எழுத்து

நினைவு – ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை

ஏ. நஸ்புள்ளாஹ்

நினைவு நகர்ந்து நகர்ந்து
கடலில் இறங்குகிறது

எனது படுக்கையறையிலிருந்து
நழுவிய நினைவு அது

பால்யம் தாழ்ப்பாள் இட்டுக் கொள்ள
பிரிந்து
ஒதுங்கிய நினைவு அது

இரவைக் கடப்பதைப் போல
அல்லது
ஒரு கடலைக் கடப்பதைப் போல
நினைவைக் கடக்க முடியவில்லை

நினைவோடு சேர்ந்து
நானும் கடலில் இறங்குகிறேன்

இச்சம்பவத்தை மேசைமீது
வைத்திருக்கிறேன்
முடியுமானவர்கள் கவிதை எழுதிக் கொள்ளுங்கள்.

எழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

பிறப்பு / குடும்பம் / படிப்பு / பணி பற்றி? 

கோவை சிங்காநல்லூரில் 1984ல் பிறந்தேன். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு இரண்டு மாதங்கள் பின்; இந்திரா காந்தி படுகொலைக்கு இரண்டு மாதங்கள் முன். நடுத்தர வர்க்கக் குடும்பம். தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு வழக்கில் பெல்லாரி சிறை சென்றவர். சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றிய‌ என் தந்தைக்குப் பணிமாற்றல் வர, பள்ளிப்படிப்பு முழுக்க ஈரோட்டில். பின் சென்னை அண்ணா பல்கலை.யில் (கிண்டி பொறியியல் கல்லூரி) கணிப்பொறி இயல் படிப்பு. கடந்த பத்தாண்டுகளாக பெங்களூரில் மென்பொருள் தர உத்தரவாதப் பொறியாளர் பணி. காதல் திருமணம். இரண்டு ஆண் பிள்ளைகள்.

முதன் முதலாக எழுதிய கதை / கவிதை?

பள்ளி நாட்களில் பதின்மத்தின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்தேன். வாரமலர் பாணி கவிதைகள். 1998 வாக்கில் ‘ப்ரியமுடன் கொலைகாரன்’ என்ற தலைப்பில் ராஜேஷ் குமார் பாதிப்பில் ஒரு நாவல் எழுதினேன். பின் 2001ல் குமுதம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என்ற முதல் சிறுகதையை எழுதினேன். இவை இரண்டையுமே இன்னும் பிரசுரிக்கவில்லை. கல்லூரிக் காலங்களில் நிறையக் கவிதைகள் – பெரும்பாலும் வைரமுத்து பாணி புதுக்கவிதைகள். ‘பரத்தை கூற்று’, ‘தேவதை புராணம்’, ‘காதல் அணுக்கள்’ என இதுவரை நான் எழுதியுள்ள கவிதைத் தொகுப்புகளின் ஆதி வடிவம் அந்நாட்களில் எழுதப்பெற்றவை தாம். 2007ல் குங்குமம் வாசகர் கவிதைத் திருவிழாவில் என் ‘ஒருத்தி நினைக்கையிலே…’ வைரமுத்துவால் முத்திரைக்கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அச்சுக்கண்ட என் முதல் எழுத்து அது.

சிறு வயதில் வாசித்தவை? வாசிப்பு படிக்கட்டு?

உத்தேசமாய் இரண்டாம் வகுப்பு படித்த நேரம். என் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். அதில் வந்த ‘ப்ளாண்டி’ மற்றும் ‘ஃப்ளாஷ் கார்டன்’ காமிக்ஸ் பக்கங்களில் தான் என் வாசிப்பு தொடங்கியது. ஈரோட்டில் நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ‘தின மலர்’ வாங்குவார். வெள்ளியன்று இணைப்பாக வரும் சிறுவர் மலரை வாசிப்பதில் எனக்கும், எனக்குப் பல்லாண்டு மூத்த உரிமையாளர் மகனுக்கும் தகராறு வர, அதன் பொருட்டே என் வீட்டில் ‘தின மலர்’ வாங்கத் தொடங்கினர். அதுவும் வெள்ளியன்று மட்டும். தொடர்ந்து பிற நாளிதழ்களின் சிறுவர் இணைப்புகள் (‘தங்க மலர்’, லேசாய் ‘சிறுவர் மணி’) மற்றும் சிறுவர் இதழ்கள் (‘பூந்தளிர்’, ‘அம்புலி மாமா’) அறிமுகமாகின‌. அப்புறம் காமிக்ஸ் இதழ்கள் (‘ராணி காமிக்ஸ்’ அப்புறம் சில‌ ‘லயன் காமிக்ஸ்’, ‘முத்து காமிக்ஸ்’) வாசித்தேன். பள்ளிக்கு காமிக்ஸ் எடுத்துப் போய் பிரச்சனையாகி உள்ளது.

இதற்கு அடுத்த கட்டமாய் நாளிதழ்களின் பிற‌ இணைப்புகள் (‘வார மலர்’, ‘கதை மலர்’, ‘குடும்ப மலர்’, கொஞ்சம் ‘தினமணிக் கதிர்’), மாத நாவல்கள் (‘மாலைமதி’, ‘கண்மணி’, ‘ராணி முத்து’), ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்கள் (உடன் சுபா, பிகேபி) வாசித்தேன். பிறகு பக்கத்து வீட்டுக்காரர் பைண்ட் பண்ணி வைத்திருந்த‌ ‘பொன்னியின் செல்வன்’. கோடை விடுமுறையில் என் அத்தை கிருஷ்ணவேணி அலுவலக நூலகத்திலிருந்து லக்ஷ்மி, ரமணிச் சந்திரன், சாண்டில்யன் நாவல்களை எடுத்து வந்தார். ஒன்பதாம் வகுப்பில் என் தமிழாசிரியை தனலெட்சுமி பாலகுமாரனை அறிமுகம் செய்தார். அதே காலகட்டத்தில் சுஜாதாவும் அறிமுகமானார். இன்றளவும் சுஜாதா என் பேராதர்சம்.

பிறகு குமுதம் வெளியிட்ட தீபாவளிச் சிறப்பிதழ்களின் வழி தான் முதன் முதலாக‌ நவீன இலக்கியப் பரிச்சயம். பதினொன்றாம் வகுப்பில் பள்ளி (ஈரோடு இந்து கல்வி நிலையம்) நூலகத்தில் வைரமுத்து உள்ளிட்ட நிறைய நூல்கள். அது முக்கியமான திறப்பு. பிறகு கல்லூரிக்காக‌ சென்னை வந்ததும் கன்னிமரா நூலகமும், தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகமும் என்னைத் தத்தெடுத்துக் கொண்டன. கணிசமான நவீனப் படைப்பாளிகளை அங்கேதான் வாசித்தேன். ‘ஹிக்கின்பாதம்ஸ்’, ‘லேண்ட்மார்க்’, ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’, ‘எனி இந்தியன் புக்ஸ்’, சென்னை புத்தகக் காட்சிக‌ள் என் புத்தக வேட்டைக்களங்களாயின. சுந்தர ராமசாமியும், ஜெயமோகனும் மிகப் பிடித்த எழுத்தாளர்கள் ஆகினர். வேலைக்குச் சேந்த கடந்த பத்தாண்டுகளில் என் வாசிப்பு கணிசமாய்க் குறைந்து விட்டது. எழுதவே நேரமிருப்பதில்லை என்பது முக்கியக் காரணம். இதைச் சொல்கையில் வருத்தமும் அவமானமும் ஒருசேர எழுகிறது.

