Author: பதாகை

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 3

பீட்டர் பொங்கல்

(அடில் ஜுஸ்ஸாவாலாவின் கட்டுரைத் தொகுப்பான Maps for a Mortal Moon என்ற நூலை முன்வைத்து அர்விந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா காரவன் பத்திரிகையில் எழுதிய  Being Here என்ற கட்டுரையின் தமிழாக்கம்)

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் | 1 | 2 |

இத்தனை ஆண்டுகாலமாக பராக்கு பார்ப்பவர் என்று பம்பாயில் அருண் கொலாட்கர் ஒருவர்தான் இருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அவர் கால கோடாவை நமக்காகக் கவிதையாக்கினார். அதன் கட்டிடங்கள், தெருக்கள், மக்கள், ரெஸ்டாரண்ட்டுகள், கலைக்கூடங்கள், தெரு நாய்கள், பூனைகள், காகங்களை மறக்க முடியாத உயிர்ப்புடன் சித்தரித்தார். மேப்ஸ் பார் எ மார்டல் மூனின் ஆச்சரியங்களில் ஒன்று, ஜுஸ்ஸாவாலாவில் பம்பாய் இன்னொரு சோம்பேறியைப பெற்றிருக்கிறது என்பதுதான், இந்நகரத்தின் தெருக்கள் அளிக்கக்கூடியது எதுவாயிருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளக்கூடிய இன்னொருத்தர் இங்கு இருந்திருக்கிறார். சில சமயம், மழைக்காலப் பருவம் போன்றவொன்றில், அது தரக்கூடிய அனைத்தும் மகிழ்விப்பதாக இருக்காது. ஜுஸ்ஸாவாலாவின் பராக்கு பார்வை கொலாட்கரின் பார்வையைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது; மேலும், இங்கே உள்ளது போல், அவரது ஊடகமான உரைநடையும், மாறுபட்ட ஒன்றே. இந்த இரண்டும்- பராக்கு பார்வையும் ஊடகமும், ஒன்றோடொன்று தொடர்புடையவை. (more…)

வண்ணக்கழுத்து 7: வண்ணக்கழுத்தின் கதை

பகுதி 7: வண்ணக்கழுத்தின் கதை

முந்தைய பகுதியில், எந்த வழியாக சென்று வண்ணக்கழுத்து மீட்கப்பட்டதோ, அந்த இடங்களையும் சம்பவங்களையும் பற்றி மிகக் குறைவாகவே சொல்லியிருந்தேன். நாங்கள் தேடிய பத்து நாட்களில், முதல் நாளிலேயே கோண்ட் வண்ணக்கழுத்தின் பாதையை கச்சிதமாக கண்டுபிடித்துவிட்டார். ஆனால், அதைப் பற்றி தெளிவாகவும் கோர்வையாகவும் தெரிந்து கொள்ள வண்ணக்கழுத்தே தன் சாகசப் பயணத்தை விவரித்தால் நன்றாக இருக்கும். கனவின் இலக்கணத்தையும் கற்பனையின் அகராதியையும் வைத்துக் கொண்டால், அவனைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினமில்லை.

நகரத்திற்குத் திரும்புவதற்காக, அக்டோபர் மாத மதியத்தில் டார்ஜிலிங்கிலிருந்து ரயில் ஏறிய போது வண்ணக்கழுத்து தன்னுடைய கூண்டில் உட்கார்ந்து கொண்டு, தான் காணாமல் போன கதையை, டெண்டாமிலிருந்து சிங்காலியாவிற்கு போய் திரும்ப வந்த கதையைச் சொல்லத் துவங்கினான்:. (more…)

கவியின் கண்- “இதுவே தருணம்”

எஸ். சுரேஷ்

பயங்கரவாதி, அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்

சரியாக ஒன்று இருபதுக்கு பாரில் குண்டு வெடிக்கும்.
இப்போது ஒன்று பதினாறுதான் ஆகிறது.
சிலர் உள்ளே வர நேரம் இருக்கிறது,
சிலர் வெளியேறலாம். (more…)

வாசல்படி

காஸ்மிக் தூசி –

அது வாசல்படி அல்ல
பக்கவாட்டில் கிடக்கும் தூண்

ஆம், தூண்தான் அது

***

ஒளிப்பட உதவி – gallivantrix.com

(அருண் கொலாட்கர் எழுதிய The Doorstep என்ற கவிதையின் தமிழாக்கம்)

முகங்கள்

சிகந்தர்வாசி 

அந்த முகம் என் முன் தெரிகிறது,
அதை வருட கை நீட்டும்பொழுது மறைகிறது.
வேறொரு முகம் மெதுவாகத் தோன்ற,
நான் அதை உற்றுப் பார்க்கிறேன்.
தெரிந்த முகம்தான், ஆனால் யாரென்று தெரியவில்லை.
கண்மூடி திறப்பதற்குள் மறைகிறது.
அடுத்து தோன்றும் முகம், பரிச்சயப்பட்ட முகம்.
என்னைப் பார்த்து சிரிக்கிறது.
நான் கை நீட்டி அதைத் தொடுகிறேன்.
எனக்குள் சந்தோஷம்.
லேசாகப் புன்னைகைக்கிறேன். (more…)