Author: பதாகை

கவியின்கண் 7 – “கடுவிசை உருமின்”

– எஸ். சுரேஷ்-

நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மா மழை
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனோ.
– குறுந்தொகை, 158 (more…)

பூனை சொல்லும் கவிதைகள்

Francesco Marciuliano
(தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)

The author had an awesome blog with the excerpts from his book. Please check it out for buying the book.

ஏன் அலறுகிறாய்…

cat-poem-scream1

ஏன் அலறுகிறாய்?
நானென்ன தவறிழைத்தேன்?
ஏன் அழுகிறாய்?
அதை எப்படி நான் சரி செய்வது?
வேறு நிறத்தில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
வேறு அளவில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
வேறு அறையில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
நான் என் அன்பைக் காட்டவே விரும்பினேன்
நன் என் நன்றியை வெளிப்படுத்தவே விரும்பினேன்
நான் உன் போர்வையில் ஒரு செத்த எலியை போடவே விரும்பினேன்
ஆனால் நீ இப்பொழுது அலறுகிறாய்
எனக்கு எப்படி உன்னை நிறுத்துவது என்று தெரியவில்லை

 

அவமானத்தை அழி

cat-poem-shame2

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
அவர்கள் தெரிந்துகொள்ள என்னால் எப்போதும் விடமுடியாது

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
அவர்கள் பார்த்துவிட என்னால் எப்போதும் விடமுடியாது

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
நான் பூனையை விட பயங்கரமானவன்

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
என்னுடைய இருண்ட, இருண்ட ரகசியத்தை ஆழ புதைக்கிறேன்
அவமானத்தை அழி! அவமானத்தை அழி!

அப்பாடி
நான் மூத்திரப்புரையை பயன்படுத்தியது இனி ஒருவருக்கும் தெரியாது

 

உன் மடியில் இருப்பது யார்?

cat-poem-lap2

இந்த வீட்டில் இன்னொரு பூனை இருக்கிறது
நான் பார்த்தேயிராத ஒரு பூனை
வெகு இளமையான ஒரு பூனை
அவள் பெயர் உனக்கு தெரியும் போல
தவறுதலாக என்னை அவள் பெயரிட்டு அழைத்தாய்
அந்த விளக்குக்கு முன்னால்
என் நண்பனான குட்டி திண்டுக்கும் முன்னால்
நான் ஒருபோதும் இவ்வளவு சிறுமைப்பட்டதில்லை
இனி நான் எப்போதும் நேசிக்காமல் போகலாம்.

குரல் – 2

பொழுது நகராத மதிய வேளை
தண்ணீர் குழாயின்மீது காகம்
தூரத்து தெருவில் ஒரு நாய்
தலைக்கு மேலே மின்விசிறி
எதை கேட்டு மலைத்து நிற்கிறது
மதிலின் மீது இருக்கும் பூனை!

மற்றுமொரு குரல் – அதிகாரநந்தி

பூனைகள் மீது எங்களுக்கு யாதொரு வன்மமும் இல்லை

 
பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறேன்,
பூனை என் மடியில் ஏறித் தூங்க ஆரம்பிக்கிறது,
என் வேட்டியை இரு கைகளாலும் பிடித்து உதறுகிறேன்.
 
மேலே பறந்த பூனை, 
பீதியுடன் கண் விழித்து உடம்பைத் திருப்பி, 
கால்களை அகட்டிக் கொண்டு தரை இறங்குகிறது.
 
ஆக்ரோஷமாக என்னைப் பார்த்து, 
“மியாஆவ்வ்வ்” என்று கத்திவிட்டு,
மடியில் ஏறி மறுபடியும் தூங்க ஆரம்பிக்கிறது.
 
பொழுது நகராத மதியவேளை-
 
அணைக்க மறந்துவிட்டுத் தூங்குகிறார்கள்
மத்திய வர்க்க மாமிகள்,
 
சீரியலில் கதறிக் கொண்டிருக்கும் பெண்ணை
உற்றுப் பார்க்கிறது பூனை.

விழுமியங்களின் வீழ்ச்சியும், அதிகாரத்தின் முடிவும்

– அஜய். ஆர்-

தென் அமெரிக்காவை ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து மீட்டு ஒரு கட்டத்தில் சர்வ வல்லமையுடன் இருந்த ( ‘The Liberator’ என்றழைக்கப்பட்ட) சீமோன் பொலிவர் (Simon Bolivar), தன் தூக்கம், உணவு, பாதுகாப்பு குறித்து அசட்டையாக இருந்ததை,

“… his disinterest was not lack of awareness or fatalism, but rather the melancholic certainty that he would die in his bed, poor and naked and without the consolation of public gratitude.”

என்று ‘மார்கேஸ்’ (Gabriel Garcia Marquez) தன்னுடைய ‘The General in His Labyrinth’ நாவலில் குறிப்பிடுகிறார். நாவலின் முடிவில் கிட்டத்தட்ட அப்படியே நடக்கவும் செய்கிறது.

வரலாற்றிலும் சர்வாதிகாரிகளின் முடிவு ஒன்று பதவியில் இருக்கும்போது கொல்லப்படுவதாகவோ அல்லது பதவியிலிருந்து அகற்றப்பட்டு அல்லது புகழின் வெளிச்சத்திலிருந்து விலக்கப்பட்டு, தங்கள் இறுதி காலத்தை அநாமதேயமாகக் கழிப்பதாகவோ உள்ளது. வெகு சிலரே இறுதிவரை பதவியையும், அதிகாரத்தையும் தம்மிடம் தக்க வைத்திருந்துள்ளனர். (more…)