மெண்ணுணர்வுகளோடு
ஒரு பூவையும், சில பறவைகளையும்,
கொஞ்சம் நட்சத்திரங்களையும்
இரசித்தபடி
ஒரு மெளனத் தவத்துள்
புதையுண்டு போகிறான்
“என்னை விட்டு விடு
மௌனத் தவத்துள் நான் இன்னும் சில யுகங்கள்
கனவுகள் காண வேண்டும்”
எனப் புலம்புகிறான்
எதையோ வெற்றிகொள்ளும்
உக்கிர வேட்கையோடும்
தீயின் கனலோடும்
இதோ ஒரு சந்நியாசி இருக்கிறான்
வாழ்க்கை பரிசளிக்கும் தண்டனைகளை
பூக்களை இரசிப்பது போல் இரசிக்கும்படி
கடவுள் அவனுக்கு கட்டளை இட்டார்
எந்த ஆரவாரங்களுக்கும்
அவன் தவம் கலைதல் கூடாதென்று
கடவுள் அவனை ஏவினார்
எனினும்
கறைபடிந்த காலத்தில்
அடையாளமற்ற சில அருவருப்பான
குரல்கள் அவன் அமைதியைக் குலைத்தன
எந்த அர்த்தமுமற்ற பொய்யான சொற்களால்
பகடிகளால் நிறைந்த அர்த்தமற்ற
ஆரவாரங்களால்
அவன் தவம் சிதைந்திற்று
வாழ்க்கை, நேசிப்பிலிருந்து
உன்னதங்களிலிருந்து
தவத்திலிருந்து
புனிதங்களிலிருந்து
மனிதனைத் தள்ளிவைக்கும் தண்டனைகளால் நிறைந்தது
என இறுதியில் அதே கடவுளிடம் முறையிட்டபடி
மீண்டும் வாழ்வின் சாளரங்களை
எதையோ வெற்றி கொள்வதற்கான
உக்கிரத்தோடு திறக்கத் தொடங்கினான்.
யாரோ கலைத்துப் போட்ட அமைதி
Advertisements