எப்போது எழுத்தாளாராக உணர்ந்தீர்கள்?

பதின்மங்களின் தொடக்கத்தில் என நினைக்கிறேன். எனக்கு எழுத வேண்டும் என்ற ஆசையே ராஜேஷ் குமாரின் ‘எவரெஸ்ட் தொட்டு விடும் உயரம்தான்’ நாவலை வாசித்துத் தான் உண்டானது. அது அவரது சுயசரிதை நூல். தான் எழுதிய முதல் கதைகள், பிரசுரத்திற்குச் செய்த முயற்சிகள், பத்திரிக்கை ஆசிரியர்களுடனான அனுபவங்கள், குடும்பத்தாரின் எதிர்வினை என்பதை எல்லாம் ஒரு சுயமுன்னேற்றப் பாணியில் அதில் சொல்லி இருப்பார். பதினொன்றாம் வகுப்பில் ‘My Role Model’ எனக் கட்டுரை எழுதச் சொன்ன போது சுஜாதாவைத் தான் முன்மாதிரியாகக் குறிப்பிட்டு எழுதினேன். அவரைப் போல் சிறந்த பொறியாளனாகவும், தேர்ந்த‌ எழுத்தாளனாகவும் வர வேண்டும் எனச் சொல்லி இருந்தேன். அப்போது யாஹூவில் என் முதல் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய போது writercsk என்றே கொடுத்தேன். அதுவும் சுஜாதாவின் பாதிப்பில் தான். பின் Geocities-ல் ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிய போதும், எனக்கான‌ வலைதளத்தை உருவாக்கிய போதும், ட்விட்டர் கணக்குத் துவங்கிய போதும் அப்பெயரையே தொடர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் எழுத்தாளன் என்பதற்கான எந்த நிரூபணத்தையும் செய்யாத சமயத்தில் ‘ரைட்டர்’ என்ற அந்த முன்னொட்டு கடும் கேலிகளை உருவாக்கியது. இன்று ஓரளவுக்கு அதற்கான படைப்புகளை எழுதி விட்ட போதிலும் கூட அது தொடரவே செய்கிறது.

கவிதை, சிறுகதை, நாவல் என மூன்று வடிவங்களிலும் இயங்கி இருக்கிறீர்கள். எது தங்களுக்கான வடிவம் என எண்ணுகிறீர்கள்? எது சவாலான வடிவம்?

 இவை போக அபுனைவு என்பதையும் நான்காவதாய் இதில் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கான வடிவம் எது என அறுதியிட்டுச் சொல்லும் காலம் இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். தொடர்ந்து எழுதினால் அடுத்த பத்தாண்டுகளில் தெரிய வரலாம். இதுவரையிலான எழுத்து அனுபவத்தில் சிறுகதையே எனக்குப் பிடித்த வடிவமாக இருக்கிறது. கவிதை, நாவல், அபுனைவை விடவும். ஒரே ஒரு நாவல் எழுதியுள்ள குறுகிய அனுபவத்தில் நாவல் வடிவம் என்பது சிறுகதை போல் சவாலாக எனக்குத் தோன்றவில்லை. நாவலுக்கு உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம். அவ்வளவு தான்.

காந்தியை மையமாக கொண்டு ஒரு புனைவை எழுத வேண்டும் என்றொரு எண்ணம் உதித்தது எப்போது? 

காந்தி பற்றிய முதல் சித்திரம் என் தாத்தாவின் வழியாகவே என்னை வந்தடைந்தது. எந்தவொரு இந்தியப் பள்ளி மாணவனையும் போல் பால்யத்தில் காந்தி என்பவர் மஹாத்மா என்பதில் தொடங்கி, பின் காந்தி போலியானவர், நேதாஜியே அசலான சுதந்திரப் போராளி என்று எண்ணும் பதின்மங்களைக் கடந்து தான் நானும் வந்தேன்.

பின் கமல் ஹாசனின் ‘ஹே ராம்’ திரைப்படம் ஒரு முக்கியமான திறப்பு. அதைத் தொடர்ந்து தான் காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலை வாசித்தேன். 2009ல் என் முதல் நூல் ‘சந்திரயான்’ வெளியான பின் நான் எழுத விரும்பிய நூல் காந்தி கொலை வழக்கு பற்றியது. அதற்காக நிறைய நூல்களை வாசித்திருந்தேன். ஆனால் அம்முயற்சி கைகூடவில்லை. (பிற்பாடு என். சொக்கன் அதை எழுதினார்.)

அப்புறம் ‘காலச்சுவடு’, ‘தீராநதி’, ‘உயிர்மை’ முதலான இலக்கியச் சிற்றிதழ்களில் வந்த காந்தி குறித்த சில கட்டுரைகளும் விசாலமான பார்வையைப் பெற உதவின. இவை எல்லாவற்றுக்கும் மேல் ஜெயமோகன் காந்தி குறித்து தன் தளத்தில் செய்த தொடர் விவாதங்கள் (பிற்பாடு இவை ‘இன்றைய காந்தி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டன). காந்தியை நான் முழுக்க மறுஅறிமுகம் செய்து கொண்டது அவற்றின் வழியாகவே.

காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏற்கனவே நான் அரசல் புரசலாகக் கேள்வியுற்றிருந்தாலும் மேற்சொன்ன விவாதத்தில் இடம்பெற்ற ‘காந்தியும் காமமும்’ என்ற தலைப்பிலான நான்கு கட்டுரைகள் தாம் அது பற்றிய விரிந்த தகவல்களையும் கருத்துக்களையும் அளித்தன. அங்கே இந்நாவலுக்கான விதை முதலில் விழுந்தது. ஆனால் முளைத்துக் கிளைத்து விருட்சமாக சுமார் எட்டாண்டுகள் பிடித்திருக்கிறது.

 ஒரு ஆராய்ச்சி அபுனைவு நூலாக இல்லாமல் புனைவாக எழுதியதற்கு ஏதேனும் தனித்த காரணங்கள் உண்டா ?

காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஓர் அபுனைவு நூல் எழுத முடியும். சிலர் ஆங்கிலத்தில் எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இவ்விஷயம் தொடர்பான‌ விடுபடல்கள் ஒரு புனைவுக்குரிய சாத்தியத்தை அளிப்பதாக‌ப்பட்டது. அதாவது இதில் ஒரு Drama இருந்தது. குறிப்பாக நாவலுக்குரிய கேன்வாஸ் இது எனத் தோன்றியது. புனைவு வடிவில் இதை எழுதக் கூடுதல் சுதந்திரமும் உண்டு என்பதை உணர்ந்தேன். கேத்ரின் க்ளமெண்ட் எழுதிய Edwina and Nehru ஓர் உதாரணம்.

என் முதல் நாவலை எழுத ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேலாக யோசித்து வந்தேன். இதை என் முதல் நாவலாகக் கொண்டால் நல்லது என்றும் எண்ணம் வந்தது. ஒரு கட்டத்தில் புத்தகக் காட்சிக்குள் நாவலை எழுத அவகாசம் இல்லை எனும் போது அபுனைவு நூலாக எழுதி விடலாமா என்று கூடத் தோன்றியிருக்கிறது. எழுத்தாளர் என். சொக்கன் தனிப்பேச்சில் இதை அபுனைவாக எழுதியிருக்க வேண்டும் என்று அங்கலாய்த்தார். நாவலாக வரவில்லை என்றால் அபுனைவாய் எழுதியிருப்பேன்.

