தொடர்கதை

மானுடம் குடியமர்ந்த கோள் – விடை பெறுதல்

சிகந்தர்வாசி

லிண்டா லூவும் நானும் சி லிங்கின் குடிலை நோக்கி நடக்கத் துவங்கினோம். அவருக்கு நூறு வயது கடந்து விட்டிருந்தது. “நூறு வயதுக்கும் மேல் என்பது சரி, ஆனால் ஒவ்வொரு ஆண்டையும் எவ்வாறு கணக்கு செய்கிறாய்?” என்று கேட்டாள் லிண்டா.

“ஏன், நமக்குக் கற்றுக் கொடுத்தபடி கணக்கு பண்ணப் போகிறோம்,” என்றேன் நான், “689 நாட்கள் ஆனால் ஓராண்டு, இல்லையா?”

“அது செவ்வாய் ஆண்டு. சீனத்து ஆண்டுதான் பூமியின் ஆண்டு, 365 நாட்கள்”

“அப்படியானால் பூமி கனகுப்படிதான் அவருக்கு நூறாண்டுகள் ஆகின்றன என்று சொல்கிறாயா?”

“ஆமாம், அதுதான் சந்தேகமாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும் ஆச்சரியமான மனிதர்தான்”

உண்மையில் அவர் ஆச்சரியமான மனிதர்தான். அவரது தொல் சுருக்கங்கள் நிறைந்திருந்தது, கண்கள் குழியுள் ஆழ உட்சென்றிருந்தன, அவருக்கு கண்களே இல்லை என்பது போல் அவரது தோற்றம் இருந்தது. சி லிங் உயரம் குறைந்த மனிதர், கூன் போட்டிருந்ததால் இன்னும் குள்ளமாகத் தெரிந்தார். லிண்டா லூ உயரமான பெண், அவர் முன் அவள் மிக உயரமாகத் தெரிந்தாள். லிண்டா லூ அவரது பிரியத்துக்குரிய பெண், எனவே அவளைப் பார்த்ததும் அவர் சிரித்தார். வாயில் ஒரு பல் இல்லை. இந்த வயதிலும் அவரது பார்வை பழுதற்றிருந்தது, துல்லியமாகக் காது கேட்டது, சிரிக்கும் வாய்ப்பு எதையும் அவர் தவற விடவில்லை – குறிப்பாக, பெண்களிடம் நிறைய சிரித்துப் பேசினார். (more…)

மானுடம் குடியமர்ந்த கோள் : உண்மையின் துலக்கம்

சிகந்தர்வாசி

…சிறிது தேடலுக்குப்பின் இறுதியில் நான் லிண்டா லூ இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தேன். அவள் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தாள். நான் கண்டுபிடித்ததை எல்லாம் பரபரப்பாக அவளிடம் சொல்லிவிட்டு என் கையில் இருந்த காகிதங்களையும் மின் அஞ்சல் பரிமாற்றங்களின் அச்சு ஆவணங்களையும் அவளிடம் காட்டினேன்.

அவை அனைத்தையும் பொறுமையாக படித்துப்பார்த்த லிண்டா, சிறிது நேரம் மௌனமான, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள். அதன்பின், “என் குழப்பங்கள் சிலவற்றுக்கு இவை விளக்கம் அளிக்கின்றன,” என்றாள் அவள்.

“உனக்கு குழப்பமாக இருந்த விஷயங்கள் எவை? இப்போது என்ன புரிந்தது?|

“புரிந்து விட்டது என்று சொல்ல முடியாது, ஆனா மெல்ல மெல்ல கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைப் பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கிறது,” என்று சிரித்தாள் லிண்டா.

“என்ன நடந்திருக்கும் என்று நீ நினைக்கிறாய்? இதில் சில விஷயங்கள் எனக்குப் புரிகின்றன, ஆனால் செவ்வாய் பயணம் இங்கு எங்கு வந்தது?”

“இதை ஒவ்வொரு அடியாக யோசிப்போம். முதலில் பூமி என்ற கோள். அங்குதான் நம் மூதாதையர் வசித்திருந்தனர். இங்கிருந்து இரவில் நாம் பூமியைப் பார்க்க முடியும்…” (more…)

வாசவதத்தை – 3

– ஸ்ரீதர் நாராயணன் –

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்

சூன்யத்தின் இசை

பெருமுற்றம் திறக்கப்பட்டு பொதுமக்கள் எல்லாரும் உள்ளே வர ஆர்ம்பித்திருக்கிறார்கள். கௌமுதி உற்சவம் நடக்கும்போது ராஜகிருகம் முழுவதும் மக்கள் கூட்டம் வந்து போய்க்கொண்டே இருக்கும்.

