ஸ்ரீதர் நாராயணன்

புலியின் வாயில் – ராண்டோ

 

புலியின் வாயில் சிக்கிய முள்கரண்டி.
வாய்மூட முடியாதபடி படுவேதனை.
மரத்தடியில் இளைப்பாறிய புலி
சங்கடவிழிகள் மின்னுவதை
ஊரார் கண்டனர்.

அன்று ஒரு நாளைக்கு
அடர்கானகம் சற்றே தளர்ந்தது.

நீர் சொட்டி சடைதரித்த
பக்கத்து காட்டுப் புனுகுப்பூனை
அடங்கமாட்டாமல் சிரித்தது.

தலையைத் தூக்கி முதலைகள் விசாரித்தன.
இளைய இருமுயல்கள்
சற்றே கூடிநின்று ஒளிமணி மூக்கு
சுழித்துச் சென்றன.

மரக்கிளைமேல் குரங்கு;புதர் மறைவில் மான்
ராச்சுற்றி திரும்பிய ஓநாய்.

சில நிமிட சிரிப்புக்குப்பின்
எல்லாவற்றுக்கும் ஒரே கேள்வி
மீதமிருக்கும் கேக் எங்கே?

(ரா கிரிதரன்) (more…)

ஜென்மக் கணக்கு

ஸ்ரீதர் நாராயணன்

‘நேத்து நம்ம துரையைப் போட்டு சாட்டிப்புட்டாங்களாம்ல. பசங்க சொல்லலயா?’

பெரிய நூல் உருண்டையை பிரித்து நுனியை நீட்டி, கரைத்து வைத்த நீலத்தில் முக்கியெடுத்தபடிக்கு இருந்த தயாளன், குமரப்பெருமாளின் அரவம் கேட்டதும், நூலை அப்படியே தரையில் கிடத்திவிட்டு கைகளை விரித்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.

நீண்டு கிடந்த போர்ட்டிகோ நிழலில் சுவரோரமாக சாய்த்திருந்த 5 X 8 சைஸ் பலகையில் ‘ஜெயரேகா ஹாஸ்பிடல் செல்லும் வழி’ என்று சைன் போர்டு எழுதுகிற வேலை. நீலத்தில் நனைத்த நூலை போர்டுக்கு இருமுனைகளிலும் இழுத்துப் பிடித்துக் கொண்டு சுண்டிவிட்டால் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் விழும். அந்தக் கட்டங்களில் பென்சிலால் மெலிதாக எழுத்துகளை வரைந்துகொண்டு வண்ணம் தீட்ட வேண்டியதுதான். அரசரடி பேருந்து நிறுத்தத்தில் ஒன்று. அடுத்து காளவாசல் முக்கு. அப்படியே இடதுபுறம் பைபாஸில் திரும்பினால் சொக்கலிங்க நகர் முனை. தாஸ் டீக்கடை ஒட்டி வலதுபக்கம் திரும்பினால் முனியப்பன் கோவில் வாசலில் ஒன்று. (more…)

வித்தைக்காரனின் வெஞ்சினம்

Stephen Leacock
தமிழாக்கம்- ஸ்ரீதர் நாராயணன்

Stephen Leacock இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கில இலக்கிய உலகில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட நகைச்சுவையாளர். பரிகாசம் விரவிய விமர்சனங்களில் பொதுபுத்தி மடமையை சாடுவது அவரின் சிறப்பு. ஸ்டீஃபன் லீகாக் நினைவாக ‘நகைச்சுவையாளர் பதக்கம்‘ தொடர்ந்து 65 வருடங்களாக வழங்கப்படுகிறது. The Conjurer’s revenge நூற்றாண்டு பழமையான புனைவாக இருந்தாலும் இன்றைய காலத்திற்கும் பொருந்தி வரும் கதையாக அமைந்திருக்கிறது.

conjurer-revenge

ப்பொழுது சீமாட்டிகளே, கனவான்களே” சொன்னான் வித்தைக்காரன் “இந்த துணியில் எதுவுமில்லை என்று உங்களிடம் காட்டியபடிக்கு, இதிலிருந்து தங்கமீன்கள் கொண்ட ஒரு நீர்க்கிண்ணத்தை எடுக்கப்போகிறேன். ப்ரெஸ்டோ!”

அந்தக் கூடம் முழுவது மக்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ‘ஆ! என்ன அற்புதம்! எப்படி இதை செய்கிறான்?’

ஆனால், முன் இருக்கையில் இருந்த துரித பேர்வழி, தன் அருகே இருப்பவர்களிடம் சத்தமாக கிசுகிசுத்தான் “அவன்-கைக்குள்-ஒளித்து-வைத்திருந்தான்” (more…)

பூனை சொல்லும் கவிதைகள்

Francesco Marciuliano
(தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)

The author had an awesome blog with the excerpts from his book. Please check it out for buying the book.

ஏன் அலறுகிறாய்…

cat-poem-scream1

ஏன் அலறுகிறாய்?
நானென்ன தவறிழைத்தேன்?
ஏன் அழுகிறாய்?
அதை எப்படி நான் சரி செய்வது?
வேறு நிறத்தில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
வேறு அளவில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
வேறு அறையில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
நான் என் அன்பைக் காட்டவே விரும்பினேன்
நன் என் நன்றியை வெளிப்படுத்தவே விரும்பினேன்
நான் உன் போர்வையில் ஒரு செத்த எலியை போடவே விரும்பினேன்
ஆனால் நீ இப்பொழுது அலறுகிறாய்
எனக்கு எப்படி உன்னை நிறுத்துவது என்று தெரியவில்லை

 

அவமானத்தை அழி

cat-poem-shame2

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
அவர்கள் தெரிந்துகொள்ள என்னால் எப்போதும் விடமுடியாது

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
அவர்கள் பார்த்துவிட என்னால் எப்போதும் விடமுடியாது

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
நான் பூனையை விட பயங்கரமானவன்

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
என்னுடைய இருண்ட, இருண்ட ரகசியத்தை ஆழ புதைக்கிறேன்
அவமானத்தை அழி! அவமானத்தை அழி!

அப்பாடி
நான் மூத்திரப்புரையை பயன்படுத்தியது இனி ஒருவருக்கும் தெரியாது

 

உன் மடியில் இருப்பது யார்?

cat-poem-lap2

இந்த வீட்டில் இன்னொரு பூனை இருக்கிறது
நான் பார்த்தேயிராத ஒரு பூனை
வெகு இளமையான ஒரு பூனை
அவள் பெயர் உனக்கு தெரியும் போல
தவறுதலாக என்னை அவள் பெயரிட்டு அழைத்தாய்
அந்த விளக்குக்கு முன்னால்
என் நண்பனான குட்டி திண்டுக்கும் முன்னால்
நான் ஒருபோதும் இவ்வளவு சிறுமைப்பட்டதில்லை
இனி நான் எப்போதும் நேசிக்காமல் போகலாம்.

கவிதைகள் – க்யூ, கட்டியம் கூறுதல்

-ஸ்ரீதர் நாராயணன்-

வால் வைத்த q

சிறுமி தனக்குத் தெரிந்த சின்ன q-வை எனக்குணர்த்த
கையைப் பின்னாடி முறுக்கிக் காட்டும் அழகு
எந்த எழுத்துருவிலும் காணவில்லை

கட்டியம்கூறல்

கோதுமை மணி அலகை குவித்தபடிக்கு
இசைத்து செல்கிறது ராபின் பறவை
இனிவரும் வசந்தமெல்லாம் உபரி