இன்னும் சொல்லப் போனால் இஃது நாவல் என்றாலும் உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கும் போது அபுனைவுக்கும் புனைவுக்கும் இடைப்பட்ட படைப்புதான் என்பேன்.

காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து தற்காலத்தில் எழுதுவதற்கான தேவை என்ன? காந்தியை மையமாக கொண்ட களம் என்றாலும், குறிப்பாக பிரம்மச்சரிய பரிசோதனைகளை நாவலின் பின்புலமாக கொண்டு எழுதியதற்கு என்ன தூண்டுதல்?

லட்சக்கணக்கான பக்கங்கள் காந்தியைப் பற்றி எழுதப்பட்டு விட்டாலும் அவர்களில் பெரும்பாலானோர் காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை மழுப்பலாகவே கடந்து விடுகிறார்கள். எனில் அவர் மஹாத்மா என நம்புவோர் கூட இவ்விஷயத்தில் மட்டும் பிழை செய்திருக்கிறார் என நினைக்கிறார்கள் என்று தானே அர்த்தம்! இதன் இன்னொரு முனையில் அவர் பெண்களைப் பரிசோதனைப்பண்டமாகப் பயன்படுத்திய ஆணாதிக்கவாதி என்ற ரீதியில் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தவர்களும் உண்டு. அதனால் தான் பழுப்பாய் நின்ற அந்த பகுதியை நெருங்கிப் பார்க்க ஆசைப்பட்டேன்.

இன்னொரு விஷயம்: ஆரம்பம் முதல் என் எழுத்துக்களில் காமம் என்ற அம்சம் தொடர்ந்து மையச் சரடாக அல்லது பிரதான இழைகளில் ஒன்றாக இருக்கிற‌து. தணிக்கைச் சிக்கல்கள் குறைந்த என் சமூக வலைதள எழுத்துக்களில் இது வெளிப்படையாகத் துலங்கும். ரமேஷ் வைத்யா கூட இது பற்றி, விடலைத்தனம் இன்னும் விடவில்லை, எனக் குறிப்பிட்டார். அதுவும் காரணம் என நினைக்கிறேன். மஹாத்மாவைப் பற்றி எழுத‌ எடுத்தால் கூட காமம்தான் முன்னே வந்து நிற்கிறது!

இந்த நாவலை எழுதுவதற்கு உங்களுக்கு ஒன்றரை மாதம் தான் ஆனது என்பது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனினும் பின்புல தயாரிப்புக்கு எத்தனை காலம் ஆனது? என்னவிதமான நூல்களை வாசித்தீர்கள்? நாவலின் இறுதியில் நூற்பட்டியல் இருக்கிறது. அந்நூல்கள் உங்கள் புரிதலை எப்படி செம்மையாக்கியது?

பின்புலத் தயாரிப்புக்குக் கூடுதலாய் ஒரு மாதம் ஆகி இருக்கும். தொடர்ச்சியாக அல்லாமல் ஆறேழு மாதங்களாக‌ அவ்வப்போது வாசித்துக் கொண்டிருந்தேன் – திட்டமிட்டு என்றில்லாமல் தொடர்புடைய நூல்கள் அறிமுகம் ஆகும் போதெல்லாம் அல்லது கிடைக்கும் போதெல்லாம். காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய கிர்ஜா குமாரின் இரண்டு நூல்கள், ஜாட் ஆடம்ஸின் ‘Gandhi: Naked Ambition’, மநுவின் டைரிகள் குறித்த ‘இந்தியா டுடே’ சிறப்பிதழ், காந்தியின் உதவியாளர் நிர்மல் போஸ் எழுதிய‌ ‘My Days with Gandhi’ என்ற‌ நூல் ஆகியன முக்கியமாய்ப் பயன்பட்டன. இன்னொரு விஷயம் இந்நூல்களில் என்னுடைய‌ நாவலுக்கு அவசியப்படும் எனத் தோன்றிய பகுதிகளை மட்டுமே வாசித்தேன். அதனால் படிக்கும் நேரம் குறைந்தது.

சம்பவங்களின் கால வரிசை, இடம் மற்றும் பிற விவரங்களை இந்நூல்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. நாவல் அசல் வரலாற்றுக்கு அருகிலானது என்பதால் இது தேவைப்பட்டது. தவிர, பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய வெவ்வேறு கோணங்களை இவை எனக்கு அளித்தன. அவற்றின் அடிப்படையிலும், பொதுவான மானுட உளவியல் சார்ந்தும் காந்தி, மநு, மற்றும் பிறர் தரப்பு என்னவாயிருக்கும் என்பது பற்றிய புரிதலை வந்தடைந்தேன். அதுவே நூல்களின் முக்கியப் பங்களிப்பு.

நாவலுக்கு என்னவிதமான கவனம் கிட்டியது? விமர்சனங்கள் எத்தகையவை? 

நாவலுக்குப் போதிய கவனம் கிட்டவில்லை என்ற மனக்குறை இருக்கிறது. ரமேஷ் வைத்யா புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரை ஒரு பரபரப்பான அறிமுகம். பா.ராகவன், சித்துராஜ் பொன்ராஜ் மற்றும் நீங்கள் ஃபேஸ்புக்கில் நாவல் பற்றிய சிறு குறிப்புகள் எழுதினீர்கள். சென்னை காந்தி கல்வி நிலைய சேர்மன் மோகன் நாவலைப் பாராட்டி மின்னஞ்சல் செய்திருந்தார். அபிலாஷ் ஒரு நல்ல‌ விமர்சனக் கட்டுரை எழுதினார். இந்த‌ 9 மாதங்களில் வந்த‌ முதலும் கடைசியுமான கட்டுரை அதுவே. தமிழ்ச் சூழலில் இதுவே அதிகபட்சம் என்று திருப்திப்பட முகாந்திரமுண்டு என்றாலும் இந்நாவல் இன்னும் கொஞ்சம் கூடுதல் வாசக உரையாடலுக்குத் தகுதி பெற்றது என நம்புகிறேன். அதனால் அதைச் சந்தைப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் விமர்சனக் கட்டுரைப் போட்டி ஒன்றை நானே அறிவித்திருக்கிறேன். பார்க்கலாம்.

காந்தியை புரிந்து கொள்ள இந்நாவல் உதவுகிறது. ஆனால் அதைத் தாண்டி நாவலுக்கு என்றிருக்கும் எக்காலத்திற்கும் உரிய அறக் கேள்வியை நாவல் அடையவில்லை எனும் விமர்சனத்தைப் பற்றி? மேலும் காந்தியை இன்று ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா? குறிப்பாக பிரம்மச்சரிய தலம் சார்ந்து?

‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை நீண்ட சிறுகதையாகப் பார்ப்போரும் உண்டு. அதாவது நாவல் என்பதற்கான பல கோண தரிசனம் போதுமான அளவு திரளவில்லை என்ற பொருளில். இருக்கலாம். அதன் அபுனைவுத்தன்மை பற்றிக் கவலை வெளியிட்டோர் உண்டு. படைப்பின் தரம் பற்றிய விமர்சனங்களுக்கு – அது பாராட்டு என்றாலும் கூட – எழுத்தாளன் பதிலளிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். அது ஒரு சங்கடம். ஆனால் நான் விமர்சனங்கள் எவற்றையும் உதாசீனம் செய்வதில்லை. அவற்றைப் பொருட்படுத்திப் பரிசீலித்து எனக்குச் சரி எனத் தோன்றுவனவற்றை என் எதிர்காலப் படைப்புகளுக்கான உள்ளீடாகக் கொள்கிறேன். இதற்கும் அதைச் செய்ய வேண்டும்.

