Author: பதாகை

நெகிழ்வற்ற படிமங்கள் (முன்னுரை)

எஸ்.சுரேஷ்

cat21

கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலாக பதாகை இணைய இதழில் நான் மிருகக் கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன், இனியும் எழுதுவேன் என்று நினைக்கிறேன். அவற்றில் சில இந்த மின்னூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நான் ஏன் இந்தக் கவிதைகளை எழுதினேன், அதுவும் ஏன் இப்படி எழுதினேன் என்பதை விளக்கக் கொஞ்சம் முயற்சி செய்யப் போகிறேன்.

இந்தக் கவிதைகளை மிருகக் கவிதைகள் என்று நண்பர்கள்தான் சொல்கிறார்கள், நான் அப்படிச் சொல்ல மாட்டேன். இவற்றை நான் உறைபடிமங்களாகவே பார்க்கிறேன். பொதுவாக, ஒரு கவிதை என்றால் அது பல்பொருள் உணர்த்த வேண்டும், அதில் உள்ள படிமங்கள் நம் மனதில் ஒரு நகர்வை ஏற்படுத்த வேண்டும், அதன் மொழி நம்மை வசீகரிக்க வேண்டும் என்றும் இன்னும் பலவாறாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒன்றுகூட அப்படி எதுவும் செய்யாது. அது போன்ற பயன்மதிப்பு எதையும் முன்னிட்டு இந்தக் கவிதைகளை எழுதவில்லை. அடிப்படையில் இவை, சலனமற்ற பிம்பங்கள்- எழுதப்பட்ட பக்கத்தின் எல்லைகளுக்கு அப்பால் செல்லாதவை. வாசகன் மனதினுள் வளர வேண்டும், ஆழமான உண்மையை உணர்ந்த வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட மறுக்கும் பிம்பங்கள். (more…)

இதுவே உண்மை- பிற உண்மைகளைக் கைவிடு! (கவியின்கண் கட்டுரைத் தொடர்)

எஸ். சுரேஷ்

இதுவே உண்மை- பிற உண்மைகளைக் கைவிடு!
யாரும் இந்தப் பூமியில் போராடத் தேவையில்லை.
பார்- அந்தி சாய்ந்து விட்டது, பார், இரவு நெருங்கி விட்டது:
கவிஞர்களே, காதலர்களே, தளபதிகளே, நீங்கள் சொல்வதற்கென்ன இருக்கிறது?

ஓய்ந்துவிட்டது காற்று, பூமியில் பனித்துளிகளின் ஈரம்,
இனி வானின் நட்சத்திரச் சூறாவளியும் அமைதி கொள்ளும்.
விரைவில் நாம் அனைவரும் மண்ணின்கீழ் உறங்கப் போகிறோம், நாம்
அதன்மேல் ஒருவரையொருவர் உறங்க விடாத நாம்.

(‘I know the Truth, Marina Tsvetaeva. English version by Elaine Feinstein) (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- 12 ஆசிரியர் எங்கே? (தொடர்கதை)

மித்யா 

 12. ஆசிரியர் எங்கே?

ஜார்ஜ் ட்ருக்கர் எழுதிய ‘லைப் ஆப் எ லிவிங் செயின்ட்’ புத்தகம் வெளியானவுடன் பிரிட்டன் முழுக்க பெரிய சர்ச்சை கிளம்பியது. இதன் நம்பகத்தன்மையை பல விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். பெரும்பாலான கிறிஸ்துவர்கள் இதில் வரும் கிறிஸ்டோவை இரண்டாம் இயேசுவாக ஏற்க மறுத்தனர். இந்த புத்தகம் அமெரிக்காவிலும் வெளியாகி அங்கும் ஒரு சர்ச்சை கிளப்பியது. இங்கிலாந்தில் ஆன்மீகவாதிகளுக்கும் நாத்திகர்களுக்கும் இடையில் பெரிய சண்டை வந்தது. ஆன்மீகவாதிகள் இந்தப் புத்தகத்தை தடை செய்யவேண்டும் என்றும், நாத்திகர்கள் தடைக்கு எதிராகவும் போராடினர். இந்தச் சண்டை பல சமயங்களில் கைகலப்பில் முடிந்தது. தெருக்களில் இறங்கி இரண்டு கூட்டங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. என்ன செய்வது என்று தெரியாத அரசு, புத்தகத்தைத் தடை செய்தது. அதை எதிர்த்து நாத்திகர்களின் போராட்டம் சூடு பிடித்தது. இவ்வளவு எதிர்ப்பை எதிர்பார்க்காத அரசு தடையை நீக்கியது.