‘அமாத்யர் வருவதாக எதிர்பார்த்திருந்ந்தோம்’

வேகசர்மனை வரவேற்றபடிக்கு விஷ்ணுகுப்தர் சொல்கிறார். அதிகாரமையத்தின் ஆணிவேர் அமைச்சகத்தின் தலைமையிடத்தில்தான் இருக்கிறது என்பது அவருடைய பாடங்களில் ஒன்று.

கனமான கருத்த சரீரத்தின் மேல் போர்த்திய பட்டு சீலையுடனும், முத்துச்சரங்கள் தைத்த சரிகை பாகை பறைசாற்றும் அதிகாரதோரணையோடும், சபாமண்டபத்தில் நுழைந்த வேகசர்மன், விஷ்ணுகுப்தரின் முகமனுக்கு சிரந்தாழ்த்தி பதில் முகமன் செய்துவிட்டு, சூரசேன வம்சத்தின் பராக்கிரமங்களை எடுத்துரைக்கும் வாழ்த்துகளைக் கூறி மகதத்தின் அரசவைக்கு வந்தனம் கூறுகிறான். யவனர்களை புறம்காட்டிய பர்வதவர்த்தனின் புகழ் பெருமதிப்புடன் எட்டுதிக்கும் பரவியிருந்தது. அவன் பின்னால் அணிவகுத்து நின்ற தூதுக்குழுவின் முகப்பில் பாசரின் வர்ணனைகள் மெய்யாகி வந்து நின்றது போல் இருக்கிறாள் வாசவதத்தை. அதுவரை அபிநயத்தில் லயித்திருந்த சபை நடுவே, புத்துருக் கொண்டு காப்பியத்திலிருந்து கிளம்பி வந்தது போல் நின்றிருக்கிறாள். (more…)

மானுடம் குடியமர்ந்த கோள் : திரிகளைத் தொடர்தல்-2

-சிகந்தர்வாசி-

mail-exchanges

முதல்நிலை தகவலறிக்கைகள்
முதல்நிலை தகவலறிக்கைகள் – 2
மானுடம் குடியமர்ந்த கோள் – விபரீத துவக்கங்கள்
திரிகளைத் தொடர்தல்

திரிகளைத் தொடர்தல்-2

இந்த உரையாடலுடன் சில கடிதங்களின் மங்கிய பிரிண்ட் அவுட்களும் எனக்குக் கிடைத்தன. இவை வரலாற்றின் கதவுகளைச் சற்றே திறப்பதாக இருந்தன. மெல்ல மெல்ல என் மக்களின் சரித்திரம் என்னை தன்னுள் இழுத்துக் கொள்கிறது.

To: All Employees of SpaceXploration Corp
From: Mark Podolski, CEO

டீம்,

நாம் சரித்திரம் படைப்போம் என்று உறுதியளித்தேன். நாம் செய்யப்போவது மனித வரலாற்றில் ஈடு இணையற்ற சாதனையாகக் கொண்டாடப்படும். அதகான முதல் அடியை எடுத்து வைக்கப் போகிறோம்.

செவ்வாய் கோள் நோக்கி நாம் சென்ற இரு முறை திட்டமிட்ட பயணங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அவற்றுக்கான காரணங்கள், அவற்றின் நோக்கங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த பயணங்களின் பலன்களை வெளிப்படுத்தும் வேளை வந்துவிட்டது. (more…)

மானுடம் குடியமர்ந்த கோள் : திரிகளைத் தொடர்தல்

– சிகந்தர்வாசி – 

பல பெரும்பணக்காரர்கள் பூமியிலிருந்து புறப்பட்டு வானூர்தியில் வரும் வழியில் பயங்கரமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பது என் ஆர்வத்தைப் பெருக்குவதாக இருந்தது. இவர்களில் எத்தனை பேர் பிழைத்துக் கொண்டனர்? பிராணவாயுப் பிரச்சினை எதனால் ஏற்பட்டது? விடையற்ற கேள்விகள்.

ஆங்காங்கே சிதறிக் கிடந்த வானூர்திகளில் என் தேடலைத் தொடர்ந்தேன். அதில் ஓர் கலத்தில் விண்வெளியாய்வு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடன் ஒரு பொறியியலாளர் நிகழ்த்திய உரையாடல் ஒன்றின் அச்சுப் பிரதி கிடைத்தது. (more…)