(This is an unauthorised translation of the poem, ‘River Stop,’ originally written in English by Arvind Krishna Mehrotra. The Tamil translation is intended for educational, non-commercial reproduction at this particular website only)
வடக்கு மலைகளில்
படுகைக் கரையை மீறி
ஓரிரண்டு சாலைகளைக் கடக்கும்
ஓர் நதியைத் தனித்த பயணங்களில் பார்க்கிறேன்.
வருடத்துக்கு ஒன்று அல்லது ரெண்டு முறை
கரையேறும்போது
தவறவிட்ட
பாலங்களைத் திரும்பிப் பார்க்கும்.
மேட்டுப்பகுதியிலிருக்கும்
படகுகள் அதைப் பார்க்கும்.
மறதி அதிகமாயிருக்கும் மூன்று குழந்தைகளைப் போல
நட்சத்திரம், துடுப்பு மற்றும் மீனும்
ஜன்னலைக் கடக்கும்.
நான் அவர்களது கை அளவை அளந்து
சிறு சிவப்பு மேலுடுப்புகள்
தைப்பேன்.
ஒன்றை ஒன்று விட்டுப்போகாமலிருக்க
மந்திர வட்டங்கள் அவற்றைச் சுற்றி வரைகிறேன்.
ஒளியற்ற மலைகளுக்குப் பின்னால் அவை மறைகின்றன.
நதி செல்லும்
சாலையோர மரங்களின்
வரிசையில்
இறுகிய முகம்கொண்ட
யாத்ரிகர்களின்
சிறு கூட்டம்
பயண ஊர்த்திக்காகக் காத்திருக்கிறது.
oOo
(1970களின் நவீன ஆங்கில இந்திய கவிதை உலகத்தில் மிகப் பிரபலமானப் பெயர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. அருண் கொலாட்கர், ஏ.கே.ராமானுஜம், போன்றவர்களுடன் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா ஒரு கவிதை இயக்கமாகச் செயல்பட்டார். அவரது ஆங்கில கவிதைகளும், பிராகிரத மொழியாக்கங்களும், கபீரின் கவிதை ஆக்கங்களும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுத்தந்தது. பம்பாயின் நவீன சிறு பத்திரிக்கை உலகின் அடையாளமாகக் காணப்பட்டவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. damn you எனும் சிறு பத்திரிகையைத் தொடங்கி பல இளம் கவிஞர்களை ஆங்கில கவிதைக்கு ஆற்றுப்படுத்தியிருக்கிறார். Middle Earth, Nine Enclosures போன்ற தொகுப்புகளும் History of Indian Literature, The Oxford India anthology of twelve modern Indian Poets போன்ற விமர்சக நூல்களும் எழுதியவர்.
அவரது கவிதைகளின் மொழியாக்கங்களை இத்தொடரில் பார்க்கலாம்.)
Very good blog for poets and love to read this. It is useful for me ,writing an english poem is not very easy effort so your page helps me to learn more on it.
Thank you.