பிரான்சிஸ் என்ற பாதிரி தன்னுடைய சர்ச் கூட்டம் ஒன்றில் ஆவேசமாகப் பேசினார். “இரண்டாம் இயேசு என்பதெல்லாம் பொய். நம்மை ஏமாற்ற நம் எதிரிகள் செய்யும் சதி இது,” என்று முழங்கினார். “நாம் நம் மதத்தையும் இயேசுவின் நாமத்தையும் காக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் எல்லோரும் வரும் ஞாயிறன்று ஜார்ஜ் ட்ருக்கர் வீட்டின்முன் ஒரு போராட்டம் நடத்த வேண்டும்,” என்று அறைகூவல் விடுத்தார். கூடியிருந்த கூட்டம் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தியது. (more…)

வலி மாத்திரை – ஆரூர் பாஸ்கர்

ஆரூர் பாஸ்கர்

அதை
அப்படியே விழுங்கிவிட்டேன்.

அது தொண்டைக்குள் சிக்கி
சிறு திணறலுடன்
உள் சென்று விட்டது.

கொஞ்சம் ஜலத்தோடு
விழுங்கி இருக்கலாம்
கடைசியில் கரையப்போகும்
அந்த வலி மாத்திரையை.

கண்ணுக்குத் தெரியாத கரம்- ஒரு நாவலின் ரகசிய வரலாறு

(அண்மையில் The New York Times தளத்தில் ஜானதன் மாஹ்லர் (Jonathan Mahler) எழுதியிருந்த, “The Invisible Hand Behind Harper Lee’s ‘To Kill a Mockingbird’” என்ற கட்டுரையின் தமிழாக்கம்).

அப்போது 31 வயதாகியிருந்த ஹார்பர் லீ, 1967ஆம் ஆண்டின் வேனிற்பருவத்தில் “Go Set a Watchman” என்ற நாவலின் கைப்பிரதியைத் தன் ஏஜண்டிடம் அளித்தார். அனைவராலும் நெல் என்று அழைக்கப்பட்ட ஹார்பர் லீக்கு நாவல் எழுத வேண்டும் என்ற பெருவிருப்பம் இருந்தது. அவரது கைப்பிரதி பதிப்பகங்களுக்கு அனுப்பப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் இப்போது காலாவதியாகிவிட்ட ஜே. பி. லிப்பின்காட் கம்பெனி. இறுதியில் அதுவே நாவலின் கைப்பிரதியை வாங்கிக் கொண்டது.

அந்த நாவல், லிப்பின்காட் நிறுவனத்தில் தெரசா வொன் ஹோஹோஃப் டோரி என்ற பெண்ணின் கை சேர்ந்தது. டே ஹோஹோஃப் என்று தொழில் வட்டத்தில் அறியப்பட்டிருந்த அவர் உருவத்தில் சிறியவராக, ஒல்லியானவராக இருந்தார். ஐம்பதுகளின் இறுதிகளில் இருந்த, நீண்ட அனுபவம் கொண்ட எடிட்டர் அவர். படித்தவுடன் நாவல் அவருக்குப் பிடித்துப் போனது. “ஒவ்வொரு வரியிலும் உண்மையான எழுத்தாளரின் பொறி தட்டியது,” என்று அவர் பின்னர் லிப்பின்காட் நிறுவன வரலாற்றை எழுதும்போது நினைவுகூர்ந்தார். (more…)