காந்தியம் இன்னும் காலாவதியாகவில்லை என நான் நம்புகிறேன். அதன் அவசியம் நிச்சயம் இருக்கிறது. குறிப்பாக அவரது அஹிம்சை என்ற போதனை. இன்றைய சகிப்பின்மை நிறைந்த சூழலில் காந்தி நம் நாட்டிற்கு தேவைப்படும் சிந்தாந்தவாதி. அதனால் அவரை மறுவாசிப்பு செய்ய வேண்டியது அவசியமானது. பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏன் பேச வேண்டி இருக்கிறது எனில் காந்தியின் பிழையான கருத்தாக்கங்களையும் நாம் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தான் (அவரே போதித்த‌ சத்தியம்). அதை மட்டும் கள்ளத்தனமாய்ப் பேசாது கடக்கும் ஒவ்வொரு முறையும் காந்தியை அவமதிக்கிறோம். முக்கால் நூற்றாண்டு முன் அவரே முற்போக்காக அது பற்றிப் பொதுவெளியில் பேச விரும்பினார். இன்று இத்தனை முன்னேறிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு நாம் ஏன் தயங்க வேண்டும்?

 ‘மின் தமிழ்’ மின்னிதழ் பற்றி, அதன் நோக்கம் செயல்பாடுகள், செயல்திட்டங்கள்.

தமிழ் மின்னிதழ் தொடங்கிய போது இருந்த உத்வேகம் இப்போது இல்லை என்றே சொல்வேன். நான் மிக விரும்பும் எழுத்தாளர்களை விரிவான நேர்காணல்கள் செய்ய வேண்டும் என்பதுதான் இதழின் பிரதான நோக்கமாக இருந்தது. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் என அது திருப்திகரமாகச் சாத்தியமானது. அடுத்து இணையத்தில் புதிய எழுத்துக்களுக்கான ஒரு களமாக அது இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் இன்றைய‌ சமூக வலைதள யுகத்தில் அதற்கான தேவை இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த இதழில் கிடைத்த அனுபவம் கொண்டு அப்படியான தளமேதும் இன்று தேவையில்லை என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.

தவிர, சொந்த வாழ்வியல் அழுத்தங்கள், என் எழுத்து வேலைகள் தாண்டி இதழுக்கு நேரம் ஒதுக்குவது சிரமமானதாக இருக்கிறது. அது முழுமையாய் என் இதழாகவே இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருப்பதால் ஆசிரியர் குழு ஒன்று வைத்துக் கொள்வதில் விருப்பமில்லை. அதனால் தான் காலாண்டிதழாகத் தொடங்கப்பட்ட தமிழ் இப்போது தேவைப்படும் நேரத்தில் மட்டும் வருகிறது. உதாரணமாய் அடுத்து வரப்போவது கலைஞர் சிறப்பிதழ். இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகக்கூடும்.

ஆதர்ச எழுத்தாளர்தமிழ்/ பிற மொழி யார்?

ஏற்கனவே இந்நேர்காணலில் பிடித்த எழுத்தாளர்கள் என்பதாக‌ ஆங்காங்கே சிலரைக் குறிப்பிட்டிருந்தேன். ஒரே ஒருவர் மட்டுமே சொல்ல வேண்டுமெனில் ஜெயமோகன். புனைவு மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும், தனி வாழ்விலும் கூட‌ அவர் எனக்கு வழிகாட்டி. ஆங்கிலத்தில் நான் பெரும்பாலும் அபுனைவு தான் வாசித்திருக்கிறேன். அதுவும் குறைவான அளவில். அதனால் பிடித்த எழுத்தாளர் எனக் குறிப்பிட்டுச் சொல்லுதல் சரி வராது. ஆனாலும் அப்படி ஒருவரைச் சொல்ல விரும்புகிறேன். அவர் எழுத்தாளர் அல்ல; திரைப்பட இயக்குநர். கிறிஸ்டோஃபர் நோலன். அவரது திரைக்கதைகள் போலத்தான் என் புனைகதைகள் உள்ள‌ன என எண்ணுவதுண்டு.

சமூக ஊடக பயன்பாடு படைப்பூக்கத்தை பாதிக்கிறதா? உங்கள் படைப்பிற்கு ஏதேனும் ஒரு வகையில் சமூக ஊடக செயல்பாடு பங்காற்றுகிறதா?

சமூக ஊடகங்களில் நான் இருக்க இரண்டு காரணங்கள்: சமகால விஷயங்களில் என் கருத்துக்களைப் பதிவு செய்தல், என் மற்ற எழுத்துக்களுக்களைச் சந்தைப்படுத்துதல். இதில் இரண்டாவது எவ்வளவு தூரம் சாத்தியப்படுகிறது என்பதில் குழப்பங்களுண்டு. இது போக தொடர்ச்சியாய் எழுதிப் பயிற்சியெடுக்கும் வாய்ப்பை சமூக வலைதளங்கள் வழங்குகின்றன. அதனால் மொழிக்கிடங்கு வனப்புறும் என நினைக்கிறேன். ஆனால் சரவணன் சந்திரன் சமீபத்தில் பேசிய போது சமூக வலைதளச் செயல்பாடுகளினால் என் பிரதானப் படைப்புகளில் மொழி சில இடங்களில் தொய்வுறுகிறது என்றார். நான் இன்னும் அதைத் தீவிரமாக‌ ஆராயப் புகவில்லை. கவனிக்க வேண்டும். பொதுவாகவே சமூக வலைதளங்களில் நேர விரயம் அதிகம். அதன் பொருட்டு அதைக் குறைத்துக் கொள்வதே படைப்பாளிகளுக்கு நல்லது. அவற்றை விட்டுப் பூரணமாக‌ வெளியேற வேண்டும் என்றில்லை; ஆனால் எதற்குப் பயன்படுத்துகிறோம், எவ்வளவு நேரம் இருக்கிறோம், பக்கவிளைவு என்ன என்பதில் ப்ரக்ஞைப்பூர்வமாக இருக்க வேண்டும்.

அடுத்து என்ன எழுத இருக்கிறீர்கள்?

எண்ணத்தில் உருவாகி இன்னும் எழுதப்படாமல் குறைந்தது பத்து சிறுகதைகள் உண்டு. பிற்காலச்சோழர் வரலாற்றை ஒட்டிய ஒரு த்ரில்லர் நாவலும், இன்றைய தேதியில் ஆக முக்கியமானதென நான் கருதும் ஒரு சமூகப் பிரச்சனை குறித்த ஒரு நாவலும் மனதில் இருக்கின்றன. நாத்திகத்தின் வரலாற்றை விரித்தெழுதும் திட்ட‌மிருக்கிறது. இளையராஜாவின் வாழ்க்கையை வசன கவிதை நடையில் எழுத விரும்புகிறேன். கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’யைச் சுருக்கி எழுதி வருகிறேன் – மூன்றாண்டுகளில் முடிக்கத் திட்டம். ஆசைகள் ஆயிரம் இருந்தும் செயலாக்க நேரம் போதவில்லை.

இப்போது ஒரு நாவல் வேலையைத் தொடங்கி இருக்கிறேன். தலைப்பு ‘ஜெய் பீம்’. எல்லாம் சரியாக நடந்தால் வரும் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வெளியாகும்.

எதற்காக எழுதுகிறேன்? என்றொரு வினா எழுப்பினால் உங்கள் பதில்?

