எழுத்து

பூமணியின் அஞ்ஞாடி – 2: இருட்டில் நிகழும் மோதல்கள்

– என். கல்யாணராமன் –

கட்டுரையின் முந்தைய பகுதி – பூமணியின் அஞ்ஞாடி – 1: அறிமுகம்

தான் அஞ்ஞாடி எழுத நேர்ந்த சுவாரசியமான கதையைச் சொல்கிறார் பூமணி. அவர் குழந்தையாய் இருந்தபோது, கட்டை விரல் இல்லாத ஒரு முதியவரைத் தன் கிராமத்தில் ஒரு மரத்தடியில் பார்த்திருக்கிறார். அது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட்டு அவரிடம் விசாரித்திருக்கிறார். 1899ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, அருகிலிருந்த சிவகாசி டவுனுக்குள் கூட்டம் கூட்டமாக மக்கள் புகுந்து நாடார்களின் வீடுகளை சூறையாடியபோது தன் கட்டைவிரலை இழந்ததாக அந்த முதியவர் கூறியிருக்கிறார். நாடார்கள் தங்கள் ஊரைப் பாதுகாத்துக் கொள்ள பயங்கரமாய் பதிலடி கொடுத்திருக்கின்றனர். முதியவர் தன் கையிலிருந்த ஈட்டியை வீசுவதற்குள் நாடார்கள் எறிந்த கல் ஒன்று அவரது வலது கையைத் தாக்கி, அவரது கட்டைவிரலை நசுக்கி விட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறிய நிகழ்வு ஒன்றை நேருக்குநேர் எதிர்கொண்ட அனுபவம், சிவகாசி கலவரம்பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை பூமணியின் மனதில் தூண்டிற்று. (more…)

புத்தக கண்காட்சி – பத்ரி சேஷாத்ரியுடன் ஒரு நேர்முகம்

kizhakku-publication-pathipagam-logo

வலைத்தள கட்டுரைகள், ஃபேஸ்புக் பதிவுகள், தொலைக்காட்சி நேர்முகங்கள் என்று இடையறாது  மும்முரமாக செயலாற்றிக் கொண்டிருப்பவரிடம், புத்தக கண்காட்சியை முன்னிட்டு உரையாட இயலுமா என்று கேட்டதும் தயங்காது திறந்த மனதுடன் பேட்டி அளித்தார்.   கிழக்கு பதிப்பகத்தின் நீண்ட பயணத்தின் ஒரு சிறு பரிமாணத்தை பத்ரி சேஷாத்ரியின் சொற்களில், பதாகை வாசகர்களுக்காக – 

பதாகை: புனைவு, கவிதை, இலக்கிய விமரிசனக் கட்டுரைகள் விஷயத்தில் கிழக்கு பதிப்பகத்தின் தேர்வுக் கொள்கை என்ன? அதாவது, எந்த அடிப்படையில் என்பதை விட, எந்த நோக்கத்தில்- லட்சியம் என்றே சொல்லலாம்- புத்தகங்களைப் பதிப்பிக்கத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

பத்ரி சேஷாத்ரி: நாங்கள் பதிப்பிப்பவை பெரும்பாலும் (1) மறு பதிப்பு (2) நன்கு அறியப்பட்ட மூத்த எழுத்தாளரின் நூல்களின் முதல் பதிப்பு (3) அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகள் என்பதற்குள்ளாகவே அடங்கும். முதல் இரண்டிலும் ஆள்களைத் தேர்வு செய்துவிடுவதால் எழுத்துகளைத் தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. மூன்றாவதில் மிக மிகச் சில முயற்சிகளை மட்டுமே வெளியிடுகிறோம். அதில் பெரிதாக கொள்கைகள் எதையும் வைத்துக்கொள்வதில்லை. இந்த மூன்றாவதில் நாவல்கள் மட்டுமே வரும். அது முடிந்த அளவு வெகுஜன வாசகர்களை ஈர்க்கக்கூடியவையாக இருக்கவேண்டும். அவ்வளவுதான். (more…)

புத்தக கண்காட்சி – அருண் நரசிம்மனுடன் ஒரு நேர்முகம்

america-desi-front

அறிவியல் நூல்கள் மூன்று  எழுதியுள்ள திரு அருண் நரசிம்மன் அவர்களின் அமெரிக்க தேசி என்ற சமூக நாவல் தமிழினி வெளியீடாக இவ்வாண்டு பதிப்பிக்கப்படுகிறது.  இவருடைய புனைவுகதைகளில் காணப்படும் தனித்தன்மையுடனான வடிவத்தை நாவலுக்கு எவ்வகையில் வளர்த்தெடுத்திருக்கிறார் என்று எதிர்பார்க்க வைக்கும் படைப்பு.   தன் நாவல் குறித்தும் இலக்கியம் தொடர்பான பிற விஷயங்கள்  குறித்தும் அவர் மின் அஞ்சல் உரையாடலில் பதாகையுடன் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இங்கு

பதாகை- அமெரிக்க தேசிஎன்ற தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதேசுதேசி விதேசி தெரியும், அது என்ன அமெரிக்க தேசி?

