விமர்சனம்

‘கவிதை மொழியைப் பெருக்குகிறது’

றியாஸ் குரானா

பதாகை –  கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் அனைத்தையும் கேட்டுவிட்டது போல் இருக்கிறது. இதுவரை இதைப் பேசியிருக்கிறோமா பாருங்கள் – கதை, கவிதை, கட்டுரை என்று எழுத்துப்பணியே ஒரு விளிம்புக்குப் போய்விட்டச் செயல்பாடாகத் தெரிகிறது, எங்கும் எத்தகைய தாக்கமும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. இது தவிர, கவிதையே மொழியைப் புதுப்பிக்கிறது என்று சொல்கிறார்கள். உண்மையில் இன்று மொழியின், எழுத்தின் இடம்தான் என்ன?

றியாஸ் குரானா – எழுத்துப் பணி என்பது ஒருபோதும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது என்றே கருதுகிறேன். நாம் சிந்திப்பதே மொழியால்தான், ஆக மொழியாலான எந்த நிகழ்வுகளும் விளிம்பு நிலைக்குச் சென்றுவிடாது. அப்படிச் செல்லுமானால், நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டோம் என்றுதான் அர்த்தம். ஆனால் குறித்த வகையான எழுத்து விளிம்பு நிலைக்கு போக வாய்ப்புள்ளது. விளிம்பு, என்றும் மையம் என்றும் நாம் பேசவும், அதன் அரசியல் உள்ளீட்டை முதன்மைப்படுத்தவும் பின்நவீன கருத்து நிலைகளே நமக்கு உதவின. இந்த மையம் விளிம்பு என்பது எதிர் எதிர் நிலைகளில் வைத்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்றும், விளிம்பின் பக்கம் சாய்வாக கரிசனம் கொள்ள வேண்டும் என்றும் அது தூண்டியது. ஆனால் எழுத்தைப் பொறுத்தவரை அப்படி இல்லை. அது ஒரு போதும் விளிம்பு நிலைச் செயற்பாடு அல்ல. (more…)

கவியின் கண் – “மரணத்தைப் பற்றி, மிகையின்றி”

 எஸ். சுரேஷ் –

மரணத்தைப் பற்றி, மிகையின்றி

நகைச்சுவை புரியாது,
நட்சத்திரத்தைக் கண்டெடுக்கத் தெரியாது,
பாலம் கட்ட முடியாது.
வலை பின்னவோ, சுரங்கம் வெட்டவோ,
வயல் உழவோ, கப்பல் கட்டவோ,
கேக் ஒன்றை பேக் செய்யவோ தெரியாது.

நாளைக்கான நம் திட்டத்தில்
அது முடிவாய்ச் சொல்வதே சட்டம்,
ஆனால் இதைப் பேசி ஒரு பயனுமில்லை

தன் வேலை நிமித்தமாய்
ஒரு காரியத்தையும் செய்து கொள்ளத் தெரியாது:
இடுகுழி வெட்டவோ,
கல்லறைப் பெட்டி செய்யவோ,
தனக்கப்புறம் துடைத்துக் கொடுக்கவோ,
அதனால் முடியாது.

கொலைத்தொழில் ஒன்றே நினைப்பாய் இருந்தாலும்
தன் வேலையை உருப்படியாய்ச் செய்வதில்லை,
நாம் ஒவ்வொருத்தரும்தான் அதன் முதல் பலி போல்
ஒரு ஒழுங்குமுறை கிடையாது, ஒரு திறமை இல்லை

அதற்கும் வெற்றிகள் உண்டே,
ஆனால் அதன் எண்ணற்ற தோல்விகளைப் பாருங்கள்,
குறி தவறிய அடிகள்
திரும்பத் திரும்ப எத்தனை முயற்சிகள்! (more…)

தமிழ் கவிதை வடிவம்

றியாஸ் குரானா

பதாகை – தமிழில் நீண்ட கவிதைகளைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கதை சொல்லும் கவிதைகளைப் பார்க்க முடிவதில்லை. ஒரு காலத்தில் எல்லா கதைகளும் செய்யுள் வடிவில்தான் வந்திருக்கின்றன, இப்போது அப்படி ஒரு கவிதை எழுதப்பட வாய்ப்பே இல்லை போலிருக்கிறது. ஆங்கிலத்தில்கூட விக்ரம் சேத் மரபார்ந்த sonnet வடிவ கவிதைகளைக் கொண்டு கதை சொன்னார், சில ஆண்டுகளுக்கு முன்பு. இனி கதைகள் கவிதை வடிவில் சொல்லப்படும் சாத்தியமிருக்கிறதா? தற்போதைய தமிழ் அழகியலில் இதற்கும் இடமுண்டா?

றியாஸ் குரானா –ஒற்றைக் கேள்விபோல தோற்றமளிக்கும் பல கேள்விகளின் கூட்டிணைவான கேள்வியே இது. ஆயினும் இந்தக் கேள்வி கடந்து வந்த தமிழின் குறித்த ஒரு இலக்கிய மனநிலையை கவனப்படுத்துகிறது. வரலாற்றின் ஏதோவொரு கட்டத்தில் தமிழ் இலக்கியம் தன்னை இயக்கத்தில் வைத்திருந்த கவிதை மனம் என்ற ஒரு முறைமையை பற்றி, அதைக் கடந்து வெகுதாரம் கடந்துவந்த நிலையில் சிந்தித்துப்பார்க்க தூண்டுகிறது. இப்படியான தூண்டுதல்களைத் தரும் கேள்விகளை உருவாக்கி அதற்கு பதில் சொல்ல முயற்சிக்காது போனால், நமது கவிதையை எப்படி வழிநடாத்திச் செல்லுவது என்ற சிக்கலில் விழுந்துவிட வாய்ப்புண்டு. கவிதை குறித்து விவாதிக்க வேண்டிய தேவையை இந்தக் கேள்வி உருவாக்கிவிடுகிறது. இந்தக் கேள்வி தனிப்பட்ட ஒருவரின் தற்செயலான ஒரு கேள்வி என்று எடுத்துக்கொள்ளும் நிலையைக் கடந்திருக்கிறது. அனேகமாக இன்றுள்ள அனைவரும் பெருகியிருக்கும் நமது கவிதைகளிடத்திலிருந்து தப்பிக்கவே விருமபுகின்றனர். அவ்வளவு சலிப்பை நமது இன்றைய நவீன கவிதைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. (more…)

