ரா. கிரிதரன்

அன்பெனும் மழை – ராண்டோ

 

“மேகங்கள் கறுத்து மழை பெய்யாவிட்டால் என்ன?
நம் ஊரில் என்றும் பெய்கிறது அன்பெனும் மழை”
என்று முழங்கிக் கொண்டிருந்தார் பேச்சாளர்

அந்த வழியாக சென்றுகொண்டிருந்த
அழுக்கு வெள்ளை நாய் ஒன்று
அவரைப் பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது

பேச்சை நிறுத்திவிட்டு அவர் நாயை முறைத்தார்
குரைப்பதை நிறுத்திவிட்டு நாய் அவரை முறைத்தது

நாய் ஒய்ந்துவிட்டதாக நினைத்து அவர் பேச்சை தொடந்தார்
நாய் மறுபடியும் கோபமாக குரைத்தது

கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்தார்
நாய் அவரைப் பார்த்து பலமாக சிரித்துக்கொண்டே
அங்கிருந்து ஓடி விட்டது.

ஒரு கையில் கல்லும்
மறு கையில் மைக்கும் வைத்துக் கொண்டு
பிரசங்கத்தை தொடர்ந்தார் பேச்சாளர்

(எஸ். சுரேஷ்) (more…)

புலியின் வாயில் – ராண்டோ

 

புலியின் வாயில் சிக்கிய முள்கரண்டி.
வாய்மூட முடியாதபடி படுவேதனை.
மரத்தடியில் இளைப்பாறிய புலி
சங்கடவிழிகள் மின்னுவதை
ஊரார் கண்டனர்.

அன்று ஒரு நாளைக்கு
அடர்கானகம் சற்றே தளர்ந்தது.

நீர் சொட்டி சடைதரித்த
பக்கத்து காட்டுப் புனுகுப்பூனை
அடங்கமாட்டாமல் சிரித்தது.

தலையைத் தூக்கி முதலைகள் விசாரித்தன.
இளைய இருமுயல்கள்
சற்றே கூடிநின்று ஒளிமணி மூக்கு
சுழித்துச் சென்றன.

மரக்கிளைமேல் குரங்கு;புதர் மறைவில் மான்
ராச்சுற்றி திரும்பிய ஓநாய்.

சில நிமிட சிரிப்புக்குப்பின்
எல்லாவற்றுக்கும் ஒரே கேள்வி
மீதமிருக்கும் கேக் எங்கே?

(ரா கிரிதரன்) (more…)

திறந்த கதவில் பூட்டு

ஏம்பலத்தானின் முகத்தில் எப்போதும் பார்த்திராத சிரிப்பு படர்ந்திருந்தது. கண்ணில் தெரிந்த விஸ்கியினால் உறைந்த சிரிப்பு என முதலில் நினைத்தேன். சோகையான விளக்குகளில் அவன் முகத்தில் வரிக்குதிரை பதற்றம் அவ்வப்போது பொசிங்கியது. நான் டாவர்ன் பாருக்கு வந்ததும் குடிக்கத்தொடங்கி மூன்றாவது லார்ஜ் வரைதான் காலியாயிருக்க அதற்குள் அண்டை டேபிளில் `மாப்ள, மச்சி` எனக்கூப்பிடும் நான்கு நண்பர்களை சம்பாதித்திருந்தான் சிகரெட் வாங்கக்கூட பணமில்லாத ஏம்பலத்தான். அடிபட்ட தெருநாயின் மெல்லிய தொடர் ஓலம்போல பார் வாசனையை மீறி அவனிடம் மருந்து வாடை.

`கண்ணமெல்லாம் ஆப்பிள் மாதிரி புசுபுசுன்னு எப்படிடா இப்படி இருக்கே?` , என கார மல்லாட்டை ஒட்டியிருந்த ஈர விரல்களால் என் கன்னம் தடவினான். நான் ஊரை விட்டுப் போன நாட்களிலிருந்து அவனது கையில் ஒட்டியிருந்த சாயகட்டை வாசம் அப்படியே இருந்தது. (more…)

ஆறாம் கயல் – 1

என் ஒன்பது வயதில் ஒரு நீலம் பிரியாத காலைப்பொழுதில் வான்குடி பகுதிக்கு அப்பாவுடன் சென்றேன். அதற்கு முன்தினம் முழுவதும் வழுக்குப்பாறைகள் தாண்டி பயணம் செய்து வந்திருந்தோம். கடுமையான உடல்வலி. விழிகளை முழுவதுமாகத் திறக்க முடியவில்லை. முதல்முறை வான்குடி கிழக்கு வாசலுக்குள் நுழையப்போகிறோம்; கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்வரை இது சாத்தியமில்லாத பயணம். பாசியும் நுரையும் மிதமிஞ்சிய வழுக்குப்பாறை பகுதிகள் முழுவதும் தீக்கிரை ஆனது போல மர வண்டல்கள் நிரம்பியிருந்தன.

வழி நெடுக நான் அப்பாவை எதுவும் கேட்கவில்லை. அவரது முகத்தில் தெரிந்த கடுமை நான் முன்னெப்போதும் பார்த்திராதது.

(more…)