எழுத்து

தரகு

ஸ்ரீதர் நாராயணன்

“இவனுக்குத்தான் அந்தப் பொண்ணிருக்கற வீடு தெரியுமா?”

லட்சுமணனின் குரலைக் கேட்டதும் கருணாகரன் சட்டென படித்துக் கொண்டிருந்த பத்திரிகையை கீழேப் போட்டுவிட்டு ஸ்டூலில் இருந்து எழுந்து நின்றான். கையை விறைப்பாக வைத்துக் கொண்டு, கீழுதட்டை மடித்துக் கொண்டு அவனை எடைபோடுவது போல பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணனின் தோரணையைப் பார்த்ததும் இன்னும் பணிவாக

“என்ன சார்” என்றான்.

“தனம் வீடு பத்தி கேக்கறார் சார்” என்றவாறே முத்துராமன் அவர் பக்கத்தில் வந்து நின்றார். பொலிவற்ற பின்னணியில் பிரகாசமான நிறங்கள் தூக்கலாக தெரிவது போல, லட்சுமணனின் மிடுக்கு இன்னமும் அதிகமாக தெரிந்தது.

“எந்தூரு உனுக்கு?” என்றார்.

உடல்மொழியில் இன்னமும் குழைவை சேர்த்துக் கொண்டு “இங்கிட்டுத்தான் சார். மருதுபட்டி” என்றான் கருணாகரன்.

“மருதுபட்டியா? அங்கிட்டு பூரா பயகளும் மாடு பத்திட்டு போற காட்டுப் பயகதான. நீ இங்க துணிய கிழிச்சுப் போட வன்ட்டியாக்கும்”

“இல்லீங்க சார். காலேஜு முடிச்சிட்டு சும்மாங்காட்டிக்கு வேலைக்கு வந்தேன்.”

அவன் சொல்வதை கவனிக்காமல் கடையை சுற்றுமுற்றும் அளவெடுத்துக் கொண்டிருந்தார் லட்சுமணன். முக்கியமாக துணிகளை உதறி, மடித்து பாலித்தீன் பைகளில் போட்டுக்கொண்டிருந்த பெண்களை ஒவ்வொருவராக அளவெடுப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார். கருணாகரன் பேசுவதை நிறுத்திவிட்டது தெரிந்ததும் அவன் பக்கம் திரும்பி

‘இந்தப் பொண்ணு வீடு எங்கிருக்கு?’ (more…)

டுகாட்டி

சித்ரன் ரகுநாத்

கதிரேசன் மணி பார்த்தான். நிஷாவை இன்னமும் காணோம். அவன் பெஸண்ட் நகரில் அந்த காஃபி ஷாப்பின் போர்டிகோ காத்திருப்புப் பகுதியில் வந்து உட்கார்ந்து கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடந்திருந்தது. அவள் வருகிற சுவடைக் காணோம். அவன் ஏற்கெனவே அவள் மேல் மகா எரிச்சலில் இருந்தான். இப்போது எரிச்சல் கோபமாக உருமாறிக்கொண்டிருந்தது. என்ன செய்வதென்றறியாமல் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான். ஆர்டர் எடுக்க அவனைச் சமீபித்த பேரர் பெண்ணிடம் ‘ஒருத்தர் வரணும்’ என்றான்.

நிஷா இன்று நிச்சயமாகச் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கிறாள். அவன் எரிச்சலுக்குக் காரணமே அதுதான். ஊரில் அவனவன் காதலியோடு தினசரி நகர்வலம் வந்துகொண்டிருக்க இவளோ ஒரு முறை பார்த்துக்கொள்வதற்கே இன்றைக்கு நாளைக்கு என்று அலையவிட்டுக் கொண்டிருக்கிறாள். கேட்டால் 1) ஆஃபிஸில் ப்ராஜெக்ட் டெலிவரி, 2) திடீர்னு வீட்ல கெஸ்ட், 3) அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. 4……. என ஆயிரம் காரணங்கள் சொல்வாள். நான் மட்டும் என்ன வெட்டியாகவே இருக்கிறேன்? ஃபோன் செய்தால் முழுசாய் ஒரு நிமிடம்கூடப் பேசாமல் துண்டிப்பதிலேயே குறியாக இருக்கிறாள். ’என்னைப் பார்க்கணும்னு உனக்குத் தோணலையாடி?’ என்று கேட்டால் ‘தினம் பாத்துக்கிட்டாத்தான் லவ்வா?’ என்று மடக்குகிறாள். (more…)