அருண்-  தலைப்பில் இரண்டு சிலேடைகளை யோசித்திருந்தேன்.

அமெரிக்காவில் இந்தியர்களை பொதுவாக ‘தேசி’க்கள் (desis) என்றழைப்பார்கள். தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா செல்லும் என் நாவல் கதாநாயகன் பெயர் தேசிகன். சிலேடைச் சுருக்கமாய் தேசி (அவனுக்கு தன் பெயரைச் சுருக்கினால் பிடிக்காது).

நாவலில் எந்நாட்டினருக்கும் சளைக்காத ஒரு தமிழ் தன்னம்பிக்கையாளனை படைக்க விழைந்தேன். வீட்டில் ‘அமரிக்கை’ எனும் சொல்லை அமெரிக்கை என்றே உச்சரித்துப் பழக்கம். அதனால் தலைப்பின் முதல் பகுதியையும் சிலேடையாய் ‘அமரிக்க’ தேசி என்று வைத்திருந்தேன். அமைந்து வரவில்லை என்பதால் இறுதியில் அமெரிக்க என்றே மாற்றிவிட்டேன். (more…)

மேலே சில பறவைகள்/ Up above, a few birds

மேலே சில பறவைகள்
– கால சுப்ரமணியன்
 
சூரியன் கூட
மேற்கில் மறைந்தான்.
நேரத்தோடு
கூடு நோக்கி
பறந்து சென்றன நாரைகள்.
கீழே
இன்னும் வேலை முடியாத மனிதர்கள்
அக்கம் பக்கம் பார்த்து
(மேலே பார்க்க அவகாசமற்று)
ஆட்கள்
மிருகங்கள் 
வாகனங்கள் 
இல்லையென்று நிச்சயித்துக் கொண்டு
பாறைகளைப் பிளக்க வெடியை வெடித்தனர்.
 
சப்த அதிர்ச்சியில்
ஒரு கணம்
       அரண்டு
       தயங்கிக்
       குழம்பிச்
        சிதறி
மீண்டும் தன் வழியே வரிசைகொண்டு
சாவகாசமாய்
மிதந்து சென்றன பறவைகள் 

(more…)

நித்ய கன்னி – ஆங்கில மொழிபெயர்ப்பாளர் எஸ் சுரேஷ் குறிப்பு

(கருத்து சுதந்திரம் அனைத்து திசைகளிலிருந்தும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நித்யகன்னி நாவலை தான் எழுத நேர்ந்தது குறித்து எம் வி வெங்கட்ராம் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்-

“பெறற்கரிய பேறு பெற்றாள் மாதவி என்னும் பெண்.

“மகவு ஈன்றதும் இழந்த கன்னித்தன்மையைத் திரும்பப் பெறும் பேறுதான் அது. அதன் பயனாக மூன்று அரசர்களையும் ஒரு முனிவரையும் மணந்து, நான்கு குழந்தைகளைப் பெற்று, பெற்ற இடத்திலேயே அவைகளை விடுத்து- கன்னியாகவே தந்தையிடம் திரும்புகிறாள் அவள். அவளுக்கு சுயம்வரம் வைக்க விழைந்த தந்தையின் விருப்பத்தை மறுத்து நித்யகன்னி காட்டுக்குத் தவம் செய்யக் கிளம்பினாள் என்று பாரதம் கூறுகிறது.

“நான் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்; மனித இனத்துக்குப் பெரும் பேறாக இருக்க வேண்டிய அணுசக்தி அசுரசக்தியாக உலகை வதைக்கும் கொடுமையைக் கண்டவன்! வரபலத்தால் இன்பமாக வாழவேண்டிய மாதவி, கானகத்துக்குத் தவம் இயற்றப் போகும் அளவு விரக்தி கொண்டதைக் கண்டு அவள்பால் பரிவு கொண்டேன். இந்தப் பரிவைச் சுற்றித்தான் கதையை வளர்த்தேன்”

(more…)