Author: பதாகை

ஞாபகம்

ரா. கிரிதரன்

soccer memoirs

எனது எதிர்வீட்டில் இருக்கும் தொண்ணூறு வயது தாத்தா கால்பந்து போட்டிக்காக இன்று பளபளா இங்கிலாந்து கொடியைக் கட்டிக்கொண்டிருந்தார். அவரது செய்கை எனக்குக்கொஞ்சமும் ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை. மழை பெய்தபின் பூக்களுக்குத் தண்ணீர் விடுவார், என் வீட்டின் தரையைச் சரிசெய்து முடித்த அன்று சாம்பிள்களை எடுத்து வந்தவர். ராணுவ அணிவரிசையைப் பார்ப்பது போல மெல்ல இடம் வலம் நடந்து கொடியைக் கோணலாகாமல் சுவரில் அடித்துமுடித்தார்.

`நேற்று இத்தாலி தோற்றுப்போச்சு, இருந்த ஒரே சான்ஸும் போச்சே பார்த்தீங்களா?` , எனச் சொன்னேன்.

அவரது பதில் தான் மிக முக்கியமானது. என்ன சொல்கிறார் என ஒரு முறை கேட்டால் தான் நகர்வதா, பேச்சைத் தொடர்வதா என முடிவு செய்வேன்.

`ஆர்.ஏ.எஃப் ப்ளைட்டுகள் வந்தபுதிதில் ஒரு பழக்கம் இருந்தது. நான் சொல்வது ஐம்பதுகளில். நான் அப்போதுதான் லிமரிக்கிலிருந்து லண்டனுக்கு வந்திருந்தேன். சைனா மார்க்கெட்டில் வாங்கிய இனிப்பை ருசித்தபடிப் பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்ப்பது போல லண்டன் ப்ரிட்ஜ், லீடன்ஹால் மார்க்கெட்டை சுத்தி சுத்தி வருவேன். அப்போதெல்லாம் இந்த மாதிரி ஒரு கொடி கட்டின வண்டிகள் ரோந்து வரும். என்னிக்காவது நேரம் இருந்தா காட்டுறேன்.`

நான் கால்பந்து பற்றிப் பேசியது எனக்கே மறக்குமளவு எங்கேயோ சென்று நிறுத்திவிடுவார். இதுதான் வில்சன் தாத்தா. (more…)

வாசவதத்தை – 3

– ஸ்ரீதர் நாராயணன் –

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்

சூன்யத்தின் இசை

பெருமுற்றம் திறக்கப்பட்டு பொதுமக்கள் எல்லாரும் உள்ளே வர ஆர்ம்பித்திருக்கிறார்கள். கௌமுதி உற்சவம் நடக்கும்போது ராஜகிருகம் முழுவதும் மக்கள் கூட்டம் வந்து போய்க்கொண்டே இருக்கும்.

‘அமாத்யர் வருவதாக எதிர்பார்த்திருந்ந்தோம்’

வேகசர்மனை வரவேற்றபடிக்கு விஷ்ணுகுப்தர் சொல்கிறார். அதிகாரமையத்தின் ஆணிவேர் அமைச்சகத்தின் தலைமையிடத்தில்தான் இருக்கிறது என்பது அவருடைய பாடங்களில் ஒன்று.

கனமான கருத்த சரீரத்தின் மேல் போர்த்திய பட்டு சீலையுடனும், முத்துச்சரங்கள் தைத்த சரிகை பாகை பறைசாற்றும் அதிகாரதோரணையோடும், சபாமண்டபத்தில் நுழைந்த வேகசர்மன், விஷ்ணுகுப்தரின் முகமனுக்கு சிரந்தாழ்த்தி பதில் முகமன் செய்துவிட்டு, சூரசேன வம்சத்தின் பராக்கிரமங்களை எடுத்துரைக்கும் வாழ்த்துகளைக் கூறி மகதத்தின் அரசவைக்கு வந்தனம் கூறுகிறான். யவனர்களை புறம்காட்டிய பர்வதவர்த்தனின் புகழ் பெருமதிப்புடன் எட்டுதிக்கும் பரவியிருந்தது. அவன் பின்னால் அணிவகுத்து நின்ற தூதுக்குழுவின் முகப்பில் பாசரின் வர்ணனைகள் மெய்யாகி வந்து நின்றது போல் இருக்கிறாள் வாசவதத்தை. அதுவரை அபிநயத்தில் லயித்திருந்த சபை நடுவே, புத்துருக் கொண்டு காப்பியத்திலிருந்து கிளம்பி வந்தது போல் நின்றிருக்கிறாள். (more…)

