்டை இருவரும் நோக்கினர் பிறகு தந்தையை தந்தையின் அசையும் தலையை இருவரும் வேண்டாம் என்று தலையசைத்தனர்

“நான் உங்களுக்கு அஜ்ஜி மாதிரி. சீக்கிரம் சொல்லுங்க நான் வேற எடத்துக்கு போகணும்”

“வேண்டாம்” என்றான் தந்தை “விடுய்யா, அவங்க பாட்டி போல. ஆசையா வாங்கி தராங்க குழந்தைங்க சாப்பிடட்டும்” என்றான் கடைக்காரன்

குழந்தைகளில் கண்களில் ஆசை மறுபடியும் இருவரும் தந்தையைப் பார்க்க “இந்த சாக்லேட் ரெண்டு கொடு” என்று கேட்டு வாங்கி குழந்தைகளிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள் பாட்டியம்மா.

புன்னகையின் மணம்

– சிகந்தர்வாசி –

EA final 3

Though she had never spoken to him
he could not forget the way she smiled
when she saw
him riding the bicycle for the first time

When she was going away to Nanded
– where is Nanded?
– Somewhere in Maharastra
he went to the railway station and saw

her sitting next to the window
in the train but she didn’t see him

He could not forget the smile

He went to Nanded a few days later
roamed the streets
stood in the hot sun in front of
some women’s colleges
had lunch in a small hotel
-the dal was undercooked
and came back

After so many years he still remembers
the smile she gave him when he rode
the bicycle
and also the fact that the dal was undercooked

oOo

அவள் அவனுடன் பேசியதில்லை என்றாலும்
அவன் சைக்கிள் ஓட்டியதைப் பார்த்து அவள் புன்னகைத்ததை
அவனால் மறக்க முடியவில்லை

அவள் ஊரை விட்டு நாந்தேட் செல்லும்பொழுது
– நாந்தேட் எங்கு இருக்கிறது
– மகாராஷ்ட்ரா
அவன் ரயில் நிலையம் சென்று அவள் ரயிலில்
ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்
ஆனால் அவள் அவனை பார்க்கவில்லை

சில நாட்களுக்குப் பின் நாந்தேட் சென்று
வீதிகளைச் சுற்றி, உச்சி வெய்யிலில்
பல பெண்கள் கல்லூரி வாசல்கள் முன் கால் கடுக்க நின்று
ஒரு சிறு ஹோட்டலில் உணவருந்திவிட்டு
– தால் தீய்ந்த வாசனை அடித்தது
ஊர் திரும்பினான்

பல வருடங்கள் ஓடிய பின்னரும்
அவன் சைக்கிள் ஓட்டும் பொழுது
அவள் புன்னகைத்தது இன்னும் கண் முன் தெரிகிறது
தீய்ந்த தால் வாசனையும் உடன் வருகிறது

குன்றுள்ள இடமெல்லாம்…

அன்று பழனி முருகனை தரிசிக்கும்பொழுது
அந்த பெரியவர் முகம்தான் தெரிந்தது.

“ஒரு வேலையிருந்தா கொடுங்க”, பெரியவர் தீனசுரத்தில் கேட்டார்.
கரிய மேனி, நரைத்த தலைமுடிகளில் ஆங்காங்கே கருமுடிகள்.
கூப்பிய கைகள் நடுங்கின.
அழுக்கு சட்டை, அழுக்கு வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார்- நாம் பார்க்கும் ஆயிரக்கணக்கான முதியவர்களில் ஒருவர்.
“எங்க நாலு பேருக்கே வேலை இல்லை. தாத்தாவுக்கு எதாவது டிபன் கொடு,”
என்றார் முதலாளி நடுவயது அம்மையார் ஒருவரிடம்.

“ஐயா, நீங்க ஒரு வேல போட்டு கொடுங்க”,
கிழவர் என் பக்கத்தில் வந்து கேட்டார்.

“அவர் வெளியூரு. அவர தொல்ல பண்ணாத”,
என்றார் பக்கத்து மேஜையில் இருந்தவர்.

“என்ன வேலைனாலும் செய்யறேன்.
ஒரு வேலை போட்டு கொடுங்க சாமி”

“தாத்தா. இங்க உட்காரு. இந்த இட்லிய சாப்பிடு”
மூன்று இட்லிகளை வாழையிலை மேல் வைத்தாள் நடுவயது அம்மணி.

நடுங்கும் விரல்களினால் மெதுவாக சாப்பிட ஆரம்பித்த அவர் கண்கள் என்னை விட்டு விலகவில்லை.
கண்களில் ஏக்கமும் நம்பிக்கையும் கலந்திருந்தது போல் எனக்குப் பட்டது, சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போதும் என் மேல் அவர் கண்கள் படிந்திருப்பதை கவனித்தேன்.

என் கண்களில் தெரிந்த குழப்பத்தை பார்த்த முதலாளி, “இப்படிதான் சார் வீட்ல ஏதோ சண்டைன்னு கிளம்பிடுறாங்க, இந்த வயசுக்கு மேல என்ன வேலை செய்ய முடியும்? பொண்ணோ பையனோ வந்து திரும்ப கூட்டிண்டு போவாங்க”

விடுதிக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வெளியே வரும்பொழுது பெரியவரைப் பார்த்து நடையை துரிதமாக்கினேன்.