கல்லிடைப் பிறந்து கடலிடைக் கலந்து உயிரன உலாயதன்றே!

ரா கிரிதரன்

கடந்த வாரம் உணவு இடைவேளை நடைக்காக வழக்கமான தேம்ஸ் நதிக்கரையைத் தவிர்த்து கூழாங்கற்கள் பாவித்த சிறுதெருக்கள் வழியாக நடந்துகொண்டிருந்தேன். நடைபாதை ஓரத்தில் வயதான இரு தம்பதியினர் தொலைநோக்கி வழியாக சற்று தொலைவில் தெரிந்த டேட் கலைக்கூடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து செல்லும்வரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன். தொலைநோக்கி வழியாகப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பார்வையைப் பகிர்ந்து சிரிப்பதுமாய் இருந்தனர். கடந்து செல்லும்போது அவர்களில் மூத்தவராகத் தெரிந்த பாட்டி `ஹாங்` என்று தேக்கிவைத்த சத்து எல்லாத்தையும் வெளிப்படுத்தினார். இருவரும் ஆரவாரமாய்க் கட்டிப்பிடித்துக்கொண்டனர். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. யாருமே இல்லாத சாலையில் நின்றபடி அப்படி என்ன யுரேக்கா கண்டுபிடிப்பு எனப்பிடிபடாமல் கேட்டேவிட்டேன்.

`சிட்டி ஃபால்கன் இஸ் ஃபீடிங் தி பேபிஸ்`, என்றார். வல்லூறு ஊட்டிவிடுவதில் என்ன ஆச்சரியம்?

`நகரத்தில் வல்லூறைப் பார்ப்பது கடினம். அப்படியே பார்த்தாலும் அவை கட்டிடங்களுக்கு உயரே தங்கள் குஞ்சுகளைக் காப்பாற்றாது. தேம்ஸ் நதியைச் சுற்றியிருக்கும் பல தீவுகளிலுள்ள மரங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கும். நான் நாற்பது ஆண்டுகளாகப் பார்த்துவருகிறேன். இப்போது டேட் மாடியில் குஞ்சுகளோடு வருகிறதென்றால் என்ன அர்த்தம்? ` (more…)

தொடரும் பன்னிரண்டாண்டுகள் – Twelve Years a Slave, திரைக்கு அப்பால்

பாஸ்டன் பாலா

“பன்னிரெண்டு ஆண்டு அடிமை” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இன்றும் மனதைப் பிசைகிறது.

கதாநாயகன் சாலமனின் கண்காணிப்பாளராக டிபீட்ஸ் (Tibeats) இருக்கிறான். சாலமனுக்கும் டிபீட்ஸுக்கும் பொதுவான மேற்பார்வையாளராக இன்னொருவர் உண்டு. சாலமனுக்கு வயது நாற்பதுகளில் இருக்கலாம். டிபீட்ஸ்க்கு இருபது கூட ஆகியிருக்காது. சாலமன் கருப்பர். டிபீட்ஸ் வெள்ளை. சிரத்தையாக பல மணி நேரம் வெயிலில் உழைத்து சாலமன் செய்து முடித்த மரவேலையை சின்னாபின்னமாக்கி விடுகிறான் டிபீட்ஸ். அந்த ஆத்திரத்தில் தன்னுடைய அதிகாரியை நோக்கி கை நீட்டி விடுகிறார் சாலமன்.

டிபீட்ஸிற்கு ஆத்திரம் பொங்குகிறது. ‘கருப்பு நீக்ரோ நாய்! எப்படி எதிர்த்து பேசுவாய்!’ என கருவிக் கொண்டு, நாலைந்து பேரோடு திரும்பி வருகிறான். சாலமனை கழுவில் ஏற்றுகிறான். அதைப் பார்த்த சாலமனின் மேற்பாற்வையாளர் உடனே விரைந்தேறி வந்து, தன்னுடைய முதலாளியின் சொத்து பறிபோகாமல் இருப்பதற்காக சாலமனின் உயிரை மீட்கிறான்.

அதாவது கழுத்தில் சுருக்கு நெருக்குகிறது. கால்களோ மண் தரையில் உழலுகிறது. பாதம் தரையில் படாமல் விந்தி விந்தித் தரையைத் தொடுகிறார் சாலமன். சாலமனின் தாம்புக்கயிறை அவிழ்ப்பதற்கு, மேற்பார்வையாளனுக்கு உரிமையில்லை. சாலமனின் கழுத்தில் தொங்கும் தூக்குக் கயிறை நீக்குவதற்கு முதலாளி வர வேண்டும். அது வரை குற்றுயிராய் இருக்கும் சாலமன் தன்னுடைய மூச்சைத் தக்கவைத்துக் கொள்ள குதியங்காலில் நின்று எட்டு மணி நேரம் போராட வேண்டும். (more…)