கலவி எதற்கு எனக் கேட்போமா? குழந்தைப்பேறு தான் காரணமா என்ன? அதைப் போல் எழுதுவது மகிழ்ச்சி தருகிறது என்பது தான் பிரதான காரணம். ஒவ்வொரு படைப்பை நிறைவு செய்கையிலும் ஒரு கணம் கடவுளைப் போல் உணர்கிறேன். சொற்களில் விவரிக்க இயலா ஒரு மனோஉச்சம் அது. அது போக எழுத்தானது வாழ்வதற்கான உந்து சக்தியாக இருக்கிறது. எப்படி எனச் சொல்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே மானுட குல முன்னேற்றத்துக்கு ஏதோ விதத்தில் உதவி செய்கிறான். ஒன்று மனித இனத்தின் நேரடி முன்னேற்றத்துக்கான பங்களிப்பு. மற்றது சமகாலச் சமூகத்துக்கு உதவி செய்வதன் மூலம் பங்களிப்பது. விவசாயம் செய்தல், அரசுப் பணி, மருத்துவர்கள், பொறியாளர்கள் எனப் பெரும்பாலான வேலைகள் இரண்டாம் வகையில் வரும். விஞ்ஞானிகள், சில கலைஞர்கள், தத்துவ ஞானிகள், குறிப்பிட்ட‌ அரசியல் தலைவர்கள் போன்றவர்கள் முதல் வகை. எழுத்தாளர்களும் அதே வகை தான். அதனால் அது ஒரு மதிப்புமிக்க வேலை என நம்புகிறேன். வாழ்க்கை குறித்த சலிப்பு ஏற்படும் போதெல்லாம் இன்னும் மானுட குலத்துக்கு நான் செய்ய வேண்டிய பங்களிப்பு பாக்கி இருக்கிறது என்ற எண்ணம் எழுந்து வர எழுத்து காரணமாகிறது. எழுத்தால் வரும் பாராட்டு, புகழ், விருது, மரியாதை என்பதெல்லாம் பிற்பாடு தான்.

 

***

 

The Puntastic Mews – Nakul Vac

“Kow dow r2 bull retoinis
wus de woids uf lil Oinis”

With Bells pounding, பாப்பா crooning, two ஈs coming, one எலி going & joys abounding….

From the stage Directions for அmuse, A Tanglish Mewmiambus.

In the beginning was the beginning?
Pounds of flesh tons of words make?
Yes, yes, yes and yes.
Did you unwittingly stumble on those sibilant
Ssss’s, you sneaky snake.

Had a man caned ably
(அடி உதவற மாதிரி) Would
அண்ணன் தம்பி have spilt the old bubbly?
Kinch the knife blade strook
blood and ouns?
That’s some hairy stuff in the Good Book.

Mulling an Irish stew
for a buck and twenty
For our jejune jesuit here?

Perhaps no fears of
us all dead here
if Adam and Eve
did daughters leave?

But crazy shrine maiden
Kannagi இடமுலை கையால் திருகி
burnt Mad annotations?
Titless Kannagi cooling off
lopping hot headed silver hair
with his Hayagami.

Lately and plump
Who’ll hump this frump?
Pater said to Mater.
They fuck you up
Your mum and dad.

So, Tommy you rhyming Kat
When you rubbed your muzzle on window panes
Did you dare to part your hair behind?
Or eat an effinineffable peach?

Catch Possum Rhymes last night?
That sad dark pussy was wider than the sea.
Cat show’s Murugan TAM scores are sick
தமிழ்?
Cunt!

Jesus! Don’t be so cross and
get off your high arse.

No exercise only sexercise!
said the Mallu to the newly wed Tamilian.

The moving hand writes vey unmoving lines.

If I need to ride to my rude red health
Must I keep the bottoms of my trousers rolled?
Just grow a pair Donald
Prude in a frock!

Breeder of brinners
Get thee to a punnery!

Every force evolves a form.
To cum by the sea only to get conquered
on a bicycle?

Relax or if you prefer ReJoyce!
Lounge tea in the Chamber and
Sound of Music!
Do! Re and…
Oh no! that was wild
Your picture went grey on you.

Heart twist eh?
Will Irich folk Dubbu
lining their pockets
admire your portrait
at your wake.

Did old Rum and Jam
rise in the sap of trees
weave of Weaver birds
in his hair?

Bracelet of bright hair about the bone
gave him orgasms of sensibility.
Hey Tom just leave the
old Don alone.

மைத்தகு மாமலர்க் குழலாய்
இருண்ட நீலச் சுருளோடும் வந்து
Shaking, air alight with the goddess
fanning their hair in the dark.

Hugh Selwyn Mauberly
For your image of accelerated grimace
Perhaps a soupçon of Indic spice
sprinkled on your attic grace?

Sita’s tresses enmeshed with Circe’s hair
Or is that hair-splitting too unfair?

What movie was that
You and Bob laughed about?
Something about Mary
got old Jo to marry.

Also (Cum) banns read by Pound?

Stately and plump
Did Bhima say that to Hidimbi
at that Bald pot’s birth?

Grow or shrink at will
No crummy exercise.
As you rise to the skies
still no hair I espy.

Bookish puns
don’t a poem make.

Will this be published by Slade(?)
Ayyo! These பண்s!
That hair-raising eh!
Do I at least get a mulligan?

போடா மயிரு!
And you Sir, can take a hike.

Ending with a male wimp’s hair?
Ah men!

  • Nakul Vāc, August 2018

ஆள்மாறாட்டம் – அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

 எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். எதுக்கு இவனுங்க தெனிக்கும் என் முன்னாடி வந்து நிக்கறானுங்க. இவனுகளுக்கு வேற வேலையே இல்லியா… ஒரு வேலை நம்பள மாதிரியா… அதுலயும் அதோ நிக்கறானே ஒருத்தன். அவன பாத்தாதான் எனக்கு செம காண்டா ஆவுது.

நான் சொல்றத அப்படியே நல்லா கற்பனை பண்ணிக்கங்க. நல்லா தூங்கினு இருப்பேன். அதுவும் குளுர்காலம். காலங்காத்தால வந்து டக்குனு லைட்ட போடுவான். கஷ்டப்பட்டு கண்ண தொறப்பேன். பாத்தா இவன்தான் நிப்பான். நைட் லேட்டாத்தான் போவான். ஆனா வரும் போது பிரஷ்ஷா வருவான். சரி ஒழிஞ்சி போவட்டும் லைட் இருந்தா இன்னானு கண்ண மூடுனா, டபால்னு இருக்கற ஒரு துண்டையும் உருவி டப்புனு தண்ணிய வாரி தலையில் ஊத்தி வுட்ருவான். அதுவும் அந்த குளுருக்கு அந்த தண்ணி அவ்ளோ ஜில்லுனு இருக்கும். எழுந்து போய் அவன் கழுத்தாப் பட்டையிலயே வக்கலாமானு தோணும். ஒருவேளை நான் எழுந்து வரமாட்டன்னு அவனுக்கு தெரிஞ்சிதான் இதெல்லாம் பண்ணாறானானு தெரில எனக்கு. அப்பறம் இன்னாத்தையோ மேல வாரிக்கொட்டி தெச்சி இருக்கற கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் ஓட்டி விட்ருவான். இதுல இவுரு பாட்டு பாடாம வேலை செய்ய மாட்டாரு. நடுவுல இன்ஸ்ட்ருமெண்ட் மியூஸிக் வேற.