மானுடம் குடியமர்ந்த கோள் : திரிகளைத் தொடர்தல்-2

-சிகந்தர்வாசி-

mail-exchanges

முதல்நிலை தகவலறிக்கைகள்
முதல்நிலை தகவலறிக்கைகள் – 2
மானுடம் குடியமர்ந்த கோள் – விபரீத துவக்கங்கள்
திரிகளைத் தொடர்தல்

திரிகளைத் தொடர்தல்-2

இந்த உரையாடலுடன் சில கடிதங்களின் மங்கிய பிரிண்ட் அவுட்களும் எனக்குக் கிடைத்தன. இவை வரலாற்றின் கதவுகளைச் சற்றே திறப்பதாக இருந்தன. மெல்ல மெல்ல என் மக்களின் சரித்திரம் என்னை தன்னுள் இழுத்துக் கொள்கிறது.

To: All Employees of SpaceXploration Corp
From: Mark Podolski, CEO

டீம்,

நாம் சரித்திரம் படைப்போம் என்று உறுதியளித்தேன். நாம் செய்யப்போவது மனித வரலாற்றில் ஈடு இணையற்ற சாதனையாகக் கொண்டாடப்படும். அதகான முதல் அடியை எடுத்து வைக்கப் போகிறோம்.

செவ்வாய் கோள் நோக்கி நாம் சென்ற இரு முறை திட்டமிட்ட பயணங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அவற்றுக்கான காரணங்கள், அவற்றின் நோக்கங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த பயணங்களின் பலன்களை வெளிப்படுத்தும் வேளை வந்துவிட்டது. (more…)

காணவில்லை

எஸ். சுரேஷ்

blank-poetry

 

“ஹ்ம்ம். இந்தக் கவிதையில் மேக்கப் இல்லை
அனாவசியமான வார்த்தைகள் இல்லை
தேவையற்ற அணிகலன்கள் இல்லை
சொல்லாமல் விடப்பட்ட விஷயங்கள் பல இருக்கு
நம் சிந்தனை விரிய இடம் கொடுக்குது
கவிதைக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய
மௌனம் இதுக்குள்ள இருக்கு,” என்று கூறிவிட்டு
ஒரு நொடி மெளனமாக இருந்தபின்
“கனத்த மௌனம் இருக்கு
மொழியின் எல்லையைத் தாண்டுது
கவிதை இலக்கணத்தை மீறுது
பின்நவீனத்வ கோட்பாடுகளைக் கேள்வி கேக்குது
மொழியோட இசையை நிராகரிச்சி
வார்த்தைகளோட ஒலியை நிராகரிச்சி
வார்த்தைகளுக்கு இடையே இருக்கும்
மௌனம் வழியா நேரடியாப் பேசுது”-

“கவிதை” என்று தலைப்பு மட்டும் எழுதி
நான் கொடுத்த வெற்றுக் காகிதத்தை
இன்னொரு முறை உற்று நோக்கிவிட்டு
பத்திரிகையாசிரியர் என்னிடம் சொன்னார்,
“நம் எல்லா கோட்பாடுகளுக்கும் உட்பட்டிருக்கும்
இந்த கவிதைய அடுத்த வாரம் போட்டுடலாமா?”

கவியின்கண் 15 – இறுதி கோஷம்

– எஸ். சுரேஷ் –

The last war slogan

“கின்ஸ்பர்க்”
– ஜூலியோ வைனோகிராட்

குற்றம் சொல்வதற்கில்லை. ஹௌலும் கட்டிஷும் எழுதிய எவரும்
மிச்சமிருக்கும் தங்கள் வாழ்நாளெல்லாம்,
எத்தகைய தவறும் செய்யும் உரிமை ஈட்டியவர்கள்.
என் குறை, இந்தத் தவற்றை அவரோடு நான் செய்திருக்க வேண்டாம் என்பதுதான்.
இது நடந்தது வியட்நாம் போரின்போது
அவர் ஒரு மாபெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார், வாசித்தபடி
வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கில் இருந்தார்,
அங்கிருந்து செல்ல யாருக்கும் விருப்பமில்லை, (more…)