
தாகத்தில் தூக்கம் கலைந்த நள்ளிரவு
சலிப்புற்று எழுந்தேன்
எப்போதும் போல
அரைக்கண்ணில் கீழ்வானம்
பார்த்த நொடியில்
தேன் நிரம்பிய கொடுக்கோடு
தேள் ஒன்று கொட்டியது நெஞ்சில் (more…)

தாகத்தில் தூக்கம் கலைந்த நள்ளிரவு
சலிப்புற்று எழுந்தேன்
எப்போதும் போல
அரைக்கண்ணில் கீழ்வானம்
பார்த்த நொடியில்
தேன் நிரம்பிய கொடுக்கோடு
தேள் ஒன்று கொட்டியது நெஞ்சில் (more…)
– காஸ்மிக் தூசி –
கோயிலின் கூரை
அனுமாரின் தலையில். ஆனால்
அதைப்பற்றி
யாருக்கும் கவலையில்லை.
ஒருவேளை அனுமாரே
கோயிலை இந்நிலையில்
விரும்பலாம் (more…)
– விஜயலக்ஷ்மி –

இக்கவிதையின் மலையாள மூலத்தை இங்கு வாசிக்கலாம்.
இனியெந்து வில்குவான்
புழயெ, காற்றினெ, வெயிலினெ வில்கான்
மழயெ மண்ணின்றெ தரிகலெ வில்கான்
பதினாலாம் ராவின்றெயழகினெ வில்கான்
புலரிதன் சப்த ஸ்வரங்களெ வில்கான்
அவர் விளிக்கயாய் ..வரிக லோகத்தின்
பெருமடீசீலதலவரே ..நீல –
மலகள் நிங்ஙள்க்கு குழிசெடுக்குவான்
ஹரித வ்ருக்ஷங்கள் பிழுதெடுக்குவான்
மகரவும் மண்ணும் குளிரும் நிங்கள்க்கு
மறன்னு போகாதெ பொதிந்தெடுக்குவான்
அலக்கிதேச்ச வெண்சிரியுமாய் நாடு
முறிச்சு வில்க்குவான் கொதிச்சு நில்ப்பவர்
விளிச்சு கூவுன்னு.. நுறுக்கு கேரளம்
முறிச்செடுக்குகீ கஷாப்பு கத்தியால்
இனி வில்கானுங் திரிச்சறியலின்
துறுப்பு சீட்டொன்னு கழுத்திலிட்டவர்
இறச்சிக்கும் வேங்தொட்டவர் ..ஷதகோடி
அவரே தாங்குவான் வருவதாரினி?
இனியெதை விற்பது
ஆற்றை, காற்றை, வெயிலை விற்க
மழையை மண்ணில் விளைபவகளை விற்க
பதினான்காம் காலையின் அழகினை விற்க
விடியலின் ஏழு சுரங்களை விற்க
அவர்கள் அழைக்கிறார்கள்… வருக உலகத்தின்
பெரும் பணப்பை கொண்டவர்களே… நீல –
மலைகளை நீங்கள் இல்லாமலாக்க
பசுமையான காட்டுமரங்களை பிடுங்கிப் போட
மீனும், மண்ணும், குளிரும் உங்களுக்கு
மறந்து போகாமல் பொதிந்து எடுத்துக் கொள்ள
வெளுத்துத் தேய்த்த வெண்சிரிப்போடு
நிலத்தை வெட்டி விற்க விரும்புவர் நிற்கிறார்
கூவி அழைக்கிறார்கள்…..சின்ன கேரளத்தை
வெட்டியெடுக்கிறார் கசாப்பு கத்தியால்
இனியும் விற்பதற்கு இருக்கிறது, அடையாளத்திற்காய்
துருப்பு சீட்டினைக் கழுத்திலிட்டவர்
இறைச்சிக்கும் ஆகாதாவர்…. நூறுகோடி
அவரை வாங்க யார் வருவார் இனி?

ஒன்றை ஒன்று துரத்தி விளையாடிக் கொண்டிருந்த
இரண்டு அணில்கள் ஜெனரலை பார்த்தவுடன்
ஆட்டத்தை நிறுத்திவிட்டு இரண்டு கால்களில் நின்றுக்கொண்டு
“குட் மார்னிங் ஜெனரல்”
“குட் மார்னிங் ஜெனரல்”
என்று சல்யூட் அடித்துவிட்டு அதே போஸில் அசையாமல் நின்றன
ஜெனரல் தலையை ஆட்டிவிட்டுச் சென்றார்
அவர் உருவம் மறைந்தபின் மறுபடியும் அணில்கள்
ஒன்றை ஒன்று துரத்தி விளையாட தொடங்கின
ஒளிப்பட உதவி – Studio Bingo

இன்று காலை நடைபழகும்போது நடராஜன் எதிரில் வந்தார். என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.
நடராஜன் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று சில வருடங்கள் ஆனாலும் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பவர். தினமும் ஷட்டில் ஆடுவார். காலையில் வாக்கிங்.
“லைப் எப்படி போயிண்டிருக்கு சார்?” என்று கேட்டேன்.
“என்னத்த சொல்ல சார், ஒரே தனிமையா இருக்கு. ரொம்ப லோன்லியா பீல் ஆறேன். அவ போயி அடுத்த மாசம் அஞ்சு வருஷம் ஆறது. அப்பா போன வருஷம் போயிட்டார். ஆபிசும் கிடையாது. ரொம்ப போர் சார்”
“ஏதாவது என்ஜிஓல சேருங்களேன் சார்”
அவர் உரக்க சிரித்தார், “நம்ப ஆபிஸ் பாலிடிக்ஸ் விட அங்க பாலிடிக்ஸ் ஜாஸ்தி இருக்கு. அதெல்லாம் முடியாத விஷயம்”
அவர் தனிமையைப் போக்க எதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். “உங்க அண்ணா நம்ப காம்ப்ளெக்ஸ்லதானே இருக்கார், அவர் வீட்டுக்கு போலாமே சார். அவரும் சும்மாதானே இருக்கார்?”
நடராஜன் விரக்தியாகச் சிரித்தது போல் இருந்தது. “அதெல்லாம் சொல்லுஷன் இல்ல சார்”
“சீரியல் பாக்கலாமே சார்” என்று சொல்ல வந்து அந்த எண்ணத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.
ஒரு சுற்று மௌனமாகவே இருந்தோம். திடீரென்று அவர், “என்னதான் சொல்லுங்க சார், வாழ்க்கைல நமக்குன்னு ஒரு துணை வேணும்” என்றார். (more…)