அருண் கொலாட்கரின் பட்டர்ஃப்ளை தமிழாக்கம்

நம்பி கிருஷ்ணன்

கதையேதுமில்லை அதற்குப் பின்னே.
நொடியைப் போல் அது பிளவுபட்டிருக்கிறது.
தன்னைச் சுற்றியே அது சுழன்று திரும்புகிறது.

வருங்காலம் அதற்கில்லை.
எந்த கடந்த காலத்தின் மீதும் குத்தி வைக்கப்படவுமில்லை.
நிகழ்காலத்தின் சிலேடையது.

மஞ்சள் நிறத்த குட்டிப் பட்டாம்பூச்சி அது.
கேடுகெட்ட இக்குன்றுகளுக்கெல்லாம்
தஞ்சமளிக்கிறது தன் இறகிற்கடியே.

ஒரு துளி மஞ்சள்தான்,
மூடுவதற்குள் விரிக்கிறது
விரிப்பதற்குள் மூ..

எங்கே அது?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.