– எஸ். சுரேஷ் –

கிரெடிட் கார்டுக்காகவோ இல்லை பெர்சனல் லோனுக்காகவோதான் யாரோ அழைக்கிறார்கள் என்று அந்த நம்பரைப் பார்த்ததும் நினைத்தேன். நாலு வார்த்தை நன்றாக திட்டலாம் என்று மொபைலை எடுத்தேன்.
“என் மனைவி உங்களுடன் இரண்டாம் வகுப்பு வரை ஃபிலோமினா ஸ்கூலில் படித்தார்” என்று அந்த ஆண்குரல் ஆரம்பிக்க, நான் குழம்பிப் போனேன்.
“என் பெயர் அசோக். தெரியாதவர்களுக்குப் போன் செய்தால் அவர்கள் நான் ஏதோ பர்சனல் லோன் கொடுக்கும் ஆள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.
இறுக்கமாக இருந்த என் முகம் தளர்ந்தது. நானும் வாய்விட்டுச் சிரித்தேன்.
“அந்த மாதிரி பண்ணி வச்சிட்டாங்க சார் இவங்கெல்லாம்”.
“ஆமாம்,” என்றேன் நான்.
“அத விடுங்க சார். பேச ஆரம்பிச்சா அத பத்தி நாள் பூரா பேசலாம்” என்றார் அவர். “நான் உங்கள கூப்பிட்டது வேற ஒரு விஷயமா”.
‘சொல்லுங்க” என்றேன்.
“என் மனைவி பெயர் தனுஜா. நாங்கள் தனு என்று கூப்பிடுவோம். அவர் உங்களுடன் இரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்” (more…)


