Author: பதாகை

கோவில் எலி- காஸ்மிக் தூசி (அருண் கொலாட்கர் )

  காஸ்மிக் தூசி

rat

திரிசூலத்தின் நீண்ட நடுப்பிளவில்
சுருண்ட வாலை நிமிர்த்திக்கொண்டு
பொங்கி வழியும் கருநிறக் குருதி போல
இறங்கி வருகிறது கோவில் எலி.

பைரவரின் தடத்தோளில் நின்றபின்
சற்றே புனிதச்சதை அசைவதுபோல்
வேகமாய் பார்க்கிறது சுற்றிலும்

மார்த்தாண்ட பைரவரின் கண்களின் ஆவேசம்
முகத்தில் சந்தனக்கவசத்தின் போர்க்கோலம்
கண்டு திரும்புவதற்குள் மறைந்து

கற்கூரையில் தொங்கும் சங்கிலியில்
வளைந்து இறங்குகிறது கோவில் எலி
தீபஒளி மினுக்கும் உலோக கண்ணிகளில்
பிரகாசிக்கும் கண்களைச் சிமிட்டியபடி

வளைவில் சறுக்கி இறங்கியபின்
காண்டாமணியின் விளிம்பில் நின்று
கம்பீரமாய் பார்க்கிறது

கருங்கல் லிங்கத்தின் தலையில்
வாழைப்பழம் நசுக்கும்
இளம் புதுமணப்பெண்ணின்
தண்டனிட்ட கைகளில்
கண்ணாடி வளைகளின்
பச்சைநிற பளபளப்பை

நரைத்த ஒருவார தாடிக்குள்
பூசாரியின் முகத்தில்
கீறும் புன்னகையைக் கண்ட
கோவில் எலி

கருவறையின் மூலையில்
முரசின் பின்னால்
சென்று மறைந்ததுதான் தாமதம்
உடனே முழங்கிற்று
கோவில்மணி.
****

*அருண் கொலாட்கர் எழுதிய The Temple Rat என்ற கவிதையின் தமிழாக்கம்

சோப்பு தேவதை – ஜாக் ஸ்டாப்

 ஜாக் ஸ்டாப் – 

வீட்டுக்கு அருகில் உள்ள முட்கம்பி வேலிகளுக்குள் அவள் தன் மிருகங்களை வைத்திருந்தாள். நான் நடந்து செல்லும்போது அவற்றின் மிழற்றல்களையும் அந்த மிருகத்தின் பால்மடிகள் ஏழும் புல்தரையில் தேய்த்துக் கொள்வதையும் காட்டுக்குள்ளிருந்தும், என்னால் கேட்க முடிந்தது. அவை ஒரு கூட்டமாய் மலைமேல் ஒரு கருமேகமாய் தொங்கிக் கொண்டு இருந்திருக்கலாம், அல்லது தானியக் கிடங்கின் மூலைக்குத் தள்ளப்பட்ட கொழுத்த பெண் பன்றிஅது ஒன்றே ஒன்று மட்டும் இருந்திருக்கலாம்-..

ஒவ்வொரு இரவும் நான் அவளது கதவடிக்கு வந்தபோது என் கரங்களின் சருமத்தைத் தொட்டுத் தடவிப் பார்ப்பாள், நெருப்பருகே இப்புறமும் அப்புறமும் அவற்றைத் திருப்பிப் பார்ப்பாள். அவை ஏற்கனவே டிடர்ஜென்ட்கள் காரணமாய் பிளவுபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருக்கவில்லை எனில், எந்த மருந்து கொண்டு அவற்றைப் பிணைத்திருந்தாலும் வயல்வெளிகளைக் கடந்து அவளது அபார்ட்மெண்ட்டுக்குச் செல்லும் நீண்ட பயணம் அதை உறையச் செய்திருக்கும். முகத்தில் சினக்குறியோடு அவள் என் மணிக்கட்டைப் பற்றி உள்ளே இழுத்துச் சென்று என் மயிர்க்கால்களிலும் விரல்முடிச்சுகளிலும் க்ரீம் தேய்த்து விடுவாள். தட்டுகளிலும் அடுப்புக்கு மேலிருந்த கூரையிலும் எப்போதும் கெட்டித்து உறைந்திருந்த கொதிபால் நுரைக்கும் மணம் அறையை நிறைந்திருந்தது. மரத்தாலான குறுகிய அந்த அபார்ட்மெண்ட் ஒரு ப்ரெட்பாக்ஸின் உட்புறம் போலிருந்தது, அல்லது, கிழக்கு நோக்கியிருப்பின்,, கண்ணீர் வடிக்கும் எங்கள் காலணிகளை நெருப்புக்கருகில் வைத்திருக்கும் சவப்பெட்டி போலிருந்தது. (more…)

குளிர்காலப் பனி இரவில்.- நிமா யூஷிஜ்

.- நிமா யூஷிஜ் – 

இந்தக் குளிர்காலப் பனியிரவில் ..

சூரியனின் மையத்திலும்

என் விளக்கின் தகிப்பில்லை

 

அனைத்தைக் காட்டிலும் பிரகாசிக்கும் என் விளக்கொளியில்

நிலவின் உறைபனி விளக்கு சோபையிழக்கிறது

 

அனைத்தும் உறைந்த ஓர் இரவுப் பொழுதில்

என் அண்டை வீட்டுக்காரனுக்கு நான் விளக்கேந்தி நிற்கின்றேன்

 

பைன் மரங்களிடையே காற்று சூறையாடியபோது

ஊமை மலைகளில் அவன் தொலைந்து போனான்.

