எழுத்து

குங்-பூ கற்றுக்கொள்ள சீனா சென்றபொழுது

எஸ். சுரேஷ்

என் குருவிடம் சில பாண்டாக்கள் குங்-பூ கற்றுக்கொள்வதைப் பார்த்தேன்
அவை என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் பயிற்சியை நிறுத்திவிட்டு
கைகளைக் கீழிறக்கி தலை குனிந்து என்னை வணங்கும்
நானும் பதிலுக்கு தலை குனிந்து வணங்கிவிட்டு பயிற்சி செய்வேன்

ஒரு மணி நேர பயிற்சிக்குப் பின் நான் என் இருப்பிடத்துக்கு வந்துவிடுவேன்
பாண்டாக்கள் பயிற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்

ஒளிப்பட உதவி- taringa.net

யஷ்வந்த் ராவ்

காஸ்மிக் தூசி –

images

 

நீங்கள் கடவுளை தேடுபவரா?
எனக்கு ஒரு நல்ல கடவுளைத் தெரியும்.
அவரது பெயர் யஷ்வந்த் ராவ்
அவர் மிகச்சிறந்த ஒரு கடவுள். (more…)

புது தில்லியில் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவம்

 சிகந்தர்வாசி 

சகானோ மற்றும் நரூசேவுக்காக புது தில்லி விமான நிலையத்தில் இன்டர்நேஷனல் பிரிவில் எக்சிட் கேட் வாசலில் காத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமானங்கள் போல் இதுவும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான் வந்திறங்கும். அதற்குப் பிறகு அவர்கள் இம்மிக்ரேஷன், கஸ்டம்ஸ் எல்லாம் தாண்டி வெளியில் வர ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும். அவர்கள் ஜப்பானிலிருந்து வரும் எங்கள் வாடிக்கையாளர்கள். முதல் முறையாக இந்தியா வருவதினால் ப்ராஜெக்ட் மேனேஜரான நான் இங்கு அவர்களுக்காக அரை தூக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். (more…)

பிரபஞ்ச விளையாட்டு

– வேணுகோபால் தயாநிதி –

கரைந்து குழைந்து
காற்றைக் குடிக்கும் சோப்புக்குமிழி
வீங்கிப்பெருத்து மிதந்தலையும்.
மூப்படைந்து துளைகள் தோன்ற
வெடித்துச் சிதறும். (more…)

சோழி

ஹரன் பிரசன்னா

முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங்கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக்கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார். (more…)