ஒரு வழியா அவன் வேலையெல்லாம் முடிச்சிகினு ஒழிவான்னு கம்முனு இருப்பேன். நம்ம முன்னாடி வகைவகையா பலகாரமா இருக்கும். சரி இவன் போவட்டும் துன்னலாம்னு ஆசையா இருப்பன். எல்லாம் முடிச்சி டபால்னு கதவ தொறந்தா மறுபடியும் நான் மொதல்ல சொன்னல அவனுங்க வந்து என் மூஞ்சியயே உத்து உத்து பாப்பானுங்க. அப்படி இன்னாதான் நம்ம மூஞ்சில இருக்கு தெரில. வரீசையா வந்து வந்து பாத்துட்டு பாத்துட்டு போவானுங்க. அப்பப்ப ஒன்னு ரெண்டு லூசுங்க என் காதுல உழற மாதிரி எதுனா பேசுங்க. அதுங்க மட்டும் தான் நமக்கு இருக்கற ஒரே டைம்பாஸ். இவனுங்கல பாக்க வெச்சிட்டு எப்படி திண்றதுனு ஒரு டீசண்ட்டுக்காக கம்முனு இருப்பன். ஆனா அவனுகளுக்கு அந்த டீசண்ட் சுத்தமா இருக்காது. எல்லாத்தயும் தூக்கினு போய் பங்கு போட்டு திம்பானுங்க. நானும் இப்ப வரைக்கும் கடைசியா மிஞ்சற வாழப்பழத்த தின்னுட்டு காலத்த ஓட்டறன்.

மழை வந்தாதான்பா இந்த இம்சைங்க கிட்டருந்து கொஞ்சம் நிம்மதி. ஃப்ரியா இருக்கலாம். அப்பகூட தனியாலாம் இருக்க முடியாது. எதுனா ஒன்னு வந்து முன்னாடி உக்காந்துகினு நம்ம மூஞ்சியயே பாத்துகினு இருக்கும். திடீர்னு அழுவும். நமக்கும் ரொம்ப பாவமா இருக்கும். அதுக்கு நான் இன்னா பண்ண முடியும் சொல்லுங்க. இப்படியேதான்பா நம்ம லைப் போகும். என்ன மாதிரி ரொம்ப பேர் இருக்காங்கபா. அதுலயும் பணக்கார பசங்களும் இருக்காங்க. அவனுங்க அலும்பலு தாங்க முடியாதுபா.

இன்னாடா இது லைப் ஒரே போரா இருக்குனு படிக்கற உங்களுக்கே இவ்ளோ காண்டா இருக்குதே. எனக்கு எவ்ளோ காண்டா இருக்கும். ஆனா லைப் எப்பவுமே இப்படியே இருக்காதுபா. ஒருநாள் நம்பளுக்கும் த்திரில்லிங்கா’ எதுனா நடக்கும். நாம அதுக்குலாம் பயந்துக்கக் கூடாது. அதல்லாம் அப்படி அப்படியே எஞ்ஜாய் பண்ணனும். எனக்குகூட இப்டி ஒண்ணு நடந்ததுப்பா. அத்த சொல்லத்தான் வாயெடுத்தன். ஆனா இன்னான்னாவே ஒளரிகினு இருக்கன். சொல்லறன் கேளேன்.

இப்படி ஒருநாள் ராத்திரி அவன் வந்தான். அவந்தான் காலங்காத்தால தலைல தண்ணிய வாரி ஊத்துவானே, அவனேதான். எப்பவுமே தனியாத்தான் வருவான். அன்னிக்கினு பாத்து ஒரு கேங்கோட வந்தான். வந்த எவனும் புது ஆளுங்கலாம் இல்ல. அடிக்கடி வரவனுங்கதான். அதுவும் அதோ நிக்கறானுகளே இரண்டு பேரு. மனசுல பெரிய இதுனு நெனப்பு. எப்ப வந்தாலும் வந்து பக்கத்துலயே நின்னுப்பானுங்க. மத்தவனுங்க மாதிரி தூரமாலாம் நிக்க மாட்டானுங்க. ஆனா வெளியே நிக்கறவனுங்க இவனுங்கள அசிங்க அசிங்கமா திட்டுவானுக. நமக்கு அதுல ஒரு ஆனந்தம். ஆ…………. என்னய டைவர்ட் பண்ணாதிங்க. அப்பறம் கதை ஷார்ப்பா இல்லனு எவனாது கமெண்ட் பன்னுவான். கவனமா கேளுங்க இதுதான் முக்கியமான கட்டம்.
__________________________________________________________________________________________________

மேல இருக்கற கோடு சைலன்ஸ். உங்களுக்கு ஒரு மூட் கிரியேட் பண்ண. இப்போ கதை சரியா?

எங்க உட்டேன். ஆங், கேங்கோட வந்தானா, வரும்போதே ஒரு கோணிப்பைய தூங்கினு வந்தானுங்க. நல்லா கவனிங்க, எந்த லைட்டையும் போட்ல. கைல டார்ச் எடுத்துகினு மெதுவா வரானுங்க. தூரத்துல வேற ரூம்ல இருக்கற நம்ப கூட்டாளி ஒருத்தரு இதப் பாத்துட்டு நமக்கு சிக்னலு கொடுக்கறாரு. கம்முனு இருனு நான் பதில் சிக்னல் கொடுக்கறன். வந்தவனுங்க கையில இருந்த மூட்டைய அப்படியே கீழ வைக்கறானுங்க. மூட்டைய மெதுவா பிரிக்கறான் ஒருத்தன். எனக்கா சஸ்பன்ஸ் தாங்கல. வேகமா பிரிடா கொய்யாலனு கூவலாமானு பாத்தன். மூட்டைய மெதுவா தொறக்கறான். அந்த வெண்ண சும்மா நாள்ளாம் லைட்ட போடுவான். இன்னிக்கு பனை மரம் மாதிரி அசையாம நிக்கறான். மூட்டைய தொறந்ததும் எல்லாரும் ஒரே நேரத்துல அது மேல டார்ச் அடிக்கறானுங்க.

ஆ………………………………………………………………………………………………………………………………………………….

நான் தான் அதிர்ச்சில கத்திட்டன். ஆனா அவனுங்களுக்கு கேக்கல. இப்ப அதுவா முக்கியம். மேட்டருக்கு வருவோம். மூட்டைய தொறந்தா… மூட்டைய தொறந்தா… தொறந்தா… அப்படியே என்ன மாதிரியே ஒருத்தன் நிக்கறான். நான் அவன பாக்க அவன் என்ன பாக்க. மாத்தவனுங்கல்லாம் சிரிச்சிகினு இருக்கானுங்க.

அப்படியே ‘தொடரும்…’ போடலாமானு யோசிக்கற அளவுக்கு எனக்கு படபடப்பா போச்சி. உங்க டைம வேஸ்ட் பண்ன வேணாம்னு கண்டின்யூ பண்றன். நான் அவனப் பாத்து கேக்கறன்,

“டேய் யாருடா நீ”

………………………………….

“சொல்லுடா, எப்புடிடா நீ என்ன மாதிரியே இருக்க…..”

…………………………………………………………………………………………………..

கேக்கறதுக்கு எதுனா பதில் சொல்றானா பாரு. சொவுடன் மாதிரியே நிக்கறான். “டேய் நீ செவுடனா, ஊமையாடா” இந்த நேரத்துல இந்த நெலமையில நீங்களா இருந்தா கண்டிப்பா உங்க அப்பா மேல உங்களுக்கு ஒரு டவுட் வரும். ஆனா என்னால அப்படிலாம் நினைக்க முடியாது. ஏன்னா… அதெல்லாம் வேணா வுடுங்க. இவன பாப்போம்.

