Author: பதாகை

நினைவின் பாழ்நிலம்- இஸ்மாயில் கதாரேவின் நாவலை முன்வைத்து

அஜய் ஆர்

thegeneralofthedeadarmy-title

இலியட்டின் இறுதிப் பகுதியில், ட்ராயின் மன்னர் ப்ரயம் (Priam), தன் மகன் ஹெக்டரின் உடலை மீட்க அவனைப் போரில் கொன்ற அக்கிலீஸிடமே யாசகம் கேட்க வருகிறார். பெரும் மீட்புப் பொருளைக் கொடுத்து ஹெக்டரின் உடலை மீட்டு 9 நாட்கள் துக்கம் அனுசரித்தபின் 10வது நாள்,

At last,
when young Dawn with her rose-red fingers shone once more,
the people massed around illustrious Hector’s pyre…
And once they’d gathered, crowding the meeting grounds,
they first put out the fires with glistening wine,
wherever the flames still burned in all their fury.
Then they collected the white bones of Hector –
all his brothers, his friends-in-arms, mourning,
and warm tears came streaming down their cheeks.
They placed the bones they found in a golden chest,
shrouding them round and round in soft purple cloths.
They quickly lowered the chest in a deep, hollow grave
and over it piled a cope of huge stones closely set,
then hastily heaped a barrow, posted lookouts all around
for fear the Achaean combat troops would launch their attack
before the time agreed. And once they’d heaped the mound
they turned back home to Troy, and gathering once again
they shared a splendid funeral in Hector’s honor,
held in the house of Priam, kind by will of Zeus.

And so the Trojans buried Hector, breaker of horses.

என்ற உணர்ச்சிகர நிகழ்வோடு இலியட் முடிகிறது.

ஹெக்டர் இளவரசன் என்பதால் இத்தகைய பிரமாண்டமான இறுதிச் சடங்கு நடந்தது என்றோ ஹோமர் ஒரு உச்ச நிகழ்வோடு தன் காவியத்தை முடிக்க இப்படி விவரித்தார் என்றோ சொல்ல முடியுமா? (more…)

பிச்சைக்காரனின் வரவு

 – ஆதவன் கிருஷ்ணா – 

 

எப்பொழுதும் போல
விடியவில்லை நேற்றைய
காலை
காகங்கள் கும்பலாக
கரைந்து
சூழ
வெட்டு ஓடுகளினின்று
ஊசிகளாய் இறங்கிய
மங்கலான வெளிச்சம்
துடைப்பமிடா அலைந்தோடும்
புள்ளித் துகள்களுள்
படரத் துடித்தன
அழைப்பு மணியின்
பித்தானுக்கு சுவர்க்கோழி
பதில் சொன்னது
இராசி பலன் சொல்லிகள்
தேவையற்றுப் போனார்கள்
நீண்டு வந்த இரயில்
வண்டியின் குரல் அடங்கிப்போயிருக்க
காலையில் அபூர்வமாய்
வரவுற்ற
பிச்சைக்காரன் மட்டும்
நிரந்தரமாக வீட்டுக்குள் தங்கிவிட்டான்
சிறுவர்கள் கூட்டமாக முற்றத்திலிட்ட கோலத்தின் மேல்
பீய்ச்சி அடித்த
பெருநீரின் நாற்றம்
அகாலத்தின் கனவொன்றில்
வந்து போனது
என் நம்பிக்கை சரிதான் அங்கு
அவள் கோலமிழந்த காட்சியில்
ஒரு நடிகையைப் போலவே
இல்லை வழக்கம் போல்
இவன் விரல்கள் சூப்பிக்கொண்டு
தவழ்ந்துகொண்டிருந்தான்
புனித சிலுவை அணிந்து
கண்ணாடிப் பெட்டிக்குள் வாழும்
என் கண்களில் இலை முனை வழி சொட்டும் நீரென விழ ஆரம்பித்த
நேரத்தில்
பிச்சைக்காரன் கையளித்து
என்னை
அழைத்துச் செல்கிறான்
மீள இயலா கனவொன்றிற்கு

௦௦௦

 

