– காஸ்மிக் தூசி –
குதிகால் முதல்
பிருஷ்டம் வரை
காணிக்கையாக்கி-
குளிர்ந்த பலிபீடத்தின் மேல்
காத்திருக்கிறான்
பூசாரி.
(more…)
– காஸ்மிக் தூசி –
குதிகால் முதல்
பிருஷ்டம் வரை
காணிக்கையாக்கி-
குளிர்ந்த பலிபீடத்தின் மேல்
காத்திருக்கிறான்
பூசாரி.
(more…)

அடுத்த இரவு, அடர்ந்த காட்டில் மரத்தின் உச்சியில் உட்கார்ந்திருந்தபோது என்னுடைய சிக்கிம் நண்பனின் வீட்டையும் அதன் சவுகரியங்கள் பற்றியும் பல முறை நினைத்துப் . பார்த்துக் கொண்டிருந்தேன்.
நாள் முழுக்க நடந்து விட்டு, பயங்கரமான காட்டின் மத்தியில் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆலமரத்தில் அன்றைய இரவைக் கழிப்பதை யோசித்துப் பாருங்கள். பொதுவாக, உயரமான இடங்களில் ஆலமரம் வளர்வதில்லை என்பதால், அந்த மரத்தைக் கண்டுபிடிக்க அரைமணி நேரத்துக்கும் சுற்று கூடுதலாகவே ஆனது. ஒரு யானை பின்னோக்கி நடந்துவந்து தாக்கும்போது, மரம் உடைந்து விடாதபடிக்கு அது தண்டியான மரமாக இருக்க வேண்டும். இப்படித்தான் சில பெரிய மரங்களை யானைகள் சாய்த்துவிடுகின்றன. எனவே, நாங்கள் உயரமான மரத்தைத் தேட வேண்டியிருந்தது. ஒரு யானையின் தும்பிக்கைக்கு உச்சிக்கிளைகள் எட்டாத அளவு உயரமாகவும், இரண்டு யானைகள் சேர்ந்து இரட்டிப்பு பலத்துடன் தள்ளினாலும் உடைக்க முடியாதபடிக்கு தாட்டியாகவும் இருக்கும் மரத்தைத் தேடினோம். (more…)
– வெ. கணேஷ்–

“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில், பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.
ரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கியபடி வேகமாக நகரும் காமிரா; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை; விறகுவெட்டியின் மூச்சிரைக்கும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்துவிட முடிகிறது. (more…)

இரவு ஒரு மணிக்கு டெலிபோன் மணி அடித்தது, கனவில் யாரோ என்னை கூப்பிடுவது போல்.
மணி அடிக்கிறது என்று உணர சற்று நேரமாகியது. இளைஞனாக இருந்திருந்தால் திடுக்கிட்டு எழுந்திருப்பேனோ என்னவோ. சற்று குழப்பத்துடன் ரிசிவரை கையில் எடுத்தேன்.
“ஹல்லோ. நான் உன் நம்பர கண்டுபிடிக்கமாட்டேன்னு நினைச்சியா? அவ்வளவு சீக்கிரம் உன்ன விட மாட்டேன்,” என்று சொல்லிவிட்டு சிரித்தது ஒரு குரல். இளம் பெண்ணின் குரல்.
“ஹலோ யார் நீங்க?”
“ஹஹ.. குரலை மாத்தி பேசறயாடா ராஸ்கல். என்ன ஏமாத்தமுடியாது. அதுக்கு வேற ஆள பாரு”
“ஹலோ. உங்களுக்கு யார் வேணும்?”
“நீதான் வேணும் அப்படின்னு நான் சொல்லணுமா? ஹ ஹ ஹ. அந்த மாதிரி சினிமா டைலாக் எல்லாம் நான் சொல்ல மாட்டேன். உனக்கே தெரியும் எனக்கு என்ன வேணும்ன்னு” (more…)