கவிதையும் கேள்வியும்

கடந்த ஆறு வாரங்களாக றியாஸ் குரானா அவர்கள் பதாகையில் வாரம் ஒரு கவிதையும் எழுதி வந்திருக்கிறார். பதாகைக்குப் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார், பதாகையைப் புதிய தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

கவிதைகள்-

அதிகாலை ஒரு வெள்ளைக்கதவு

நினைவு தேன்கூடு

கறுப்புப் பெட்டி

தோன்றி மறையும் வர்ணங்களாலான படுக்கையறை ஒவியம்

Z – கனவில் நடிக்க ஆள் தேவை.

காத்திருப்பவருக்கும் காத்திருக்கச் செய்தவருக்கும் இடையில் பெய்த மழை

கட்டுரைகள்- 

கவிதையும் வாசக மனநிலையும்

கவிதையின் உண்மைகள்

கற்பனையும் மொழியும்

தமிழ் கவிதை வடிவம்

‘கவிதை மொழியைப் பெருக்குகிறது’

கவிதையின் நகர்வுகள் – இனி என்ன? 

கவிதை குறித்த அவரது கருத்துகள் மாறலாம், கவிதையின் வடிவம் மாறலாம், ஆனால் என்றும் மாறக்கூடாத நற்பண்புகள் அவரிடம்  உள்ளதை அண்மைய மாதங்களில் உணர்ந்தோம். உடல்நிலை உட்பட பல பிரச்சினைகளுக்கு இடையே பதாகையில் எழுதிய திரு றியாஸ் குரானா அவர்களுக்கு நன்றிகள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.