ஒளிப்பட உதவி – dreamstime

இரு குறுங்கதைகள்- லிடியா டேவிஸ்

தலை, இதயம்

இதயம் அழுகிறது.
இதயத்துக்கு உதவ முயற்சி செய்கிறது தலை.
உள்ளதைச் சொல்கிறது தலை, இதயத்திடம் மீண்டும்:
நேசிப்பவர்களை நீ இழக்கவே செய்வாய். அனைவரும் போவார்கள். இந்தப் புவியும்தான் போகும், ஒரு நாள்.
இதயம் ஆசுவாசமடைகிறது, இதன்பின்.
ஆனால் தலையின் சொற்கள் இதயத்தின் செவிகளில் நீண்ட காலம் நீடிப்பதில்லை.
இதற்கெல்லாம் இதயம் ரொம்பப் புதுசு.
அவர்கள் எனக்கு திரும்பவும் வேண்டும், என்கிறது இதயம்.
இதயத்துக்கு இருப்பதெல்லாம் தலைதான்.
உதவி செய், தலையே. இதயத்துக்கு உதவி செய்.

அவளது கடந்த காலத்திலிருந்து வந்தவன்

என் அப்பா அல்லாத ஒருவனுடன் அம்மா சல்லாபித்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன், அவளது கடந்த காலத்திலிருந்து வந்திருக்கிறான் அவன். இந்த “ப்ரான்ஸ்” உடன் அம்மா முறையற்ற உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லிக் கொள்கிறேன்! “ப்ரான்ஸ்” ஒரு ஐரோப்பியன். அப்பா இல்லாதபோது இவனை அம்மா முறையற்ற வகையில் சந்திக்கக்கூடாது என்று சொல்கிறேன்! ஆனால் நான் பழைய யதார்த்தத்தைப் புதிய யதார்த்தத்துடன் குழப்பிக் கொள்கிறேன்: அப்பா வீடு திரும்ப மாட்டார். அவர் இனி வெர்னான் ஹாலில்தான் இருப்பார். அம்மாவைச் சொல்வதானால், அவள் வயது தொண்ணூற்று-நான்கு. தொண்ணூற்று-நான்கு வயது பெண்ணுக்கு என்ன ஒரு முறையற்ற உறவு இருந்துவிடப் போகிறது? ஆனாலும் என் குழப்பம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்: அவளது உடலுக்கு வயதாகிவிட்டாலும், துரோகம் செய்வதற்கான அவளது ஆற்றல் இன்னும் இளமைத்துடிப்புடன் புதுக் கருக்கு கலையாமல் இருக்கிறது.

நன்றி – Lannon.org 

ஒளிப்பட உதவி – keithcroft.org

நீர்த்தேக்கம்  

காஸ்மிக் தூசி

பேஷ்வாக்கள்
நிறுவிய
மாபெரும்
நீர்த்தேக்கத்தில்
இல்லவே இல்லை
துளி நீர் கூட

வேறெதுவும்
இல்லை
நூற்றாண்டு கால
வண்டல்
தவிர.

000

அருண் கொலாட்கரின் The Reservoir என்ற கவிதை மொழிபெயர்ப்பு

அமேஸான் காடுகளிலிருந்து- 5: இந்தியன்

 மித்யா

“ஹலோ மிஸ்டர் கிறிஸ்டோ” என்றாள் அந்த தேவதை.

அவள் வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தாள். திருமணத்திற்கு கிறிஸ்துவர்கள் அணியும் கவுன் போல் இருந்தது. இவ்வளவு பெரிய கவுனை இந்தப் பிரதேசத்தில் அவள் அணிந்திருந்தது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. இங்கு எப்பொழுதும் புழுக்கமாக இருக்கும். இவளுக்கு இந்த கவுனை அணிந்தால் வெந்து போகாதா? அவள் ஒரு வெள்ளை தொப்பி அணிந்திருந்தாள். அதன் ஓரம் லேஸ் வைத்து தைக்கப்பட்டிருந்தது. லேசில் உள்ள சின்ன சின்ன ஓட்டை வழியாக சூரிய கிரணங்கள் அவள் முகம் மேல் திட்டு திட்டாக படிந்திருந்தன. தொப்பி அவள் முகத்தை ஓரளவுக்கு மறைக்க, லேஸ் வழியாக விழுந்த வெளிச்சம் அவள் முகத்தின் பிரகாசத்தை அதிகரித்தது. அவள் முகத்தை பார்த்தவுடன் அவள் மேல் கிறிஸ்டோ காதல் கொண்டான்.

“மிஸ்டர் கிறிஸ்டோ” (more…)