– Francesco Marciuliano –
(தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)
The author had an awesome blog with the excerpts from his book. Please check it out for buying the book.
ஏன் அலறுகிறாய்…
ஏன் அலறுகிறாய்?
நானென்ன தவறிழைத்தேன்?
ஏன் அழுகிறாய்?
அதை எப்படி நான் சரி செய்வது?
வேறு நிறத்தில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
வேறு அளவில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
வேறு அறையில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
நான் என் அன்பைக் காட்டவே விரும்பினேன்
நன் என் நன்றியை வெளிப்படுத்தவே விரும்பினேன்
நான் உன் போர்வையில் ஒரு செத்த எலியை போடவே விரும்பினேன்
ஆனால் நீ இப்பொழுது அலறுகிறாய்
எனக்கு எப்படி உன்னை நிறுத்துவது என்று தெரியவில்லை
அவமானத்தை அழி
அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
அவர்கள் தெரிந்துகொள்ள என்னால் எப்போதும் விடமுடியாது
அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
அவர்கள் பார்த்துவிட என்னால் எப்போதும் விடமுடியாது
அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
நான் பூனையை விட பயங்கரமானவன்
அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
என்னுடைய இருண்ட, இருண்ட ரகசியத்தை ஆழ புதைக்கிறேன்
அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
அப்பாடி
நான் மூத்திரப்புரையை பயன்படுத்தியது இனி ஒருவருக்கும் தெரியாது
உன் மடியில் இருப்பது யார்?
இந்த வீட்டில் இன்னொரு பூனை இருக்கிறது
நான் பார்த்தேயிராத ஒரு பூனை
வெகு இளமையான ஒரு பூனை
அவள் பெயர் உனக்கு தெரியும் போல
தவறுதலாக என்னை அவள் பெயரிட்டு அழைத்தாய்
அந்த விளக்குக்கு முன்னால்
என் நண்பனான குட்டி திண்டுக்கும் முன்னால்
நான் ஒருபோதும் இவ்வளவு சிறுமைப்பட்டதில்லை
இனி நான் எப்போதும் நேசிக்காமல் போகலாம்.