ராண்டோ

பிரார்த்தனை – 2

 எஸ். சுரேஷ் –

கிரெடிட் கார்டுக்காகவோ இல்லை பெர்சனல் லோனுக்காகவோதான் யாரோ அழைக்கிறார்கள் என்று அந்த நம்பரைப் பார்த்ததும் நினைத்தேன். நாலு வார்த்தை நன்றாக திட்டலாம் என்று மொபைலை எடுத்தேன்.

“என் மனைவி உங்களுடன் இரண்டாம் வகுப்பு வரை ஃபிலோமினா ஸ்கூலில் படித்தார்” என்று அந்த ஆண்குரல் ஆரம்பிக்க, நான் குழம்பிப் போனேன்.

“என் பெயர் அசோக். தெரியாதவர்களுக்குப் போன் செய்தால் அவர்கள் நான் ஏதோ பர்சனல் லோன் கொடுக்கும் ஆள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

இறுக்கமாக இருந்த என் முகம் தளர்ந்தது. நானும் வாய்விட்டுச் சிரித்தேன்.

“அந்த மாதிரி பண்ணி வச்சிட்டாங்க சார் இவங்கெல்லாம்”.

“ஆமாம்,” என்றேன் நான்.

“அத விடுங்க சார். பேச ஆரம்பிச்சா அத பத்தி நாள் பூரா பேசலாம்” என்றார் அவர். “நான் உங்கள கூப்பிட்டது வேற ஒரு விஷயமா”.

‘சொல்லுங்க” என்றேன்.

“என் மனைவி பெயர் தனுஜா. நாங்கள் தனு என்று கூப்பிடுவோம். அவர் உங்களுடன் இரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்” (more…)

ஒற்றைப் புன்னகை வெளிச்சம் – ராண்டோ

 

 

நடுநிசி நேரத்தில் நான் அங்கு வந்து சேர்ந்தேன்.
காரிருளில் மூழ்கி இருந்த அந்த பங்களாவுக்குள்
பணியாள் காட்டிய மெல்லிய டார்ச் ஒளியில்
தட்டுத் தடுமாறி பயத்துடன் சென்று கொண்டிருந்தவனுக்கு
பரவசம் அளித்தது பக்கத்து அறையில் இருந்த
சுந்தரியின் ஒற்றை புன்னகை

வெளிச்சத்தில் அடுத்த நாள் காலை பார்த்தபோதுதான்
தெரிந்தது அது ஒரு சிரிக்கும் கருங்குரங்கு பொம்மை.

– எஸ். சுரேஷ் (more…)

அன்பெனும் மழை – ராண்டோ

 

“மேகங்கள் கறுத்து மழை பெய்யாவிட்டால் என்ன?
நம் ஊரில் என்றும் பெய்கிறது அன்பெனும் மழை”
என்று முழங்கிக் கொண்டிருந்தார் பேச்சாளர்

அந்த வழியாக சென்றுகொண்டிருந்த
அழுக்கு வெள்ளை நாய் ஒன்று
அவரைப் பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது

பேச்சை நிறுத்திவிட்டு அவர் நாயை முறைத்தார்
குரைப்பதை நிறுத்திவிட்டு நாய் அவரை முறைத்தது

நாய் ஒய்ந்துவிட்டதாக நினைத்து அவர் பேச்சை தொடந்தார்
நாய் மறுபடியும் கோபமாக குரைத்தது

கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்தார்
நாய் அவரைப் பார்த்து பலமாக சிரித்துக்கொண்டே
அங்கிருந்து ஓடி விட்டது.

ஒரு கையில் கல்லும்
மறு கையில் மைக்கும் வைத்துக் கொண்டு
பிரசங்கத்தை தொடர்ந்தார் பேச்சாளர்

(எஸ். சுரேஷ்) (more…)

புலியின் வாயில் – ராண்டோ

 

புலியின் வாயில் சிக்கிய முள்கரண்டி.
வாய்மூட முடியாதபடி படுவேதனை.
மரத்தடியில் இளைப்பாறிய புலி
சங்கடவிழிகள் மின்னுவதை
ஊரார் கண்டனர்.

அன்று ஒரு நாளைக்கு
அடர்கானகம் சற்றே தளர்ந்தது.

நீர் சொட்டி சடைதரித்த
பக்கத்து காட்டுப் புனுகுப்பூனை
அடங்கமாட்டாமல் சிரித்தது.

தலையைத் தூக்கி முதலைகள் விசாரித்தன.
இளைய இருமுயல்கள்
சற்றே கூடிநின்று ஒளிமணி மூக்கு
சுழித்துச் சென்றன.

மரக்கிளைமேல் குரங்கு;புதர் மறைவில் மான்
ராச்சுற்றி திரும்பிய ஓநாய்.

சில நிமிட சிரிப்புக்குப்பின்
எல்லாவற்றுக்கும் ஒரே கேள்வி
மீதமிருக்கும் கேக் எங்கே?

(ரா கிரிதரன்) (more…)