அவன் இன்னா கேட்டாலும் அப்படியேதான் நிக்கறான். இந்த வெண்ண இப்பதான் ஆராய்ச்சி பண்ணுது. அவனப் பாக்குது, என்னப் பாக்குது, மறுபடியும் அவனப் பாக்குது, என்னப் பாக்குது. இப்படியே ஒரு நாலு வாட்டி பாத்துட்டு மத்த தடிமாடுங்க (மாடுங்கனு திட்டலாமானு தெரிலயே) கிட்ட மண்டைய ஆட்டுது. அவனுங்க அலேக்கா என்ன தூக்கிட்டானுங்க. எனக்கு வந்துச்சி பாரு ஒரு கோவம். உடனே அவனுங்களுக்கு ஒரு சாபம் உட்டேன், “எல்லாரும் சொர்க்கத்துக்கு போங்கடானு”. என் சொர்க்கம்னு கேக்காதீங்க. அத அப்பறம் சொல்றன். த்திரிலிங் போய்டும்.

என்னைய தூக்கி கீழ வெச்சிட்டு அவனத் தூங்கி என் எடுத்துல வச்சிட்டானுங்க. எனக்கு இன்னா பண்றதுனே தெரில. தூரத்துல இருக்கற என் கூட்டாளிய பாக்கறன். அவன் இப்பதான் நல்ல தூங்கற மாதிரி நடிச்சிகினு இருக்கான். எனக்கு இன்னா பன்றதுனே தெரில. ஆமா நம்பலால என்ன பண்ண முடியும் இவனுங்கள. நான் எப்படி ஸ்டைலா உக்காந்துனு இருந்தனோ அப்படியே இப்ப அவன் உங்காந்துனு இருந்தான்.

டேய் டேய் இது உனக்கே அடுக்குமாடா டேய், நாளைக்கு உன்னயும் எவனா வந்து இப்டி தூக்கினு போவல என் பேர மாத்திக்கிறண்டா டேய், சைட் ஆணில கேலண்டர் இருக்குது குறிச்சிக்கடா அங்க பாருடா, அதோ பேசிகினு நிக்கறானே அந்த வெண்ண அவன் உன்ன தூங்கக்கூட உடமாட்டான்டா.

நான் பொலம்பிகினே தான் இருந்தன் எவன் காதுலயும் விழல. எடுத்துகினு வந்த கோணில என்னைய கட்டி தூங்கினு போயிட்டானுங்க. எங்க எடுத்துகினு போறானுங்க. இன்னா பண்ண போறானுங்க ஒன்னும் தெரில நான் இன்னும் கோணிப்பைல தான் இருக்கன். புரியாத பாஷைலாம் கேக்குது. கொஞ்ச நேரம் பறக்கற மாதிரி இருக்குது. கொஞ்ச நேரம் மெதக்கற மாதிரி இருக்குது. மொத்ததுல என் சோலி முடிஞ்சிது.

அப்படியே எங்கயே ஒரு ரூம்ல ஒரு ஓரத்துல என்னய உக்கார வெச்சானுங்க. அதுக்கப்பறம் என்னாவோ பேசனானுங்க. போய் லைட்ட நிறுத்திட்டு போய்ட்டானுங்க. அப்பாடானு இருந்தது. கோணில இருந்து வந்ததுக்கப்பறம் தான் கொஞ்சம் மூச்சே வுட முடிது. டையட்ல நல்ல தூக்கம் வந்ததுனு தூங்கிட்டன். எப்பவுமே நல்ல தூக்கத்துல அந்த வெண்ண லைட்ட போடுமா. நானா எழுந்திருக்கற வரைக்கும் இங்க எவனும் லைட்டே போடல. சரி இங்க டியூட்டி டைம் வேற மாதிரினு வெய்ட் பண்ணேன். எவ்ளோ நேரம்னு கேக்கறீங்களா, சுமார் ஒரு ஆறு மாசம். எவனும் லைட்ட போட வரவேயில்ல. அடேய் பயமா இருக்குதுடா, ஒரு குண்டு பல்ப்பாவது போடுங்கடான்னு கத்தறேன், கேக்க எவன் இருக்கான்?

நிழல் – மு. வெங்கடேஷ் சிறுகதை

மு வெங்கடேஷ்

 

அன்று வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சூரியன் மறைந்த பின்னும் சூடு தணியாமல் இருந்தது. உடல் முழுவதும் வியர்வை ஊற்றெடுத்து வழிந்து கொண்டிருந்தது. எத்தனை முறை குளித்தாலும் அதே நிலைதான். வெளியே புழுக்கம் அதிகமாக இருந்தது. அதைவிட வீட்டிற்குள்.

கட்டியிருந்த லுங்கியுடன் மேலே ஒரு அரைக்கை சட்டையை மட்டும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே நடக்கத் தொடங்கினேன். வீட்டைச் சுற்றியிருந்த மரங்கள் அனைத்தும் வரைந்து வைத்த ஓவியம் போல் காட்சியளித்தன. நெற்றியில் இருந்த வியர்வைத் துளி வடிந்து வாய் அருகே வர, தட்டி விட்டேன். நடக்க நடக்கத் தொடைகள் இரண்டும் உரசி உள்ளே அணிந்திருந்த ஜட்டியும் நனைந்து ஒருவித எரிச்சலை உண்டு பண்ணியது. அந்த ஒன்பது மணி இருட்டிலும் விளக்கை ஏறிய விட்டு வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. தூரத்தில் ஒருவர் சுத்தியலை வைத்து ஏதோ கம்பியை அடித்துக் கொண்டிருந்தார். அவர் அடிப்பது என் தலையில் அடிப்பது போல் இருந்தது. கால்கள் வேகம் எடுத்தன.

நாள் முழுவதும் சிறுவர்கள் விளையாடிவிட்டுச் சென்ற பூங்கா தற்போதுதான் உறங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டு இரண்டு விளக்குகள் மட்டும் எரியவிடப் பட்டிருந்தன. பின் வாசல் அருகே இருந்த விளக்கு மின்னிக் கொண்டிருந்தது. அதன் கீழே நின்று கொண்டிருந்த கருப்பு நிற நாய் ஊளையிட, அது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. பூங்காவின் தென்கிழக்கில் காலையிலிருந்து ஓயாது ஆடிக் கொண்டிருந்த இரண்டு ஊஞ்சல்கள் தற்போது அசையாமல் தொங்கிக் கொண்டிருந்தன. அதன் அருகில் கிடந்த சிமெண்ட் இருக்கையில் போய் அமர்ந்தேன். வலதுபுற பக்கவாட்டில் தலைக்கு மேல் எரிந்து கொண்டிருந்த விளக்கு என் உருவத்தை நிழலாகக் கீழே தரையில் காண்பித்துக் கொண்டிருந்தது. அங்கு என்னையும் என் நிழலையும் தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