உயர்ந்தெழுதல்

செந்தில் நாதன்

dove-66475_640

 

செய்தி ஒன்றை கொடுப்பதற்காக வருவது போல்
நம் பால்கனி நோக்கி விரைந்து வரும் பறவைகள்
அதைத் தாண்டிப் பறக்கும், எப்போதும் தாண்டிப் பறந்து
நம் கண்முன்னே தம் திறமையை வெளிக்காட்டும்,
நாம் உவமானங்களைத் தவறாகப் புரிந்து கொண்டோம் என்று
நமக்குச் செய்தி சொல்வது போல. (more…)

ஐஸ் க்ரீம்

எஸ். சுரேஷ்

“எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்” என்று குட்டி கங்காரு கேட்க, தாய் கங்காரு அதை மடியில் வைத்துக் கொண்டு ஒரு எம்பு எம்பி வானத்தில் இருந்த மேகத்தைப் பிய்த்து தன் குட்டியிடம் கொடுத்தது

வெண்மேகத் துண்டத்தை கோன் ஐஸ் போல் சப்பிச் சாப்பிட்ட குட்டி, “இந்த வெள்ளை ஐஸவிட கருப்பு ஐஸ்தான் இன்னும் டேஸ்டா இருக்கும்,” என்றது

“அதுக்கு இப்போ சீசன் இல்ல. குடுத்தத சாப்பிடு” என்ற தாயைப் பார்த்து, “இதுவும் நல்லாதான் இருக்கு” என்று சொன்னது குட்டி கங்காரு.

ஒளிப்பட உதவி- Taylor James

திற! – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை

செந்தில் நாதன்

Manto

அந்த சிறப்பு ரயில் மதியம் இரண்டு மணிக்கு அமிர்தசரஸில் இருந்து கிளம்பி எட்டு மணி நேரம் கழித்து முகல்புரா வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்; சிலர் தொலைந்து போயினர்.

காலை பத்து மணி. கிழட்டு சிராஜுதின் கண்ணைத் திறந்து முகாமின் சில்லிட்ட தரையைப் பார்த்தார்; அலை அலையாய்க் குவியும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளைப் பார்த்ததும் அவருக்குக் குழப்பம் அதிகரித்தது. இருண்ட வானத்தை வெறுமையுடன் பார்த்தார். அவரைச் சுற்றி ஒரே களேபரம், ஆனால் காதுகள் அடைத்திருந்தது போல் அவருக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவரை யாராவது பார்த்தால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல: அவர் நரம்புகள் தளர்ந்து போய் இருந்தன; அவர் எடையில்லாமல் ஏதோ ஒரு பாழ்வெளியில் மிதப்பது போல் உணர்ந்தார்.

சூரிய ஒளி சுளீரென கண்ணை உறுத்தியதும் அவர் திடுக்கிட்டு நிகழ்காலத்துக்கு வந்தார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் நினைவுகள் அவரைத் தாக்கின. கொள்ளை. தீ. தள்ளுமுள்ளு. ரயில் நிலையம். தோட்டாக்கள். இரவு. அப்புறம் சகீனா. சிராஜுதின் உடனே எழுந்து பைத்தியக்காரர் போல சுற்றியிருந்த மக்கள் கூட்டத்தில் தேட ஆரம்பித்தார். (more…)