Author: பதாகை

20150404

IMG-20150404-WA0008

ஒளிப்படம்- விக்டர் லிங்கன்

கவியின் கண்- தாய்மை

தாய்மை
– அன்னா ஸ்விர்
 
உயிரை நான் பிரசவித்தேன்..
அது என் குடல்களை விட்டு வெளியேறி
என்னை உயிர்ப்பலி கேட்கிறது-
ஓர் அஸ்தெக் தெய்வத்தைப் போல்.

(more…)

உள்ளிருந்து உளவுபோதல்

சோழகக்கொண்டல் 

என்னிடமிருந்தே
என் தனிமையை மீட்டுத்தரும்படி
நான் கேட்பதற்கு யாருமில்லை (more…)

வண்ணக்கழுத்து பகுதி 8: பயணம் தொடர்கிறது…

வண்ணக்கழுத்து பகுதி 8: பயணம் தொடர்கிறது

”உழவாரக்குருவிகளின் கட்டிடக்கலைத் திறமையை உங்களுக்குத் தெளிவாக விளக்க, முதலில் அதனுடைய குறைபாடுகளைச் சொல்லிவிடுகிறேன். பறக்கும் பூச்சிகளைப் படிப்பதற்கு ஏதுவாக சிறிய அலகு கொண்டவை அவை. அதனுடைய அகலமான வாய், பறக்கும் போது இரையைப் பிடித்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. பூச்சிகளை நோக்கி அது பாயும்போது, வெகு சில பூச்சிகள் மட்டுமே தப்ப முடியும். உழவாரக் குருவி மிகச் சிறியதாக இருப்பதால், அதனால் அதிக எடையைத் தூக்க முடியாது. அதன் கூடு, வைக்கோல், சற்றே பெரிய ஊசியைப் போன்ற தடிமனுள்ள சுள்ளிகளைப் போன்ற இலகுவான பொருட்களால் கட்டப்பட்டிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

“முதன் முறை நான் உழவாரக் குருவியைப் பார்த்தபோது, முடங்கிப் போய் உருக்குலைந்தது போல் இருந்தது. தங்களுடைய கால்கள் மோசமானவை என்று எல்லா உழவாரக் குருவிகளுக்குமே தெரியும். சமநிலைப் படுத்திக்கொள்ளக் கூட அந்தக் கால்கள் போதாது. அதனுடைய உடம்பிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும், மீன்பிடி கொக்கிகள் போன்ற கால்கள், இடங்களைப் பற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை. சின்னச் சிறிய கொக்கிகள் போன்ற அதன் கால் நகங்கள் வளைந்து கொடுக்காதவை. அதனுடைய உடம்புக்கும் பாதங்களுக்கும் இடையே போதுமான நீளத்தில் கால்கள் இல்லை. இதனால், நீண்ட கால்கள் மற்ற பறவைகளுக்குத் தரும் குதிக்கும் திறன் உழவாரக் குருவிகளுக்கு இல்லை. இந்தக் குறைபாடு மற்றொரு சாதகத்தால் அடிபட்டுப் போகிறது. அவற்றால், கற்களால் அமைக்கப்பட்ட வேலிகளிலும், பளிங்கு இறவானங்களிலும், வீடுகளில் பளிங்குக் கல்லில் கூரைக்குக் கீழ் செதுக்கப்பட்ட அலங்காரங்களிலும், மற்ற எந்த பறவையைக் காட்டிலும் ஒட்டிக் கொள்ள முடியும். என் நண்பனான உழவாரக் குருவி, பளபளப்பான சுவர்களில் கூட ஏதோ சொறசொறப்பான மேற்பரப்ப போல தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (more…)

ஆடம்ஸ் – ஜார்ஜ் சாண்டர்ஸ்

என்னால் ஆடம்ஸை எப்போதும் சகித்துக் கொள்ள முடிந்ததே கிடையாது. ஒரு நாள் பார்த்தால் அவன் என் வீட்டு கிச்சனில் நின்றுகொண்டிருக்கிறான், அண்டர்வேர் மட்டும் போட்டுக் கொண்டு. என் குழந்தைகள் இருக்கும் அறையைப் பார்த்து நின்று கொண்டிருக்கிறான்! எனவே, அவன் மண்டையின் பின்பக்கம் ஒரு போடு போட்டேன், அவன் சரிந்து விழுகிறான். எழுந்து நிற்கும்போது, மறுபடியும் ஒரு போடு போடுகிறேன், அவன் மீண்டும் சரிந்து விழுகிறான். மறுபடியும் நீ இப்படி செய்தால், கடவுள் சத்தியமாகச் சொல்கிறேன், எனக்கு என்ன சொல்வதென்றுகூட தெரியவில்லை, ங்கோத்தா என்கிற மாதிரி  நான் அதன்பின் அவனை மாடிப்படிக்கட்டுகளில் உருட்டி விடுகிறேன், வெளியே, முன்வசந்தப்பருவத்தின் சேற்றில் போய் விழுகிறான்.
 
கரேன் திரும்பி வந்ததும் நான் அவளைத் தனியே அழைத்துப் போகிறேன். நான் பேசிய விஷயம் இதுதான்: கதவைப் பூட்டி வை, அவன் வீட்டுக்கு வந்திருக்கும்போது, குழந்தைகள் அறையைவிட்டு வெளியே வரக் கூடாது.

(more…)