பூங்காவிற்குள் வந்து அரை மணி நேரம் கடந்திருந்தும் புழுக்கம் தணியவில்லை. சட்டையின் மேல் பட்டன் இரண்டையும் கழட்டிவிட்டு, அரித்துக் கொண்டிருந்த ஜட்டியை கையை உள்ளே விட்டு சரி செய்தேன். இடது புறமாகத் தரையில் தெரிந்து கொண்டிருந்த நிழல் ஏதோ விசித்திரமாகத் தெரிய கீழே உற்றுப் பார்த்தேன். தலையில் இரண்டு கொம்புகள். அது ஒரு மிருகம் போன்று காட்சியளித்தது. கோபத்தில் மேலும் கண்களை விரித்துப் பார்க்க, தலையின் இரு புறமும் இருந்த முடி எழும்பி நின்று கொண்டிருந்தன. கைகளைக் கொண்டு தடவிப் பார்த்தேன். குளித்து எண்ணெய் தேய்க்காத முடி மொரமொரப்பாக இருந்தது. முடியைப் பல முறை சரி செய்ய முயன்றும் தோல்வி அடைந்தேன். அருகில் தண்ணீர் குழாய் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் கண்ணில் படவில்லை. கையில் எச்சிலைத் துப்பி தலையை ஈரப்படுத்தி, முடியைப் பணிய வைக்க முயன்றேன். இரண்டு கொம்புகளும் கீழே பணிவதாகத் தெரியவில்லை. அவ்வாறு செய்வது என்னை மேலும் மேலும் எரிச்சலூட்டி கோபமடையச் செய்தது. ஒரு கட்டத்தில் மொத்த முடியையும் பிய்த்து எரிந்து விடலாம் என்று முயற்சிக்கையில் முடிகள் அனைத்தும் மேல் எழும்பி மிருகம் போய் அரக்கன் ஆனது நிழல்.

சற்று நேரம் அமைதியாக இருந்து என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பின் சட்டைப் பையில் இருந்த சிகரட் பாக்கெட்டை எடுத்தேன். காலை வாங்கிய பாக்கெட்டில் மீதம் இருந்தது இரண்டு சிகரெட்டுகள்தான். அது என்னை மேலும் எரிச்சலடையச் செய்தது. அதில் ஒன்றை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தேன். “ஷ்ஷ்ஷ்ஷ்” என்ற சத்தத்துடன் உள்ளே இழுக்க, அது என் தொண்டை வழியாக வயிறு வரை உள்ளே செல்வதை என்னால் உணர முடிந்தது. இரண்டு நொடி உள்ளே சுழன்ற புகை வாய் வழியாக வெளியே வர, தலையை சற்று மேலே உயர்த்தி  வானத்தை நோக்கி ஊதினேன்.

வெளியே வந்த புகை வானத்தில் பெண் ஒருத்தி உள்ளாடை ஏதும் அணியாமல் வெள்ளை நிற சேலை போன்ற துணியை மட்டும் போர்த்திக் கொண்டு நளினமாக பாலே நடனம் ஆடுவது போன்று காட்சியளித்தது. அதைப் பார்த்த நான் பரவசம் அடைந்தேன். உடல் சிலிர்க்கத் தொடங்கியது.  அடுத்த இழுப்பிற்காக சிகரெட்டை வாயில் வைத்து, ஒரு இழுப்பு இழுத்து,வயிற்றுக்குள் புகையை அனுப்பி ஒரு சுழட்டு சுழற்றி வெளியே விட்டேன். மேலும் ஒரு பெண் அதே போன்று நடனம்  ஆடத் துவங்கினாள். அது என்னுள் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதல் சிகரட் முடியும்பொழுது ஆறு பெண்கள் நடனமாடிக் காற்றில் கரைந்திருந்தார்கள்.

யாரும் இல்லாத அந்த இருட்டில் பெண்கள் அவ்வாறு நடனமாடியது எனக்குப் பிடித்திருந்தது. அரித்துக் கொண்டிருந்த ஜட்டியைக் கையை உள்ளே விட்டு மீண்டும் சரி செய்து கொண்டேன். இரண்டாவது சிகரெட்டையும் எடுத்து பற்றவைத்து, இழுத்து, ஊதி அதே பெண்களை மீண்டும் நடனமாட விட்டு ரசித்தேன். அது என்னுள் இருந்த மது போதையை விட அதிக போதையைத்  தருவதாக உணர்ந்தேன். நாக்கை வெளியே நீட்டி உதட்டை நனைக்க, உதட்டில் படிந்திருந்த சிகரெட்டின் கசப்பு ருசித்தது.

சிகரட் முடிந்திருந்த நிலையில் சற்று நேரம் கண் அசந்திருந்தது. ஏதோ ஒரு சிந்தனை மட்டும் என்னை ஆட்கொண்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த என்னை அருகில் கேட்கும் சலசலப்பு நிதானத்திற்கு இழுத்து வந்தது. சுதாரித்துக் கொண்ட நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன்.

ஒரு ஆண், ஒரு பெண். கணவன் மனைவியாக இருக்க வேண்டும். அவள் காலில் மெட்டி இருக்கிறதா என்பதை உற்றுப் பார்த்து உறுதி செய்து கொண்டேன். அவன் சாயலில் என்னைப் போலவே இருப்பதாகத் தோன்றியது. பெண் மாநிறம், நல்ல அழகு. அவள் தலை முடிக்குக் கீழ் அணிந்திருந்த சட்டை நனைத்திருந்தது. அப்போது தான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்.

அவர்கள் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை .ஒருவரை ஒருவர் கடிந்து கொண்டிருந்தார்கள். ஆணின் குரலே மேலோங்கி இருந்தது. அவ்வப்போது கண்களை துடைத்தவாறே அவள் அவனுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள். அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டு கேட்பது தவறுதான், ஆனால் எனக்கு அப்போது வேறு வழி இல்லை. அமர்வதற்கு அந்த இடத்தை விட்டால் வேறு இடம் கிடையாது.

இத்தன வருஷம் ஆகியும் நீங்க என்னப் புரிஞ்சிக்கலேல்ல?

என்ன புரிஞ்சிக்க?

………

அதான் நீ நடக்குற விதமே தெரியுதே.

கோவத்துல என்னனாலும் பேசாதீங்க.

அப்டி என்னத்த பேசிட்டேன்?

நா என்ன வேணும்னேவா வர மாட்டேங்குறேன்?

பெறகு?

இன்னைக்கு முடியாது.

அதான் ஏன்னு கேக்குறேன்?

ஐயோ இன்னைக்கு முடியாது…. புரிஞ்சிக்கோங்களேன்.

சாயந்திரம் கோவிலுக்கு போயிட்டு வந்த?

இப்போ மணி பத்து ஆவுது.

எனக்கு என்னைக்குத் தேவைப்படுதோ அன்னைக்குத்தான் வேணும்… உனக்கு தோண்ற நேரத்துல எல்லாம் முடியாது.

நா என்ன வேணும்னா செய்றேன்? என் வலி எனக்குத்தான தெரியும்,  என்று சொல்ல அழத் தொடங்கினாள். அவன் எதிர்த் திசையில் திரும்பி நின்று சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்துக் கொண்டிருந்தான். அவனைப் புகை சூழ்ந்திருந்தது.

கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்து விட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கதவு சாத்தியிருந்தது. ஜன்னல் வழியாகக் கையை உள்ளே விட்டு தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் பையில் இருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்றேன். விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டாக இருந்தது. சுவரில் கை வைத்துத் தடவியவாறே சுட்ச்சை அழுத்தினேன். விளக்கு எரிந்தது.

தரையில் கிடந்த பாயில் காலை மடக்கி கேள்விக்குறி போன்று வளைந்து வயிற்றில் கை வைத்து மனைவி படுத்திருந்தாள். அடுக்களை சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து விளக்கை அணைத்து விட்டுப் படுத்தேன். பூசை அறையில் மாலை ஏற்றப்பட்ட குத்து விளக்கு குளிர வைக்கப்படாமல் எரிந்து கொண்டிருந்தது.