 

குறுகிய பாதையை விட்டு விலகிப் போனான்,

எனினும் என் உதடுகளில் அவன் சொல்லிச் சென்ற

கதையை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்:

 

விளக்கேற்றுவது யார்? தகிப்பில்ல் வாடுவது யார்?

தன் இதயத்தில் என் கதையைப் பொதித்திருப்பது யார்?”

 

இந்தக் குளிர்காலப் பனியிரவில் ..

சூரியனின் மையத்திலும்

என் விளக்கின் தகிப்பில்லை

 

நன்றி MPT Magazine 

 

அரேபிய இலக்கியத்தை ஆங்கிலத்தில் முழுமையாய் புரிந்து கொள்வது சாத்தியமா? – எம். லின்க்ஸ் க்வேலி

(The National என்ற தளத்தில், Can Arabic literature ever be fully understood in English? என்ற தலைப்பில் M Lynx Qualey எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.)

1987ஆம் ஆண்டுக்கு முன் நவீன அரேபிய இலக்கியம் ஆங்கில இலக்கிய உலகில் அறியப்படாத ஒன்றாக இருந்தது. அவ்வாண்டு நாகூப் மாஃபூஸ் நோபல் பரிசு பெற்றபோது மாஃபூஸ் போலவே, ஆங்கில இலக்கியத்தை நேசிப்பவர்களுக்கும் அது ஒரு அதிர்ச்சியான செய்தியாக வந்தது.

தலைசிறந்த அந்த எழுத்தாளரின் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் தகுதி வாய்ந்த மொழிபெயர்ப்பாளர் யாரும் இல்லை என்று அப்போதுதான் கெய்ரோ பிரஸ்ஸில் அமெரிக்கன் யுனிவர்சிட்டி சொல்லியிருந்தது. அப்போது அவர்கள் குழுக்களாய் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர். சில சமயம் நான்கு கல்வியியலாளர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் தம் ஒவ்வொருவரின் மொழிபெயர்ப்பையும் சரி பார்த்துக் கொடுத்துக் கொள்வதுண்டு.

1987ஆம் ஆண்டுக்குப்பின் நவீன அரேபிய இலக்கியத்தின் இருப்பை பதிப்பகத்தினர் உணர்ந்து கொண்டனர். மெல்ல மெல்ல அரேபிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் வர ஆரம்பித்தன. சிறுதுளிகளாய் இருந்தது செப்டம்பர் 2001க்குப்பின் நீர்த்தடம் போலாயிற்று. இப்போது அது ஒரு சிற்றோடை போன்ற நிலையைத் தொட்டிருக்கிறது.

இன்று காலை, ஷுப்பக் பெஸ்டிவல் கலந்துரையாடலில் நாங்கள் ஒரு குழுவினராய், “ஆங்கில மொழியில் அரேபிய இலக்கியத்தின் வளர்ச்சிஎன்ற தலைப்பில் பேசப்போகிறோம். இந்த வளர்ச்சியை எப்படி புரிந்து கொள்வது என்பது குறித்து கருத்து வேற்றுமை இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்இது நன்மையா தீமையா என்று. (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- 8: பச்சை மாமலை போல் மேனி

மித்யா 

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ” நான் வாய் விட்டு உரக்கச் சிரித்தேன். வெளியில் நின்றுகொண்டு இருப்பவர்கள் மூச்சைச் சட்டென்று உள்ளிழுக்கும் ஓசை கேட்டது. ஓரிருவர் பின்வாங்குவது போல் தெரிந்தது.

ஏன் சிரிக்கிறாய்?”

நீ கள்ளம் கபடம் இல்லாதவர் வேண்டும் என்று கேட்கிறாய். அது போல் இந்தப் பூவுலகில் நான் யாரையும் பார்த்ததில்லை. உனக்கு எப்படி கிடைப்பார்கள்?. ஹிமய மலையில்தான் நீ போய் பார்க்க வேண்டும். அங்குதான் ஆசை துறந்த முனிவர்கள் கிடைப்பார்கள். இங்கு அது சாத்தியமில்லை”

எங்களுக்கு முனிவர்கள் வேண்டாம். சாதாரண மனிதர்கள்தான் வேண்டும்”

ஆனால் சாதாரண மனிதர்களுக்கு ஆசை அதிகம்”

ஆசை இருப்பவர்கள்தான் எங்களுக்கு வேண்டும். ஆசை, மகிழ்ச்சி, வீரியம், கோபம், உந்துதல் இவை எல்லாம் எங்களுக்கு ஏற்றவையே. ஆசை இல்லாமல் எதுவும் முன்னகராது. ஏதோ படைக்க வேண்டும் என்ற ஆசை, சாதிக்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையை ஒட்டி வரும் உழைப்பு. அந்த உழைப்பினால் வரும் முன்னேற்றம். இவை எல்லாம் முனிவர்களால் வராது. நாம் முன்னேற வேண்டும் என்றால் சாதனை படைக்கும் உள்ளம் தேவை. அதற்குள் ஓர் ஆசை துளிர்விட வேண்டும். அதனால் நாங்கள் ஆசையை வெறுப்பதில்லை. ஆசையில், சாதிக்க வேண்டும் என்ற வெறியினால் உருவாகும் குரோதம், பகை போன்றவற்றை வெறுக்கிறோம். ஆசை இருந்தும் கள்ளம் கபடம் இல்லாதவர்களைத் தேடுகிறோம்” (more…)